Sunday 18 June 2017

இன்று தந்தையர் தினம்


ஆண்களின் உலகம் தியாகங்களாலும்,வியர்வையாலும் சூழப்பட்டது. குழந்தைகளின் நலனுக்காக தங்கள் ஆயுள் முழுவதையும் அர்ப்பணிப்பவர்கள் தந்தையர் . அவர்களை பெருமைப்படுத்தும் நாள்தான் "சர்வதேச தந்தையர் தினம்". ஆண்டு தோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எப்படி வந்தது 'தந்தையர் தினம்'?

1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிக்கு மகளாக பிறந்தவர்  சொனாரா ஸ்மார்ட் டோட். அவருக்கு 16 வயதானபோது,  ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் மரணமடைந்தார்.

அன்று முதல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்தவர் வில்லியம் ஜாக்சன். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வு சொனாராவை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் 1909-ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தின கொண்டாட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அறிந்த  சொனாரா, தன் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என வாதிட்டார். தன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

அன்று முதல்  சர்வதேச தந்தையர் தினம்  ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.  1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். 

Saturday 17 June 2017

சிங்கத்தை தின்னும் மான்


      காட்டில் வழி தவறிய மான் ஒன்று தனது கூட்டத்தை தேடிக்கொண்டிருந்தது.  
அப்போது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து பதறிய மான், இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது, அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் மானுக்கு ஒரு யோசனை தோன்றியது.
     
      உடனே, சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளைக் கடித்து சுவைப்பது போல நடிக்கத் தொடங்கியது. சுவைத்து கொண்டே சிங்கத்தின் காதில் விழுமாறு சத்தமாக, “ஆஹா சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், வயிறு நிறைந்து விடும்" என்றது.
      
      இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த  மான் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து, தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓடியது. இதையெல்லாம் மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று நரி ஒன்று  பார்த்துக் கொண்டிருந்த்து.

    ‘சிங்கத்தை ஏமாற்றிய இந்த மானை, சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெறலாம், அதனால் காட்டில் பயமின்றி வாழலாம்’ என்று திட்டம் போட்டது. உடனே சிங்கத்திடம் சென்ற நரி,  மான் செய்த தந்திரத்தை எடுத்துக் கூறியது.  

    நரி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்ட சிங்கம், "இப்பொழுது அந்த  மானை என்ன   செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று  நரியை முதுகில் ஏற்றிக் கொண்டு மான் இருந்த இடத்தை நோக்கி சென்றது.

      தன்னை நோக்கி சிங்கம் வருவதைப் பார்த்த மான், ஏதோ தவறு நடக்க இருப்பதை உணர்ந்தது. எனவே,  முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த நரியை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.


      இதை கேட்ட சிங்கம், ‘ஆஹா, தந்திரக்கார நரி, நம்மை ஏமாற்றி, சிங்கத்தை தின்னும் மானிடம் அல்லவா அழைத்துச் செல்கிறது’ என்று கோபம் கொண்டு, நரியை அடித்து துவைத்துவிட்டு,  திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. தனது புத்திசாலித்தனத்தால் சிங்கத்திடமிருந்து தனது உயிரை காத்துக் கொண்ட மான், தனது கூட்டத்தோடு போய் சேர்ந்தது. 

Thursday 15 June 2017

ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்


          ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்தார்.  அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.

       பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

      கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?"

      "கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன்.

     "ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான்.

முத்துக் கதைகள்

விடாமுயற்சியும் - உறுதியும்

     ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோர அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சீடரைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று குரு கேட்டார். அதற்கு அந்த சீடர், திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது என்றார்.
   இதே கேள்வியை மற்றொரு சீடரிடம் கேட்டபோது, துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், கரையைப் போல உறுதியாக நின்றால், துன்பங்கள் சிதறிப் போகும் என்றார்.
    இவற்றைக் கேட்ட குரு, சில நேரங்களில் அலைகளாய் இரு, சில நேரங்களில் கரையாய் இரு என்று சொன்னார்.

கடவுள் கொடுத்த வரம்

       ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

     அதற்கு, பணம், செல்வம், தங்கம், வைரம் என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை. உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது. ஆனால், ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

        கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. இருப்பினும், அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை. உடனே கடவுள், இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும் என்று கேட்டார்.


      அதற்கு அந்த ஏழை, எனக்கு அந்த விரல் வேண்டும் என்றார். இதைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்து விட்டார். 

Monday 12 June 2017

சில உளவியல் உண்மைகளும் ஆலோசனைகளும்

சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள், தனிமையில் வாடுபவர்கள்.
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
4. அழுகையை அடக்குபவர்கள், மனதால் பலவீனமானவர்கள்.
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள், மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள், அப்பாவிகள். மென்மையானவர்கள்.
7. சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள், அன்புக்காக ஏங்குபவர்கள்.

பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
9. குழந்தைகளோடு பேசும்போதுஅருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

(வாட்ஆப் வறுவல்)

Saturday 10 June 2017

நீர் நிலைகளில் இத்தனை வகைகளா?

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த  47 வகையான நீர்நிலைகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு
04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம்.
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீரத் தேக்கம்.
10. ஓடை - (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11 கட்டும் கிணக்கிணறு – (Built-in -well)  சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
12. கடல் - (Sea) சமுத்திரம்.
13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன்னெ 9ச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் – (Channel) நீரோடும் வழி.
16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.
18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. வாளி  (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி – ( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29. சுனை- (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.
38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47 வாய்க்கால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.




நேரத்தின் மதிப்பை யாரிடம் கேட்க வேண்டும் தெரியுமா?


ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல..!
நம் வாழ்க்கை...

Friday 9 June 2017

பணக்காரனாக வேண்டுமா?


(பணக்காரர்கள் சொல்லும் அறிவுரைகள்)  

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.  (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். (ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)

3. சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது. (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது. (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே. (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)


6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)