Monday 25 May 2015

தானம் தாமதமாவதால் தவிக்கும் உயிர்கள் .


இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேர், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். மூளைச் சாவு அடைந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. உரிய நேரத்தில் சிறுநீரகம் கிடைக்காமலும், டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) பலன் அளிக்காததாலும் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. 

தமிழகத்திலும் சிறுநீரக பாதிப்புகள் அதிகம். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தில் சிறுநீரகம் வேண்டி கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் முதல் 4,704 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வதில், நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனாலும், உறுப்புகள் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. மூளைச்சாவு உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், , மூளைச்சாவை உறுதி செய்து டாக்டர்கள் சான்று அளிக்க தயக்கம் காட்டுவதால், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாமல் போகிறது. இதுவே, உடல் உறுப்புகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 160 சிறுநீரகங்கள் தானமாக கிடைக்கிறது. 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் வரை மூளைச்சாவு அடைந்த 620 பேரிடம் இருந்து 1,113 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

சிறுநீரகங்கள் செயலிழந்த ஒருவர், 3 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்வது கடினம். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் சிறுநீரகம் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம் பொருத்தப்படுகிறது. தவிர நெருங்கிய ரத்த சொந்தங்கள், சிறுநீரகத்தை தானமாக கொடுக்கின்றனர். தூரத்து உறவினர்கள், நண்பர்களின் சிறுநீரக தானத்தை கமிட்டி ஏற்பதில்லை. சிறுநீரக பற்றாக்குறைக்கு இதுவும் காரணம்.

தானம் செய்ய முன்வருவோர், உண்மையான உறவினர்களா, நண்பர்களா என்பதை கமிட்டி விசாரித்து அவர்களது சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் (பிபி) போன்றவையே முக்கிய காரணங்கள். பரம்பரையாக சிறுநீரக பாதிப்பு, அதிகமாக மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீர் வெளியேறுவது குறைதல், ரத்தம் வெளியேறுதல், முகம், கை, கால்களில் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகள். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அறிகுறிகள் தெரியாது. எனவே, அடிக்கடி சிறுநீரக பரிசோதனைகள் அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

Friday 22 May 2015

தெரியுமா இவரை - 14 ஹோசிமின்

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். 

1890-ம் ஆண்டு பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். அவரது இயற்பெயர்  சிங்சுங். ஹோசிமின்' என்ற பெயருக்கு 'ஒளி தந்தவர்' என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி ஏற்றியவர் என்பதால், மக்கள் ஆசையுடன் வைத்த பெயர் ஹோசிமின்.!

பிரான்ஸ் நாடு தனக்கு தோதானவர்களை வியட்நாம் அரசின் பதவியில் அமர வைத்து,  பொம்மலாட்ட அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலம். அதை எதிர்த்து புரட்சியாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த கொரில்லா படைக்கு தகவல்களை கொண்டு போகும் ஆபத்தான வேலையை சிறுவனா இருந்த ஹோசிமின் செய்துகொண்டிருந்தார். நாட்டு விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே அதற்குக் காரணம். 


இளைஞனாக வளர்ந்ததும் பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான பல போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். எனினும், அந்த போராட்டங்களுக்கு எந்த பலனும் கிட்டாததால் சோர்வு ஏற்பட்டதுதான் மிச்சம். பின்னர், பிரான்ஸ் நாட்டில் தபால் அலுவலகத்தில் அவருக்கு வேலை கிடைக்க, அங்கு பணியில் சேர்ந்தார். 


அவர் அந்த வேலையில் சேர முக்கியக் காரணம், பிரெஞ்சு புரட்சி எப்படி நடைபெற்றது, அதை எப்படி அவர்கள் சாதித்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காகத்தான். விரும்பியபடியே, அந்த புரட்சி குறித்த தகவல்களை சேகா¤த்துக் கொண்டபின், அவர் 1940-ம் ஆண்டு அவர் வியட்நாமுக்குத் திரும்பினார். 

