Monday 9 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 2

பிரபலங்களின் கடைசி வார்த்தைகள்......

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம்!'

* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ்? '

* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம்,  'நான் இன்னும் இறக்கவில்லை!'

* தாமஸ் ஆல்வா எடிசன் : 'விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் !'

* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : 'இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!'

* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம், 'இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!'

* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : 'இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன்!'

* டயானா : 'கடவுளே ! என்ன நடந்தது எனக்கு?'"

* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த நேரத்தில், 'ஜீஸஸ்!'

* வால்டேர் : (தூக்க்கிலிடப்படும் முன்) ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம், ' எதிரிகளை உருவாக்கிக்கொள்வதற்கான நேரம் இது அல்ல!'
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , 'ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது!'
* பீத்தோவன் : 'நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது!'
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் ,' மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள்!'

* நெப்போலியன் : ' ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின்!'

* மேரி க்யூரி : 'என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!'

* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா' என்று கேட்ட தங்கையிடம் , ' இறப்பைத் தவிர எதுவும் தேவையில்லை'

* வின்ஸ்டன் சர்ச்சில் : 'எனக்கு எல்லாமே போர் அடிக்குது!' (இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்)

* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , ' வைரவா ! விளக்கை அணைத்துவிடு..'

நோய்த் தீர்க்கும் மூலிகைகள்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர், நெல்லிக்கனி
2) இதயத்தை வலுப்படுத்த , செம்பருத்திப் பூ.
3) மூட்டு வலியை போக்கும், முடக்கத்தான் கீரை
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி
5) நீரழிவு நோய் குணமாக்கும், அரைக்கீரை
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும், மணத்தக்காளிகீரை.
7) உடலை பொன்னிறமாக மாற்றும், பொன்னாங்கண்ணி கீரை
8) மாரடைப்பு நீங்கும், மாதுளம் பழம்
9) ரத்தத்தை சுத்தமாகும், அருகம்புல்
10) கான்சர் நோயை குணமாக்கும்,  சீதா பழம்
11) மூளை வலிமைக்கு ஓர், பப்பாளி பழம்
12) நீரிழிவு நோயை குணமாக்கும்,  முள்ளங்கி
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட, வெந்தயக் கீரை
14) நீரிழிவு நோயை குணமாக்க,  வில்வம்
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும், துளசி
16) மார்பு சளி நீங்கும், சுண்டைக்காய்
17) சளி, ஆஸ்துமாவுக்கு, ஆடாதொடை
18) ஞாபகசக்தியை கொடுக்கும், வல்லாரை கீரை
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும், பசலைக்கீரை
20) ரத்த சோகையை நீக்கும்,  பீட்ரூட்
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்,  அன்னாசி பழம்
22) முடி நரைக்காமல் இருக்க, கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும், தூதுவளை
25) முகம் அழகுபெற, திராட்சை பழம்
26) அஜீரணத்தை போக்கும்,  புதினா
27) மஞ்சள் காமாலை விரட்டும், கீழாநெல்லி
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும், வாழைத்தண்டு


படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க..

கோர்ட்டில்  விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார், அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க
ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
அடாடாஉங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது
தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்
கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதானஅதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க
வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
எதுக்காக விவாகரத்து கேட்கிறார்என்று அலறி விட்டு இருமினார்.
ஓ..அதுவாஎன்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்கஉங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?

ஒரு முன்னாள் ஃபாஸ்புட் கடைக்காரரின் ஒப்புதல் வாக்குமூலம் - படிச்சுப் பாருங்க அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..  

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம். அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கெட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை

2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம். ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும். அப்ப அது உங்கள் வயிற்றுக்குள் போனால் ?

3) சோயா சாட்ஸ்.  இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின எண்ணையையோ கலந்து செய்றோம்.

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை. பாமாயில் தான் யூஸ் பண்றோம்.

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோறு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம்.

6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க. அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம்.  காரணம் அதில் உள்ள எண்ணை பசை போக கூடாது என்பதற்காக. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் செலவாகும்.

7) அஜினமோட்டோ. இதை அதிகமாக யூஸ் பண்றோம். உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள். இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும். சோதித்து பாருங்கள்.

8) வெள்ளை பெப்பர். இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம்.
9) தக்காளி சாஸ். இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த, காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம்.

10) சில்லி சாஸ். அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும்.

இது தான். நாங்கள் பாஸ்ட் ஃபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள். 5 நிமிடத்தில்  8 பிளேட் போடுவோம் .. ஒண்ணு 50 ருபாய் என்று விற்பனை செய்தால்,  400 ருபாய் சம்பாதிப்போம். அதை நானும் சாப்பிட்டு ன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குமே என  என் மனசாட்சி உறுத்தியது. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன்.

( இனிமே ஃபாஸ்ட் ஃபுட் கடை பக்கம் போறவங்க கொஞ்சம் யோசிச்சுக்கோங்க)

பெருந்தலைவர் காமராஜர் 

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரும், முன்னாள் பிரதமர் நேருவும், கூட்டமொன்றில் பங்கேற்க மதுரைக்கு  காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நேரு. "மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? " என்று கேட்கிறார்.
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது" - காமராஜர்
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? " என்று நேரு கேட்க, "இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்.
அதற்கு நேரு, "இவ்வளவு தூரம் வந்து விட்டு, உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நான் பார்த்தே ஆக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்!" என்கிறார். 

வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுனரிடம், "தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு!" என்கிறார். அது வீடுகளே இல்லாத பகுதி விவசாய நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர். 'தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு.
காமராஜர், களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார்."ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்" என்று கூவுகிறார்.
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா, நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில், உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராஜரின் தாயார். தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்.
பிறகு நேரு அவர்களை காட்டி அறிமுக படுத்துகிறார் காமராஜர்.
நேருவால் தன் முன்னால் நடப்பதை பார்த்து நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்.



கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவற்றில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே தாராசுரம்என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9.  கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர்என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி பாப்பாரப்பட்டியில்  இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளன.

15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் தானாம். 

அறிவியல் அல்லது ஆன்மீக உண்மை

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.  அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

இதற்காகத்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்களோ?



1 comment:

  1. ம்ஹூம் ... நடக்கட்டும் ... நடக்கட்டும்...எல்லாத்தையும் சுட்டு ,, ஒரு status போட்டாச்சா...?...

    ReplyDelete