Monday 28 January 2013

தெரிந்ததும் தெரியாததும் -2

ஹென்றி ஃபோர்ட் 


நல்ல வேலை, சொந்த வீடு அப்புறம் ஒரு கார் இது சராசரி மக்களோட அதிகபட்ச கனவு. கார்னு சொன்னதும் உடனடியா நினைவுக்கு வர்ற பேரு ஹென்றி ஃபோர்டு. அமெரிக்காவுல கார் உற்பத்தியில மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி, தன்னோட பெயரிலயே கார்களை உலகுக்குத் தந்தவரு. போக்குவரத்து துறையில பெரும் புரட்சியை உருவாக்கி, பெரும் தொழிலதிபரா வளர்ந்தவரு ஹென்றி ஃபோர்டு. 

அமெரிக்காவுல மெக்சிகன் மாகாணத்துல நல்ல வசதியான குடும்பத்தில ஹென்றி ஃபோர்ட் 1863 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தாரு. ஆறு பிள்ளைகளில் இவருதான் மூத்தவரு. சிறுவனா இருந்தப்போ, தங்களோட சொந்த  பண்ணையில வேலை செஞ்சிட்டிருந்தாரு. ஆனா.. அந்த வேலை அவருக்கு சலிப்பை தந்துச்சு. தன்னோட 16 வது வயசுல ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரத்துல இருக்கற ஒரு கனரக தொழிற்சாலையில வேலைக்குச் சேர்ந்தாரு. மூணு வருஷம் கடுமையா உழைச்ச அவரு, திரும்பவும் மெக்சிகனுக்கு திரும்பிட்டாரு. அந்தக் காலத்தில் புழக்கத்தில இருந்த நீராவி இயந்திரங்களின் மேல அவரோட கவனம் திரும்பிச்சு. அந்த இயந்திரங்களை இயக்கறதிலயும், அதை கழற்றி ரிப்பேர் பாக்கறதிலயும் ஆர்வமா இருந்தாரு. பின்னாடி, பண்ணை வேலைகளுக்கு பயன்படற மாதிரி எரிவாயுல இயங்கக் கூடிய சில இயந்திரங்களை அவரே உருவாக்கினாரு. 

அவருக்கு முப்பது வயசா இருக்கறப்போ.. சிக்காக்கோவுல நடந்த ஒரு இயந்திர கண்காட்சிக்குப் போனாரு. அங்க பெட்ரோல்ல இயங்கக் கூடிய தண்ணீர் பம்ப் ஒண்ணை காட்சிக்கு வெச்சிருந்தாங்க. அதைப் பாத்ததும் அவருக்கு ஒரு யோசனை. இதை ஏன் ஒரு வண்டில பொருத்தி பாக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதை செயல்படுத்தியும் பாக்க ஆரம்பிச்சார். அடுத்த ரெண்டு ஆண்டுகள் கடுமையா உழைச்ச ஃபோர்டு, 1896 ஆம் ஆண்டு மே மாசம் பழைய உலோகங்களையும், உதிரி பாகங்களையும் கொண்டு தனது வாகனத்தை வடிவமைச்சாரு. பாக்கறதுக்கு சைக்கிள் மாதிரி, நாலு சக்கரங்களும் ஒரு இருக்கையும் கொண்டதா அந்த வாகனம் இருந்திச்சு. பிரேக் இல்லாத அந்த வண்டியை பின்னோக்கியும் ஓட்ட முடியாது. குவாட்ரிசைக்கிள் (னிuணீபீக்ஷீவீநீஹ்நீறீமீ) னு பேர் வெச்சாரு. வெற்றிகரமா அந்த வாகனத்தை சாலையில ஓட்டிப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாரு. பல வருஷ கனவு நனவான அந்த தருணத்தில அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால விவரிக்க முடியாது. 