அந்த காலக்கட்டத்தில், பிரான்சிடமிருந்த வியட்நாம், ஜப்பானின் கைகளுக்குப் போனது. பிரான்ஸ், ஜப்பான் ஆகிய இரண்டு கொள்ளிகளில், ஜப்பான் அவர்களுக்கும் தேவலாம் என்று பட்டது. எனவே, ஜப்பானியர்களுக்கு வியட்நாம்வாசிகள் வரவேற்பும் அளித்தார்களாம். 

யாரிடம் அடிமைப்பட்டிருந்தால் என்ன, அடிமை, அடிமைதானே? எனவே, ஜப்பானியர்களையும் விரட்டியடித்து சுதந்திரத்தை நாம் சுவாசிக்க வேண்டும் என்று ஹோசிமின் முழங்கினார். அவரை நசுக்க ஜப்பான் அரசு முயற்சி செய்ய, வியட்நாமின் அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சமடைந்தார் ஹோசிமின். 

அந்த காட்டிற்குள் இருந்தபடியே, கொரில்லாப் படையை உருவாக்கி, வாய்ப்புக்காக காத்திருந்தார் அவர். அந்த வாய்ப்பு அவருக்கு சரியாக அமைந்தது. 1945-ம் ஆண்டு ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டிருந்த காலம். அந்த பேரழிவின் அதிர்ச்சிலிருந்து ஜப்பான் சுதாரிக்க முடியாத நிலையில் இருக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானிடமிருந்து வியட்நாமை அபகரிக்க காய்களை நகர்த்தியது பிரான்ஸ். 

ஆனால், அந்த வாய்ப்பை பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்காமல், முந்திக்கொண்ட ஹோசிமின், ஜப்பானியர்களை விரட்டியடித்துவிட்டு வியட்நாமை கைப்பற்றினார். அதே வேகத்துடன் வியட்நாமை சுதந்திர நாடாகவும் பிரகடனப்படுத்தினார். 

உடனுக்குடன் தேர்தலையும் நடத்த, ஹோசிமின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிபட்ட நாகமாக இருந்த பிரான்ஸ், வியட்நாம் மீது போர் தொடுத்தது. 

யுத்தம் ஆரம்பமானது. போர்க்கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள் என சகல நவீன ஆயுதங்களுடன் வந்த பிரான்சை, குறைந்த ஆயுதங்களுடன் இருந்த வியட்நாம் ¬தா¤யமாக எதிர்கொண்டது. எப்படியும் நாம்தான் ஜெயிப்போம் என்ற அகங்காரத்தில் பிரான்ஸ் படைகள், கொஞ்சம் அலட்சியத்துடன் போரிட, காட்டுக்குள் கடுமையான கொரில்லா போர்முறையை பயின்ற வியட்நாம் வீரர்கள் அசுர வேகத்துடன் போராட்டார்கள். வாழ்வா, சாவா பிரச்னை அவர்களுக்கு. முடிவில் வியட்நாம் வீரர்களே வெற்றி பெற்றார்கள். 


வியட்நாம் வெற்றியை ஈட்டினாலும், தெற்கு வியட்நாம் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வடக்குப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். நாட்டை முழுமையா மீட்டே தீருவன் என சபதமிட்டார் ஹோசிமின். 

ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரைக் குத்தி, அமொ¤க்காவிடம் உதவி கேட்டது பிரான்ஸ். கம்யூனிஸ்ட்களை எட்டிக்காயாக பார்க்கும் அமொ¤க்கா, பிரான்ஸ் நாட்டுக்கு ஆயுத உதவி செய்தது. 

பின்னர், அமொ¤க்காவின் உபயத்தால், வியட்நாமில் ஆயுத மழை பொழியத் தொடங்கியது. ஆனால், தளராமல் பிரான்ஸ் நாட்டுக்கு தண்ணிக் காட்டினார் ஹோசிமின். வெறுத்துப்போன அமொ¤க்கா, 1965-ம் ஆண்டு நேரடியாக களமிறங்கியது. இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாம் மேல் குண்டு மழை பொழியத் தொடங்கியது அமெரிக்கா. ஆனால், கொரில்லா படையில் நிபுணத்துவம் பெற்ற வியட்நாம் வீரர்கள் முன்னால் எந்த ஆயுதமும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வியட்நாம் முன்னால் மண்டியிட்டது அமொ¤க்கா. வடக்கு வியட்நாமை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று ஹோசிமினுடன் சமாதானத்துக்கு வந்தது அமெரிக்கா. 

