நம்பிக்கை தான் வாழ்க்கை
(கழுதையும், நாயும் பேசிக்கொண்டன)
கழுதை : என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்..
நாய் : அப்போ எங்கயாவது ஓடிப்போய்ட வேண்டியதுதானே..
கழுதை: நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், முதலாளி பொண்ணு எப்போ எக்ஸாம்ல குறைவா மார்க் வாங்கினாலும் 'இந்த கழுதையைத்தான் உனக்கு கட்டி வைக்கப்போறேன்' சொல்றான்.. அதான் வெயிட் பண்றேன்.
••••••
( ஜோடி ஒன்று பேசிக்கொண்டது )
பெண்: என் பிறந்தநாளுக்கு என்ன பரிசு தருவே..
ஆண்: என்ன வேணும்..
பெண்: ஒரு ரிங் குடு..
ஆண் : ஓகே.. ஒரு ரிங் குடுக்கறேன். ஆனா.. காலை அட்டெண்ட் பண்ணக் கூடாது. பேலன்ஸ் போய்டும்.
••••••
( வகுப்பறையில் ஆசிரியர் மாணவனிடம் )
ஆசிரியர் : கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்குது. அதுல ஒரே ஒரு மாங்காய் இருக்கு.. அதை நீ எப்படி பறிச்சிட்டு வருவே..
மாணவன் : என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சி, பறவை மாதிரி பறந்துபோய் அதை பறிச்சிட்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம், உனக்கு திடீர்னு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து குடுப்பான்?
மாணவன்: கடல் நடுவுல போய் மாமரத்தை வெச்சது உங்க அப்பனா சார்?
••••••
ஐந்து முட்டாள்கள்
மன்னருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் தோன்றியது. அமைச்சரை அழைத்து, ''இந்த நாட்டை நான் திறமையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருந்தாலும் இந்த நாட்டில் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?
''இருப்பார்கள் மன்னா..''
''அப்படியானால், இந்த நாட்டில் உள்ள முதல் 5 முட்டாள்களை கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவு போட்டார் மன்னர்.
அமைச்சர் ஆடிப்போனார். ஆனால், மன்னர் அல்லவா? எதிர்த்து பேசமுடியுமா? எனவே, தனது தலைவிதியை நொந்துகொண்டு, முட்டாள்களைத் தேடி புறப்பட்டார் அமைச்சர்.
ஒரு மாதம் கழித்து 2 பேருடன் அரசவைக்கு வந்தார் அமைச்சர்.
''என்ன அமைச்சரே.. நான் ஐந்து முட்டாள்களை அழைத்து வரச்சொன்னேன்.. நீர் 2 பேரை அழைத்து வந்திருக்கிறீர்களே'' என்றார்.
''ஐந்து முட்டாள்கள் இங்கே இருக்கிறார்கள் மன்னா..''
''அப்படியா.. எங்கே காட்டுங்கள் பார்ப்போம்'' என்றார் அரசர்
தன்னுடன் இருந்த ஒரு நபரைக் காட்டி, ''இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்துகொண்டு, துணி மூட்டையை தன் தலைமேல் வைத்துக் கொண்டிருந்தான். கேட்டதற்கு என்னை சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக் கூடாது அல்லவா என்றான். எனவே, இவன் நாட்டில் உள்ள ஐந்தாவது முட்டாள்''
''சரி அடுத்து?''
அடுத்தவனைக் காட்டி, ''இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமை மாட்டை தன் வீட்டுக் கூரைமேல் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான், இவன் நாட்டின் நான்காம் முட்டாள்''
''சரி அடுத்து?''
''அரசவையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு, முட்டாள்களை நாடு முழுவதும் தேடியலைந்த மூன்றாவது முட்டாள் நான்தான்''
மன்னர் சுவாரஸ்யமானார், "சரி இரண்டாது முட்டாள் யார்?"
"நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, அதைவிட்டுவிட்டு, முட்டாள்களை கண்டுபிடிக்கச் சொன்ன நீங்கள்தான் இரண்டாவது முட்டாள்"
அரசவையே ஆடிப்போனது. மன்னர் தனது தவறை உணர்ந்து கொண்டார். ஆனால், முதல் முட்டாள் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் அவரை ஆட்கொண்டது. "சரி அமைச்சரே.. முதல் முட்டாள் யார்?"
"வேலைவெட்டியையெல்லாம் விட்டுவிட்டு இதை படித்துச் கொண்டிருப்பவர்கள்தான் அரசே.."
••••••
தமிழில் என்ன?