அப்புறம், ஃபோர்டு, 1903 ஆம் ஆண்டு மெச்சிகன்ல ஃபோர்டு மோட்டார் கம்பெனியை(திஷீக்ஷீபீ விஷீtஷீக்ஷீ சிஷீனீஜீணீஸீஹ்) தொடங்கி, மாடல் டி (னீஷீபீமீறீ t)ங்கற காரை உருவாக்கினாரு. செல்வந்தர்கள் மட்டுமில்லாம, சாமானிய மக்களும் கார்களை பயன்படுத்தணும்னு அவரு விரும்பினாரு. அதனால, குறைஞ்ச செலவுல கார்களை உருவாக்கினாரு. அவர் உருவாக்கின மாடல் டி காரோட அப்போதைய விலை வெறும் 500 டாலர்தான். இப்போதைய நவீன கார்களுக்கு முன்னோடியா இருக்கற அந்த மாடல் டி காரை எல்லோரும் போட்டி போட்டு வாங்கினாங்க. பதினெட்டு வருஷத்தில 15 மில்லியன் கார்களை வித்து ஃபோர்டு நிறுவனம் சாதனை படைச்சுது. 

உலகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரா உயர்ந்த அவரோட வளர்ச்சிக்கு அவரோட தயாரிப்புகள் மட்டுமில்ல, தன்னோட நிறுவனத்தில வேலை பாத்த ஊழியர்களை அவர் நடத்தின விதமும் காரணமா இருந்திச்சு.  


தன்னோட ஊழியர்கள் நலனை மதிச்சதால, ஊதியத்தை உயர்த்தி வேலை நேரத்தை குறைச்சாரு. அதுக்கு முன்னாடி, 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம் தொழிலாளிகளுக்கு குடுத்திட்டிருந்தாங்க.  ஃபோர்டு அந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலரா உயத்தி, வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைச்சு 8 மணிநேர வேலையாக்கினாரு. சக தொழிலதிபர்கள் அவரை கிண்டல் செஞ்சப்போ அவர் அதையெல்லாம் கண்டுக்கலை. 

அதுமட்டுமில்லாம,'டிசன் இன்ஸ்டட்டியூட்' என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன்னோட சொத்துல பெரும்பங்கை செலவழிச்சாரு. 1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக அவரோட மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்டு நிறுவனத்தோட தலைமை பொறுப்பை ஏத்துக்கிட்டாரு. 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஃபோர்டு தன்னோட 84 வயசுல காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்' எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுட்டுப் போனாரு. 


Monday 21 January 2013

அட்டைக்கத்தி ஹீரோக்கள்




ஜாகிங் போறதுக்காக வழக்கம் போல இன்னிக்கு அதிகாலைல கிரவுண்டுக்குப் போனேன். ஆள் நடமாட்டம் இல்லாம வெறிச்சோடி கிடக்கற அந்த கிரவுண்டில், என்னிக்கும் இல்லாத அதிசயமா நாலஞ்சு பேர், ஏதோ எக்சர்சைஸ் பண்ணிட்டிருந்தாங்க.. நான் கிரவுண்ட சுத்தி மெல்ல ஓட ஆரம்பிச்சேன். மெல்ல இருட்டு விலக ஆரம்பிச்சதும்தான் கவனிச்சேன்.. எங்க தெரு பசங்க அவங்க. காலைல ஒம்போது மணிக்கு முன்னாடி எழுந்ததா சரித்திரமே கிடையாது. வேலை வெட்டிக்குப் போற பழக்கமும் கிடையாது.. கோயில் மாடு மாதிரி ஊரை சுத்திட்டு, தினசரி வீட்ல அர்ச்சனை வாங்கிக் கட்டிக்கறது அவங்களோட வழக்கம்.

 ஆச்சரியமாக கிரவுண்டுக்கு வந்திருக்காங்களேன்னு கிட்டக்க போய் பாத்தா, ஜெட்லீ, புரூஸ் லீ படங்கள்ல குங்பூ சண்டை போடும் போது கத்துவாங்களே.. அதுமாதிரி விநோதமா கத்திக்கிட்டு.. காத்துல கை, காலை தான்தோன்றித்தனமா வீசிட்டிருந்தாங்க.. ஆர்வம் தாங்காம.. ஒருத்தனை ஓரங்கட்டி பேச்சுக்குடுத்தேன். "கராத்தே பிராக்டிஸ் பண்றோம்ணா.." என்றான். 

அட்டைக் கத்தி படத்துல.. எதிர்கோஷ்டிகிட்ட ஹீரோ வம்பிழுத்து அடிவாங்கிக்கிட்டு, நேரா கராத்தே கிளாஸ்ல வந்து விழுவாரு. அந்த சீன், சம்பந்தமில்லாம அந்த நேரத்துல எனக்கு நினைவுக்கு வந்து தொலைச்சது.. பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கிட்டு நகர்ந்துட்டேன். 