அதை ஏற்காத ஹோசிமின், சுதந்திர நாடே எனது லட்சியம் என்பதில் உறுதியாக இருந்தார். 

1968ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரம். 
சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினின் படைகள் திடீரென வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு, அமெரிக்க தூதரக அலுவலகத்தை  கைப்பற்றினார்கள். 

எரியும் புத்த பிட்சு 
இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.  கம்யூனிஸ்ட் என்று சந்தேகம் எழுந்ததால், அப்பாவி பொதுமக்களையும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஹோசிமினுக்கு ஆதரவாக புத்த பிட்சுகள் போராட்டங்களில் குதித்தார்கள். அவர்களது போராட்டமுறை வேறுவிதமாக இருந்தது. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இன்றி புத்த பிட்சுகள் தங்களை தாங்களே நடுரோட்டில் எரித்துக் கொண்டார்கள். இதையெல்லாம் பார்த்த அமெரிக்க மக்கள், அமெரிக்க அரசை குறை சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தததால், வியட்நாமிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் நிக்சன். 

அப்படி அறிவித்தாலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் இருந்தது. 1972-ம் ஆண்டு மார்ச் மாதம், ஒரு வியட்நாம் கிராமம் மீது நோப்பாம் என்ற குண்டை அமெரிக்கா வீச, அந்த கிராமமே தீப்பற்றி எரிந்தது. அந்த சம்பவத்தில் தன் உறவுகளை இழந்த சிறுமி ஒருத்தி நிர்வாணமாக ஓடி வர, அந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி, உலகத்தை உலுக்கியது. உலக நாடுகள் அமொ¤க்காவை கண்டிக்க, வேறு வழியே இல்லாமல் படைகளை வாபஸ் வாங்கியது அமெரிக்கா. 


வட வியட்நாம், தென் வியட்நாமுடன் இணைந்து ஒரே சுதந்திர நாடானது. ஆனால், அந்த கனவுக்காக போராடின ஹோசிமின், சுதந்திர நாடான வியட்நாமை பார்க்க உயிருடன் இல்லை. அதற்கு முன்னதாகவே அவர் மறைந்துவிட்டார். வெற்றிக்கு அருகே அழைத்து வந்த, அந்த தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள், ஒருங்கிணைந்த வியட்நாம் தலைநகரான சைகோனுக்கு ஹோசிமின் சிட்டி என்று பெயர் வைத்து கவுரவப்படுத்தினார்கள். 

Sunday 17 May 2015

இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் 1,300 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR), தேசிய புற்றுநோய் பதிவக திட்ட, தகவலின்படி 2012-ம் ஆண்டு முதல், 2014-ம் ஆண்டுவரையில் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 6 சதவீதம் உயர்ந்து உள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய சுகாதாரத்துறை தகவலின்படி “2014ம் ஆண்டு மட்டும் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் சுமார் 5 லட்சம் வரையிலானோர் உயிரிழந்தனர்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,20,179 ஆக பதிவாகிஉள்ளது. இறப்பு எண்ணிக்கையானது 4,91,598 ஆகும். 

2013-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,34,314 ஆகும், இதே வருடத்தில் புற்றுநோய் காரணமாக 4,78,180 பேர் உயிரிழந்து உள்ளனர். 2012-ம் ஆண்டில் புற்றுநோய்க்கு சுமார் 4,65,169 பேர் தங்களது உயிரை இழந்துஉள்ளனர். இதே வருடத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,16,628 ஆகும். 
“வயது முதிர்வு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளைகள், புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், ஆரோக்கியமற்ற உணவுமுறைகள். நோய் நிர்ணய பரிசோதனை வசதிகள் குறைபாடு, ஆகியவை காரணம் சில காரணங்களால் புற்றுநோயினால் இறப்போர் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நாட்டில் புற்றுநோய் சிறப்பு ஆலோசனைக்கும், வசதிகளை வலுப்படுத்தும் வழிமுறைகளை மாநிலங்களில் பரப்பவும் மத்தியஅரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. புற்றுநோயை தொடர்ந்து இந்தியாவில் அதிகபேரது உயிரை வாங்கிய நோயாக காசநோய் உள்ளது. நாட்டில் 2011ம் ஆண்டு காசநோய்க்கு 63,265 பேரும், 2012ம் ஆண்டு 61,887 பேரும், 2013ம் ஆண்டு 57,095 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்டு உள்ள தகவல்கள் இதனை காட்டுகிறது. அரசு நோயாளிகளுக்கு காசநோய் எதிர்ப்பு மருந்து உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. 

சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில், தரமான ஆய்வுக்கு நுண்ணோக்கியியல் மையங்களை அரசு நிறுவிஉள்ளது. இதேபோல் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பழங்குடியின மற்றும் மலைப்பகுதிகளிலும் ஆய்வு மையங்களை அரசு அமைத்து உள்ளது. நாட்டில் அரசு 13,000 நுண்ணோக்கியியல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 6 லட்சம் நேரடி சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday 14 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 12

தோணுச்சு 

* சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்.
* வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!
* எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்!
* விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது!
* உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!
* பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது!
* ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
* நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாகியிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!
* சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!
* ‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!
* சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!
* ஆடுகள் ஆடுகின்றன! கோழிகள் குதிக்கின்றன! பல வீட்டின் குழம்புச் சட்டியில் இன்று!



பழைய தலைமுறை 

ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்.
ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!
கேலண்டர் அட்டையை பரீட்சை அட்டையாக பயன்படுத்தி தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.
மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .
கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.
காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் 
இருக்கும்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்
கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்
ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்
நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை 
இதெல்லாம் போச்சு.
நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி நீயீநீ பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்
இதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.



"பரம்பரை" என்பதன் பொருள் என்ன?

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு. 
பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி
நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
ஒரு தலைமுறை - சராசரியாக  60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..




ஆண்கள் ரொம்ப பாவம் 


ஆண் என்பவன்..
கடவுளின் உன்னதமான படைப்பு

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, 
தன் கனவுகளை தியாகம் செய்பவன்

காதலிக்கு பரிசளிக்க , 
தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக, 
தன் இளமையை அடகுவைத்து 
அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, 
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், 
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, 
தாங்கிக்கொண்டே ஓடுபவன்

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே 
ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன் 
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், 
கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
எனவே, ஆண்களின் உலகம், தியாகங்களாலும்  வியர்வையாலும் சூழப்பட்டது.


மணிரத்னம் - திரைப்படங்கள் ஒரே ஒரு பார்வை 

தான் கொன்றவனின் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி
தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே
வாழ்ந்துவிட்டு தாலி கட்டினால் - ஓ கே கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா 


தத்துபித்துவங்கள் 

* செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா,  நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

* இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்....சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

* என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்... ரயில் ஏறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்...
இதுதான் வாழ்க்கை .

* பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்...ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா.. ஃபுல்லு வருமா..? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

* என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

* டிசம்பர் 31க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்... இதுதான் உலகம்.

* பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்...ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்...சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்...ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ? யோசிக்கணும்............ ...!!

* இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனா, பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

* ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான்  டிரைவ்
பண்ண முடியும் .

* தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!)

* வாழை மரம் தார் போடும் ஆனா.......அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ!)

* பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்...ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா..? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

* சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.. அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

* பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்...கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

* பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்...ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம்

* என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .

* ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு ஆனா...... தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு.... 

* நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா......ஒடுற பஸ்ஸுக்கு
முன்னாடி நிக்க முடியாது...

* வண்டி இல்லாமல் டயர் ஓடும்... ஆனால்.......டயர் இல்லாமல்
வண்டி ஓடுமா ? (இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

* சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா.....ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல..பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான்...


 # அவ்வளோதான்   

இம்பூட்டு பேரா? 

உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு புகைப் பழக்கமும் 24 கோடி பேருக்கு குடிப்பழக்கமும் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அடிமை பழக்கவழக்கங்கள் மீதான சர்வதேச புள்ளிவிவரம்: 2014 நிலை அறிக்கைஎன்ற தலைப்பில்  சர்வதேச ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிண்டா கோவிங் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

அதன் ரிசல்ட் என்னவாம்?

உலகில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் (100 கோடி) புகை பிடிக்கின்றனர். சுமார் 5 சதவீதம் பேர் (24 கோடி) மது அருந்துகின்றனர்.

இதுபோல ஹெராயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் சேகரிப்பது கடினம். ஆனால், உலகம் முழுவதும் போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள் 1.5 கோடி பேர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத போதைப் பொருட்களைவிட சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய தீங்கை விளை விக்கக் கூடியவை என தெரிய வந்துள்ளது.

உலகிலேயே கிழக்கு ஐரோப்பியர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒருவர் 13.6 லிட்டர் மது அருந்துவது தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக வடக்கு ஐரோப் பியர்கள் 11.5 லிட்டர் மது குடிக்கின்றனர். மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இது மிகக்குறைந்த அளவாக (2.1 லிட்டர்) உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ளவர்களில் 30 சதவீதம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். ஓஷனியாவில் இது 29.5 சதவீதமாகவும் மேற்கு ஐரோப்பாவில் 28.5 சதவீதமாக வும் உள்ளது.

Sunday 10 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 11


வரம் 

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்து, “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்.

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா, “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி, வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?” ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம “குப்புமி” “குப்புமி” “குப்புமி”ன்னு சொன்னானாம்.  பாவம் கடைசி வரை அவனுக்கு ”சா” வே 
வரலையாம். 

சாமியின் background voice....

"வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா. குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்..."     


• • • • 


ஜோடி இல்லாம பீச்சுக்கு தனியா போனா இதுதான் கதி.. 


• • • • 



GOOD MOTIVATION

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா?”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து..”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.


*

நம்மளோட வண்டி வாகனத்துல, நமக்கு பிடித்தமான சாமி படங்களையோ, பெயர்களையோ எழுதி வெச்சிக்கிறது வழக்கம். சிலர் பிடித்தமான வாசகங்களையும் எழுதி வைப்பாங்க. இன்னும் சிலர் இப்படியும் எழுதி வெச்சிருக்காங்க.. என்னன்னு நீங்களே பாருங்களேன்...






அம்மாக்களுக்கு சமர்ப்பணம்



















இந்த அம்மாக்கள் 
தோசைக்கல்லில் 
நிலவு வார்ப்பவர்கள் !

*
அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது எமக்கு 
அம்மா வீடுதான் !

*
அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம்! 
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் !
*
பிள்ளைகள் 
வெளியூரில் 
பணியிலிருக்கும் 
ஒரு வீட்டில், 
பக்கத்துவீட்டுக் குழந்தைகள் 
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் !

*
அப்பா வாசம் 
வெயில் வாசம் ! 
அம்மா வாசம் 
நிலா வாசம் ! 
எமது 
சமையலறையெங்கும் 
நிலா வாசம் !

*
எமக்குக் 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை ! 
அடிக்கடி வந்து 
தொட்டுப்பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது !

*
இவ்வளவு வயதாகியும் 
புதுச்சட்டைக்கு 
மஞ்சள் வைத்து 
வருபவனைக் 
கேலி செய்யும் 
நண்பர்களே 
அது, 
அவன் வைத்த 
மஞ்சள் அல்ல ! 
அவன், 
அம்மா வைத்த 
மஞ்சள் !

*
பிள்ளைகள் 
ஊரிலிருந்து 
கொண்டு வரும் 
பயணப்பையில் 
இந்த அம்மாக்கள் 
எதிர்பார்ப்பது 
இன்னுங்கொஞ்சம் 
அழுக்குத்துணிகளை !

*

மகனுக்கான 
அப்பாவின் 
கோபத்திற்கெல்லாம் 
அம்மாவின் 
முதுகுதான் 
கிழக்கு !