டீக்கு தமிழில், 'தேநீர்' என்பது நமக்குத்தெரியும். காபிக்கு 'குளம்பி' என்பதும் தெரியும். மேலும் சில
உணவுப் பொருட்களின் தமிழ் பெயர் இதுவாம். பார்த்துவிட்டு சரியா சொல்லுங்க... தப்பா
இருந்தாலும் சொல்லுங்க..
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு அல்லது காய்மா
கேக் - கட்டிகை அல்லது கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயாசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்புக் குழம்பு, மென் குழம்பு
பஜ்ஜி- தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழுப்பம், பழுப்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்டிரிங்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கெட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
சர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்ட் - முறுவன்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
••••••
அரசியல் என்றால் என்ன?
மகன், தன்னோட அப்பாக்கிட்ட, "அப்பா, அரசியல்னா என்ன? என்று கேட்டான்.
அதற்கு அப்பா உதாரணத்தோட நீண்ட விளக்கம் கொடுத்தார், " நம்ப குடும்பத்தை எடுத்துக்கோ.. என்கிட்ட நிறைய பணம் இருக்கு அதனால நான்தான் மேல் தட்டு வர்க்கம். அம்மா என்கிட்ட பணம் வாங்கி செலவு செய்யறாங்க.. அவங்க அரசாங்கம். நம்ம வீட்டுல வேலை செய்யற வேலைக்காரி உழைக்கும் வர்க்கம். நீதான் மக்கள், உன் தம்பி பாப்பாதான் எதிர்காலம். இப்போ புரியுதா?"
"சுத்தமா புரியலை டாடி?"
"நல்லா யோசிச்சுப் பாரு புரியும்" என்றுவிட்டு அப்பா போய்விட்டார்.
அன்று இரவு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மகன், தம்பி பாப்பாவின் அழுகுரல் கேட்டு விழித்துக் கொண்டான். தம்பிப் பாப்பா, ஆடையிலோ ஆய் இருந்து நாஸ்தியாக இருந்தது. அம்மாவை எழுப்பினான். எழவே இல்லை. அம்மா பக்கத்தில் இருந்த அப்பாவைக் காணோம். வேலைக்காரியை கூப்பிடலாம் என்று அவள் அறைக்குப் போனால், அவளுடன் அப்பா ஜாலியாக இருந்தார். அறைக்கு வெளியே நின்று கத்திப் பார்த்தான் ஆனால், கடைசி வரைக்கும் யாரும் அவனுக்கு உதவி செய்யவே இல்லை.
மறுநாள் காலை அப்பா அவனிடம் வந்து, "என்னடா அரசியல்னா என்னன்னு புரிஞ்சுதா?" என்று கேட்டார்.
"ரொம்பத் தெளிவா புரிஞ்சுதுப்பா" என்றான் மகன்
"அப்படியா, வெரிகுட் என்ன புரிஞ்சுது சொல்லு"
"மேல்தட்டு வர்க்கம்(அப்பா), உழைக்கும் வர்க்கத்தை(வேலைக்காரியை) சுரண்டி எடுக்கும். அதை அரசாங்கம் (அம்மா) கட்டுக்காம தூங்கிட்டு இருக்கும். மக்களுக்கு (எனக்கு) உதவி செய்ய யாரும் வரமாட்டாங்க. எதிர்காலம் (தம்பி பாப்பா) நாறிப்போய்டும்"
அந்த மூன்று விஷயங்கள்
காத்திருக்காத மூன்று விஷயங்கள்
நேரம், மரணம், வாடிக்கையாளர்
சகோதர, சகோதரிகளை பகையாளியாக்கும் 3 விஷயங்கள்
நகை, பணம், சொத்து
யாராலும் திருட முடியாத மூன்று விஷயங்கள்
புத்தி, கல்வி, நற்பண்புகள்
இந்த மூன்று விஷயங்களை எப்போதும் நினைவு வைத்திருப்பது அவசியம்
உண்மை, கடமை, மரணம்
திரும்பப் பெற முடியாத மூன்று விஷயங்கள்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு, வாயிலிருந்து வந்த சொல், உடலிலிருந்து பிரிந்த உயிர்
வாழ்க்கையில் ஒரே முறை கிடைக்கும் மூன்று பொருட்கள்
தாய், தந்தை, இளமை
திரைமறைவில் இருக்க வேண்டிய 3 பொருட்கள்
சொத்து, பெண், உணவு
மரியாதை கொடுக்க வேண்டிய 3 நபர்கள்
தாய், தந்தை, குரு
இந்த மூன்றும் இருப்பவனே முழு மனிதன்
குரு, நண்பன், மனைவி
நல்ல பதிவு. ரசித்தேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி
ReplyDelete