*****

கடைசி ஆசை

போருக்கு போன மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டு நாடு திரும்பிட்டிருந்தாரு. வழியில அவரு நோய்வாய்ப்பட்டாரு. தலை சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிச்சும் குணமாகலை. மரணம் தன்னை நெருங்கறதை உணர்ந்த அலெக்சாண்டர், தலைமை வீரர்களை அழைச்சி, "சாவு என்னை நெருங்கிட்டுது. கடேசியா எனக்கு மூணு ஆசைகள் இருக்கு.. அதை நீங்க நிறைவேத்தணும்"னாரு..

அதை நிறைவேத்தறதா உறுதி கொடுத்து, என்ன ஆசைகள்னு அவங்க கேட்டாங்க.. அதுக்கு அலெக்சாண்டர், 

"முதல் விருப்பம் என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கிட்டு வரணும், என்னை அடக்கம் பண்றதுக்கு ஊர்வலமாக எடுத்துட்டு போறப்போ, என்னோட ரெண்டு கைகளும் சவப்பெட்டிக்கு வெளில தெரியற மாதிரி வைக்கணும், மூணாவதா, என்னை புதைக்கிற இடத்துக்கு போற வழியை, நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற விலை மதிப்பில்லாத கற்கள், செல்வங்களால அலங்கரிக்கணும்"ன்னாரு. 

தலைமை வீரர்களுக்கு இந்த ஆசைகள் வினோதமா தெரிஞ்சது. ஆனாலும், ஏன்னு கேட்க பயந்தாங்க. ஒருத்தன் துணிச்சு, "அரசே! உங்களோட ஆசையைக் கண்டிப்பாக நாங்க நிறைவேத்தறோம். ஆனா..இதுக்கான காரணம்"னு இழுத்தான். அதுக்கு அலெக்ஸாண்டர், 

என்னோட சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிட்டு வர்றதால இந்த உலகத்தில உள்ள எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நிச்சயமாக தெரிஞ்சுக்குவாங்க..  எந்த டாக்டராலயும் மரணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போட முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது.  ரெண்டாவது, இந்த உலகத்தையே வெல்ல ஆசைப்பட்ட நான் சாகும்போது, வெறும் கையோடதான் போறேன்னு என்னை பாக்கறவங்களுக்கு தெரியணும்.. மூணாவதா, வாழ்க்கையில எவ்வளவு செல்வத்தை சேர்த்தாலும், அதை நம்மோ எடுத்துட்டு போக முடியாது.. சவக்குழி வரைக்கும் மட்டும்தான் அவை வரும். இதை இந்த உலகத்துக்கு உணர்த்தறதுக்குத்தான் இந்த ஆசைகளை நிறைவேத்த சொன்னனேன்னாரு மாவீரன் அலெக்சாண்டர். 

தெரிந்ததும் தெரியாததும்.. 1


முசோலினி 


உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகள்ல ஹிட்லருக்கு அடுத்தபடியா பிரபலமாக இருந்தவரு முசோலினி. இவரு 1922 முதல் 21 ஆண்டு காலம் சர்வாதிகாரிய இத்தாலியை ஆட்டிப்படைச்சாரு. இவரோட நெருங்கிய நண்பர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். சின்ன வயசுல ஓவியராகணும்னு ஆசைப்பட்டவரு ஹிட்லர். ஆனா.. விதி வேற மாதிரியா விளையாடி.. உலக வரலாற்றையே மாத்திடுச்சு. அதே மாதிரி.. பள்ளிக் கூட வாத்தியாரா இருந்த முசோலினி, சர்வாதிகாரியா மாறினதும் விதியோட வினோத விளையாட்டுக்கள்ல ஒண்ணு. 

இத்தாலியில, 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி முசோலினி பிறந்தாரு. இவரோட அப்பா ஒரு கொல்லர். சொந்தமா இரும்புப் பட்டறை நடத்திக்கிட்டிருந்தாரு. அம்மா பள்ளிக்கூட ஆசிரியை. 
இத்தாலியில மன்னர் ஆட்சி ஒழிஞ்சி, மக்கள் ஆட்சி மலரணும்னு முசோலினியோட அப்பா, வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் டீக்கடை அரசியல் பேசிட்டிருப்பாரு. அவரைப் பார்த்து, முசோலினிக்கும் சின்ன வயசிலயே அரசியல் ஆசை வந்துட்டுது. பள்ளிப் படிப்பை முடிச்சதும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினாரு. நல்லா பேசவும் எழுதவும் தெரிஞ்ச முசோலினிக்கு லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், ஆங்கிலம் 
ஆகிய மொழிகளும் தெரியும். 