*
டைப்பாய்டு வந்து 
படுத்த அம்மாவுக்கு 
சமைக்க முடியவில்லையே 
என்கிற கவலை !

*

இங்கே பலரது 
அகராதியில் 
வீடு என்கிற 
சொல்லுக்கு நேரே 
அம்மா என்று 
உள்ளது !

*
புகைவண்டியில் 
பிதுங்கி வழியும் 
பெருங்கூட்டத்தில் 
ஊர் போய்ச்சேர 
ஒற்றைக்காலில் 
நின்றுகொண்டு 
எட்டு மணிநேரம் 
ஒருவன் 
பயணிக்க முடிவதன் 
மூன்றெழுத்துக் காரணம், 
அம்மா !

*
அம்மா தாயே 
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல் மேதைகளுக்கெல்லாம் 
ஆசான் !

*
எந்தப் பொய் 
சொல்லியும் 
அம்மாக்களை 
ஏமாற்றிவிடமுடியும் 
சாப்பிட்டு விட்டேன் 
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர !

*
அத்தி பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசிச்சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்கள் தேய்த்துக்கொண்டே 
அப்பால் நகர்கிறார்கள் 
அம்மாக்கள் !

*

வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள் 
பிரியங்களைத் 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் !

*

பீஸ் கட்ட 
பணமென்றால் 
பிள்ளைகள் 
அம்மாவைத்தான் 
நாடுகின்றன ........ 
காரணம், 
எப்படியும் 
வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! 
அல்லது 
எடுத்துக் கொடுத்துவிட்டு 
திட்டு வாங்கிக்கொள்வாள் !

*
வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் !

*
அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் !

*

அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் 
" எம்புள்ள 
பசி தாங்காது! "


(வாட்ஸ் ஆப்பில் வந்த கவிதை ) 


Thursday 7 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 10

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல?
5. பணம் தானேன போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல?
6. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
7. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
8. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது?
9. கஷ்டம் தான் ஞ் ஆனா முடியும்.
10. நஷ்டம் தான் ஞ் ஆனா மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டேனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமாஞ்ன்னு நினைக்காதே. முடியணும்னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனையை நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம் ஒன்பது முறை விழுந்தவனுக்கு இன்னொரு பெயர் உண்டு. எட்டு முறை எழுந்தவன் எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.



ஒரு கணவனின் புலம்பல்  கவிதை 

மனைவிகளே! காதல் துணைவிகளே!
தாலி கட்டிய நாள் முதலாய் 
எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே!
கடவுளின் துகள்களே!,

தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், 
தொட்டுத் தாலி கட்டிய எங்களை
எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே!

கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க.
ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க 
சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை 
அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை.

கொஞ்சிப் பேசிய குரல் எங்கே?
கிள்ளி விளையாடிய விரல் எங்கே?
எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டு எங்கே?
ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே?
ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே? 

உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின 
ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு...
கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம்
ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு.

நட்புனா என்ன தெரியுமா ? 
சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா...
சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ 
காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்...
ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா?

ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் 
ஃப்ரிட்ஜ் என்ற மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க.
டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க. !
ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட்
ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க..
மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா..
வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா !

போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான்,
ஆனா, பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், 
கூடாரம் கவிழ்ந்து சேதாரமாகிப் போனதாதான் 
பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது.

பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல போன பல பேரு,
'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு 
ஊரு முழுக்க நிறையவே இருக்கு.

அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே 
உதறவைக்கிற அளவு, புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல
கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் 
போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்....

அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய்
வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம் .!
ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து 
கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே?
நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். 
ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா ?

எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல 
கொஞ்சம் வெண்ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே,
'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு, காவடி சிந்து முதல்
கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க.
இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... ?
இது என்னம்மா நியாயம் ?
டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், 
கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா ?

ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய்.
இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா ?
நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா,
நாங்க பதிலா சொல்லுவோம்..? பொய்தான் சொல்லுவோம் !
வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம் விட்டாக்கூட 
பீர் ஏப்பம்னு நினைச்சு மோப்பம் புடிக்கிறது,
'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும், 
ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது,
வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது.
வேண்டாம் பேபிம்மா கோவம்,
ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம்  !

கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ 
என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா ?
எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, 
அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம். !
நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த
நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.

கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு ?
மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு ?
தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்.
தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக் ?
நீங்கள்லாம் தங்கம்மா தங்கம்.

ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க.
அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க...
சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க, டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே..?
முடியலை

# என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...


அப்புறம் ஏன்? 

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.
இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள்? மனித பிறப்பு மிக .அ£¤ய பிறப்பு. வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வதுதானே சிறப்பு? 



கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான் அதனால கொலை வெறி ஆகாம படிங்க..

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயங்காலம் வேலை முடிச்சு, காட்டு வழியா பைக்ல வீட்டுக்கு போய்க்கிட்டு இருந்தான்.  அப்ப திடீர்னு  பைக் பஞ்சர் ஆய்டுச்சு. உடனே பக்கத்துல பார்த்தான். தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது. உடனே அங்க ஏதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கப் போனான்.

அங்கே இருந்த ஒரு துறவி, தம்பி நேரமாயிடுச்சு.. இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணிட்டு போகணுமா? பேசாம இங்யே ராத்தி£¤ தங்கிட்டு காலைல போங்கன்னு சொன்னாரு. இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டுட்டு படுத்துட்டான். நள்ளிரவுல மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் .ஆனா ஒருத்தரும் எழுந்து என்னனு பார்க்கலை. அதனால அவனும் எந்து பாக்காம அப்படியே படுத்துட்டான். 

மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான். ஆனா அந்த துறவி, அதை உன்கிட்ட சொல்லக்கூடாது, நீ போகலாம் அப்படின்னுட்டாரு.  சா¤ன்னு இவனும் புறப்பட்டு வந்துட்டான். ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .

இவனும் மறு நாள்காரணம் கேட்டான் .ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தடவைக் கூட காரணத்தை சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவனை தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ திற. அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவை  காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான்.அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான்அடுத்த சாவியும் தந்தார் .இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் ... அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.

( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க )

தெரியுமா இவரை - 13 லெனின்

மன்னர் ஆட்சி நடைபெற்ற ரஷ்யாவில் மக்கள் ஆட்சியை மலரச் செய்தவர், விளாடிமிர் இலீச் உல்யானவ். சுருக்கமாக லெனின். 1890-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் நகரத்தில் பிறந்தார். (அந்த நகரத்துக்கு இப்போது லெனினின் நினைவாக 'உல்யானவ்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.) லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். தந்தை அரசு அதிகாரி. 

அந்த காலக்கட்டத்தில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னன் 2-ம் நிக்கோலஸ் நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவராக தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக அரசன் இருக்க, ராணியோ, ரஸ்புடீன் என்ற போலிச்சாமியாருக்கு அடிமையாக இருந்தாள். இதனால், அரண்மனை மட்டுமல்லாமல், சாமியார் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருந்தது. 

1915-ம் ஆண்டு முதல் உலகப் போர் மூண்டுச்சு. இதுல ஜெர்மனியும், ரஷ்யாவும் கடுமையா மோதிச்சு. ஆனாலும் ரஷ்யா தோத்துடுச்சு. 

லெனினோட மூத்த அண்ணன் அலெக்ஸாண்டர் முற்போக்கு சிந்தனையும், தீவிரவாத கொள்கையும் உடையவரா இருந்தாரு. மக்களை ஒண்ணு திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டாரு. மன்னர் இறந்துட்டா, நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்னு அவர் நம்பினாரு.  இது தெரிஞ்சு, அரசாங்க அதிகாரிகள், அலெக்சாண்டரையும், அவரோட நண்பர்களையும் கைது செஞ்சு 1887-ம் ஆண்டு, மே மாசம் 8-ம் தேதி அவரை தூக்கில போட்டாங்க. 


மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.

விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள ( KHAZAN UNIVERSITY ) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.

அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது. 

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrogradசுற்றி வளைத்தது லெனினின் படைகள். 

இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார். 

நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.