பசங்களுக்கு பாடம் நடத்திட்டிருந்த முசோலினிக்கு அந்த வேலை கொஞ்ச நாள்லயே போரடிச்சிட்டுது. அதனால அதை விட்டுட்டு, ராணுவத்துல சேர்ந்து கொஞ்ச காலம் வேலைபார்த்தாரு. அதுவும் போரடிக்க, ஒரு பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தாரு. பத்திரிகையில அவர் எழுதிக கட்டுரைகள் பெரிய பரபரப்பை உண்டாக்கிச்சு. அவர் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ஓராண்டு ஜெயில் தண்டனை கூட  அனுபவிச்சாரு. இந்த காலக்கட்டதுத்துல 1914-ம் ஆண்டுல முதலாம் உலகப் போர் மூண்டுச்சு. அப்போ.. மறுபடியும் முசோலினி ராணுவத்துல சேர்ந்தாரு. இதே காலக்கட்டத்துலதான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தாருங்கறது குறிப்பிடத்தக்க விஷயம். 

அப்புறம்.. 1939-ம் ஆண்டு ரெண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்னு நேச நாடுகளை எதிர்த்தாங்க. முதல்ல இவங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைச்சது. அப்புறம் போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும், முசோலினிக்கு தோல்விகள் தொடர்ந்துச்சு. போரில் தோற்றபிறகு ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயற்சி பண்ணாரு. கூடவே தனது காதலி கிளாரா பெட்டாசியையும் கூட்டிட்டு போனாரு. 

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றப்போ, புரட்சிப்படை அவங்களை மடங்கிடுச்சு. முசோலினியை அடையாளம் கண்டுக்கிட்ட அவங்க, காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினாங்க. முடிவு நெருங்கிட்டதை உணர்ந்த முசோலினி, அவங்க முன்னாடி மண்டியிட்டு, 'என்னை கொன்னுடாதீங்க'ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. அப்போ பேண்ட்லயே அவரு 'ஒண்ணுக்கு' போயிட்டாராம். 

ஆனா.. அவர் மீது இரக்கம் காட்டாத அவங்க, துப்பாக்கியால முசோலினியையும், அவரோட காதலியையும் சல்லடையாக துளைச்சி, அவங்க உடலை மிலான் நகரின் நடுவீதியில போட்டுட்டாங்க. அந்த உடல்கள் மேல எல்லாரும் காறி துப்புயும், சிறுநீர் கழிச்சும் அவமானப்படுத்தினாங்க. அப்புறம் அவங்க உடல்களை ஒரு கம்பத்துல தலைக்கீழா கட்டி தொங்கவிட்டுட்டு போயிட்டாங்க. 

சர்வாதிகாரிகளோட கடைசி காலம் மிகவும் கொடூரமானதாவே இருக்கும்ங்கறதுக்கு முசோலினி ஒரு உதாரணம். 

(வரலாற்று நாயகர்களை பத்தி இந்த மாதிரி குட்டி குட்டியா எழுதணும்னு ஆசை. புடிச்சுருந்தா சொல்லுங்க.. )

Monday 7 January 2013

அக்கம் பக்கம்


சத்தமில்லாமல் ஒரு சாதனை? 

எதிலேன்னு கேக்கறீங்களா? 'சரக்கு' விற்பனையில தான் இந்த சாதனை தமிழகம் செஞ்சிருக்காம். கொண்டாட்டம்னாலே இப்போ 'குடி'ன்னு ஆகிப்போச்சு. ஆங்கிலப் புத்தாண்டுக்கு மட்டும் 300 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆச்சாம். இது போன வருஷத்தை விட இந்த வருஷம் அம்பது சதவீதம் அதிகம். 

அதே மாதிரி, தென் மாநிலங்கள்ல சரக்கு விற்பனைல தமிழகம் முதல் இடத்தை தக்க வெச்சிட்டிருக்காம். 2003 ம் ஆண்டுலேர்ந்து, மது விற்பனையை தமிழக அரசு செய்துட்டு வருது. மாநிலம் முழுக்க மொத்தம் 6 ஆயிரத்து 805 கடைகள் இருக்கு. உள்நாட்டு சரக்கு, வெளிநாட்டு சரக்குன்னு, குடிமக்களோட தாகத்தை தீர்த்த வகையில, 2011-12  மார்ச் மாசம் வரைக்கும் 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைச்சதாம். இது  2013 ஆண்டு முடிவுல 20 ஆயிரம் கோடி ரூபாயா அதிகரிக்கும்னு எதிர்பார்க்கறாங்களாம். 

நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில, அரசோட நேரடி கட்டுப்பாட்டில் 338 கடைகளில் மட்டுமே மதுபான விற்பனை நடக்குதாம். கேரள நுகர்வோர் அமைப்பின் சார்பில், 45 கடைகள் நடத்தப்படுதாம். கடந்த, 2011-12 நவம்பர் மாதம் வரையில் கேரள அரசுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமா கிடைச்சதாம். காலை, 9 மணி முதல் திறக்கப்படும் மதுபான கடைகள் இரவு, 9 மணி வரை செயல்படுமாம். மதுபானங்களில் தண்ணீர் கலக்கறது, கூடுதல் விலைக்கு விக்கறதுன்ற அக்கபோரெல்லாம் அங்க கிடையாதாம். 

மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஆந்திர அரசு ஈடுபட்டு வருது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுத்து, தனியாரே நடத்தி வர்றாங்க. 2011-12 நவம்பர் மாதம் வரையில் 1அரசுக்கு 9 ஆயிரத்து 169 கோடி ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதே மாதிரி கர்நாடகாவும், 

மொத்த விற்பனையில் மட்டுமே ஈடுபட்டு வருது. 2011-12 நவம்பர் மாதம் வரையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைச்சிருக்கு. 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் 'சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் உயர்ந்துக்கிட்டே வருது. சென்னையில 15 முதல் 19 வயசுக்குட்பட்டவங்க குடிக்கறது அதிகரிச்சிருக்கறதா ஒரு புள்ளி விவரம். பாக்கெட் மணி ஈஸியா கிடைக்கறதும், தங்களை ஒரு ஹீரோவா காட்டிக்கற முனைப்புமே இந்த பழக்கத்துக்கு பள்ளிக்கூட பிள்ளைங்க ஆளாகறாங்களாம். 

 ••••• 

தெரிஞ்சவங்கக் கிட்ட கவனமா இருங்க..

செய்தித் தாள்கள்ல தினசரி பக்கத்துக்குப் பக்கம், கடந்த சில நாட்களா பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள் அதிகம் வந்திட்டிருக்கு. செய்திகள்ல வர்றது எல்லாமே கொஞ்சம்தான்னும், அவமானம் கருதி பெரும்பாலான சம்பவங்கள் வெளில தெரியறதே இல்லைன்னும் சொல்றாங்க.. இன்னைக்கு ஒரு பத்திரிகையை புரட்டிக்கிட்டிருந்தப்போ, அறிமுகமான நபர்களாலதான் பெண்கள் அதிகமா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படறதா போட்டிருந்தாங்க. அதாவது, அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள்தான் இந்த காரியத்தை துணிச்சலா, எதுவும் செய்ய முடியாதுன்ற தைரியத்துல செய்யறாங்களாம். முகம் தெரியாத நபர்கள் செய்றது ரொம்ப குறைவாம். 

அந்த பத்திரிகையில இருந்த ஒரு புள்ளி விவரத்துல, 2011-ம் ஆண்டுல தமிழ்நாட்டு பதிவான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் 677. இதுல ரெண்டு சம்பவங்கள் மட்டுமே முன்பின் தெரியாதவங்களால நிகழ்த்தப்பட்டிருக்கு. இதுல 249 பேர் அண்டை வீட்டுக்காரர்களாலயும், 96 பேர் உறவினர்களாலயும், 2 பேர் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களாலயும் பாதிக்கப்பட்டிருக்காங்க. 328 பேர் முன்பின் தெரியாத நபர்களால பாதிக்கப்பட்டிருக்காங்க. 

அதே ஆண்டுல சென்னையில பதிவான 76 பாலியல் வன்முறை வழக்குகள்ல, 74 தெரிஞ்சவங்களால பாதிக்கப்பட்டதா புகார் செய்யப்பட்டிருக்கு. இந்திய அளவுல 24 ஆயிரத்து 206 பாலியல் வன்முறை வழக்குகள்ல, 22 ஆயிரத்து 549 பேர் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளிட்டோரால பாதிக்கப்பட்டாங்களாம். 

' கடவுளே.. நண்பர்கள்கிட்டேயிருந்து என்னை காப்பாத்து, எதிரிகளை நான் பாத்துக்கறேன்'ங்கறது ஒரு பிரபலமான டயலாக். ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் கூட சொன்னதா ஞாபகம். அதனால.. நான் சொல்ல வர்றது என்னன்னா.. (மறுபடியும் தலைப்பை படிங்க..)

 •••••                                                                   

பிறந்தா சுவிஸ்ல பிறக்கணுமாம்..

மறுபடியும் ஒரு புள்ளி விவரம்

சுகாதாரம், பாதுகாப்பு, செல்வவளம், ஆரோக்கிய வாழ்வு போன்றவற்றின் அடிப்படையில, இந்த ஆண்டுல பிறக்க, உலகில் எது சிறந்த நாடுங்கற தலைப்புல ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்திச்சாம். சொன்னா.. நம்புங்க.. அதுல இந்தியாவுக்கு 66 வது இடம். இலங்கைக்கு 63 வது இடம். அமெரிக்காவும், ஜெர்மனியும் 16 வது இடத்துல இருக்குதாம். 49 வது இடத்தை சீனாவும், 72 வது இடத்தை ரஷ்யாவும் பிடிச்சிருக்காம். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் முறையே 75 மற்றும் 77 வது இடத்துல இருக்காம். 

முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆஸ்திரேலியா, நார்வேவும், அடுத்தடுத்த இடங்களை சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடிச்சிருக்கின்றன. எட்டாவது இடத்தை நெதர்லாந்தும், 9 வது இடத்தை கனடாவும், 10 வது இடத்தை ஹாங்காங்கும் பிடிச்சிருக்காம். 

 ••••• 

ஒரு படை வீரனை நெப்போலியன் முன்னாடி நிறுத்திய ஒரு அதிகாரி, 'இவன் திறமையானவன் கிடையாது, படையில இருந்து இவனை நீக்கணும்'ன்னாரு. 'ஏன் அப்படி சொல்றீங்க'ன்னு கேட்டாரு நெப்போலியன். 'எதிரிகள் நடத்திய தாக்குதல்கள்ல இவன் ஒன்பது முறை கீழே விழுந்துட்டான். அப்புறம், எழுந்து நின்னு சண்டை போடறான்'ன்னாரு அந்த அதிகாரி. உடனே நெப்போலியன், அந்த படை வீரன் கிட்ட, ' ஒன்பது முறை கீழே விழுந்தாலும், விடா முயற்சியோட எழுந்த நின்னு சண்டை போடற நீதான் உண்மையான வீரன்'னு அவனை பாராட்டினாராம். 

 ••••• 

Tuesday 1 January 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்




புது வருஷம் பிறந்துடுச்சி. புத்தாண்டு சபதத்தை ஒழுங்கா கடைபிடிக்கிறதில்லைங்கறதால, புத்தாண்டு சபதம் எதையும் எடுக்கறதில்லை. நிறைய எழுதணும்னு திட்டம் போட்டிருக்கேன். நிறைவேறுதான்னு பாக்கணும். வழக்கமா புத்தாண்டு பிறக்கற நேரத்தில கோயில்ல இருப்பேன். இந்த ஆண்டு அலுவலகத்தில இரவுப் பணியில இருந்தேன். 

புது வருஷம் தொடங்கறதை எல்லாரும் ஒருவித பரபரப்போடயும், பதற்றத்தோடயும் கொண்டாடறதாவே படுது. அது ஏன்னுதான் தெரியலை. 31-ம் தேதி இரவு ஒம்போது மணிக்கு அலுவலகம் கிளம்பி போட்டிருக்கேன். அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா சென்னை மாநகரம் ஒருவித பரபரப்போட இயங்கிட்டிருக்கறதா தோணிச்சு.

புத்தாண்டை ஒரு சாரார் வழிபாட்டுத் தலங்கள்லயும், ஒரு சாரார் மது விடுதிகள்லயும் கொண்டாடறது வினோதம்.