Thursday 26 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 4


அப்படீங்களா?

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
• யானையின் கால் தடத்தின் நீளத்தை அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
• கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம். 
• 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
• ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
• வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
• ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
• பெரியார் பொதுக் கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். 
• தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் குங்பூ வீரர் ஆனார் - புருஸ்லீ.
• ‘தாஸ் காப்பிட்டல்’ நூல் எழுத காரல் மார்க்ஸூக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
• சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
• விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
• சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
• யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
• நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
• டால்பின் ஒரு கண்ணை திறந்துகொண்டே தூங்கும்
• புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
• மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
• நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
• எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.


ஒரு குட்டிக்கதை 

ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடத் தருகிறேன்” என்றாள்

அதற்கு அவர்கள், “வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா?” என்று கேட்கிறார்கள்.

“வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்”.

“அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம்” - என்று கூறுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கூறுகிறாள். அதற்கு அவன், “நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்து வா” என்கிறான். 

அவள் வந்து மூவரையும் அழைக்கிறாள், அதற்கு அவர்கள். “நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது” என்கிறார்கள்.

“ஏன் அப்படி?” என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து. “இவர் செல்வம்” என்றும், மற்றொருவரை காண்பித்து. “இவர் வெற்றி” என்றும், “நான் அன்பு” என்றும் கூறி. “உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்” என்று அவளிடம் கூறுகிறார்.

அந்த பெண் கணவனிடம் வந்து முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..அதை கேட்ட கணவன், மகிழ்ந்து, நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று மனைவியிடம் கூறுகிறான்.

ஆனால், மனைவியோ, நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கலாமே  என்கிறாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? கூறுகிறாள்.

மகளின் ஆசைப்படி அன்பை வீட்டிற்கு அழைக்க கணவனும், மனைவியும் முடிவு செய்கின்றனர். அதன்படி, மனைவி, வீட்டிற்கு வெளியே வந்து, முதியவர்களைப் பார்த்து,  உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரவேண்டும்  என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் ? என்கிறாள். 

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.



பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம் என்ன தெரியுமா? கீழே உள்ள டயலாக்கை படிச்சுப் பாருங்க.. புரியும்..

முதல் நாள் 

பெண் : எனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்காடா?
ஆண் : செம சூப்பரா இருக்குப்பா.

இரண்டாம் நாள் 

பெண் : எனக்கு இந்த கிரீன் சாரி எப்படி இருக்கு?
ஆண் : வாவ்வ்...வெரி நைஸ்டா.

மூன்றாம் நாள் 

பெண் : நான் இன்னைக்கி ஜீன்ஸ், டாப்ஸ்ல எப்படி இருக்கேன்?
ஆண் : ரெம்ப அழகா இருக்கே செல்லம்.

நான்காம் நாள் 

பெண் : நான் இந்த சல்வார்ல நல்லா இருக்கேனா?
ஆண் : நீ எது போட்டாலும் உனக்கு சூப்பரா தான்டா இருக்கும்.

ஐந்தாம் நாள் 

ஆண் : இப்ப நீ சொல்லு, நான் இந்த ஜீன்ஸ், டி-சர்ட்ல எப்படி இருக்கேன்?
பெண் : அய்யோ,என்னடா கலர் இது. உனக்கு நல்லாவே இல்ல. ஜீன்ஸ்ல வேற மாடலே கிடைக்கலயா.உனக்கும் டி-சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்லடா. நல்லா மேட்சிங்கா போடுடா.

# நீதி : எதையுமே அழகாக பார்ப்பது ஆண்கள். எல்லாத்திலும் குறை சொல்வது பெண்கள். ஆமாவா? இல்லையா...


சினிமா பாடல்களைத்தான் ரீமிக்ஸ் பண்ணணுமா என்ன, ஒரு சேஞ்சுக்கு ரீமிக்ஸ் கவிதையைத் தான் படிச்சுப் பார்ப்போமே.. அதுவும் வைரமுத்துவோட பிரபலமான கவிதை இது.. படிச்சா உங்களுக்கே தெரியும். முடிஞ்சா அவரோட குரல்லயே படிச்சுப் பாருங்க..

கல்யாணம் பண்ணிப்பார்.

உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்'
தோன்றும்...
அப்பவே கண்ணைக் கட்டும்
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையில் கொடூரம் புரியும்...
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்...
ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்...
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்...
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின்,
கிரைண்டர்,மிக்ஸி கண்டுபிடித்தவன் தெய்வமாவான்...
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்...
காத்திருந்தால்...
'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்...
'வந்திட்டியாடி செல்லம் போலாமா'
என்பாய்...
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்கமாட்டாள் -ஆனால்,
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில் மிதிக்க, கடன்
கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையன்று உருளக்
காண்பாய்...
கல்யாணம் பண்ணிப்பார்...
இருதயம் அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல் ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதி கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்...
ஆனால்உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒற்றை
சவுண்டில் 
சப்த நாடியும்
அடங்கிவிடும்...
கல்யாணம் பண்ணிப்பார்...!


உங்களையெல்லாம் யார்ரா இப்படி யோசிக்க சொல்றது? 

சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.
வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...
கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.
நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டு வந்தா ஆது ஜாக்கிங்
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்,
5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தாய். 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது சகோதரி. 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தோழி. 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானப்படுத்த முடியவில்லையெனில், அது காதலி. உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி....
தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..
வாக்கிங் போறது எளிதானது தான்...வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஷ்டமானது..
உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மளைத் தவிர யாருக்கும் வராது..
கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதியைத் தரவல்லது.
மதம் மாறினால் தான் கடவுள்ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுளா, கட்சித் தலைவரா? 
ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போலஃபீல் பண்ணுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போனஅன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பண்ணுவாங்க ஆண்கள்..
இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவனை விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் பக்கமெல்லாம் வராதவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்
• குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதை கதையா சொல்லுதுங்க..
காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில்,கீரை விலை ஏறாமல் சில்லறையில் கிடைப்பது, நம் உடல்ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..
ஆபிஸ் போற அன்னைக்கு 9 மணி வரைக்கும் தூக்கம் வரும். சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # எல்லாம் விதி


ஹலோ யார் பேசறது?..

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்.. ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . .
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! ."நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?" .
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அதைபத்தி மட்டும் கேளுங்க..!"
"கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" .
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." .
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! " .
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா...ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்!! .
"சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..? .
"இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!"

# ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?



நகைச்சுவை (அசைவம்)

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வைத்திருந்தார். யாரவது பொய் சொன்னால் ரோபோ கன்னத்தில் பளார் என்று அறையும். ஒரு முறை தொழிலதிபா¤ன் மகன் இரவு வீட்டுக்கு லேட்டாக வந்தான் 
தொழிலதிபர் :  ஏன்டா லேட்டு ? எங்கேடா போயிருந்தே?
மகன் : அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்கப் போயிருந்தேன்
ரோபோ மகனின் கன்னத்தில் அறை விட்டது. 
தொழிலதிபர் : (கோபமாக மகனிடம்) ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அறை வாங்குவே.
மகன் :  மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமாவுக்கு போயிருந்தேன்
தொழிலதிபர் : டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்டே..நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ?
ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது. அப்போது அங்கே தொழிலதிபா¤ன் மனைவி வருகிறாள்.   
மனைவி : என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..
இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது


ஏன்டா இப்படி?   

குமாருக்கு நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. காரணம் அது அவன் மனைவி வளர்க்கும் நாய். ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமார், மறுநாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம் வீட்டில் நாய்!

மூன்றாம் நாள் காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.
இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள். அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!


ஆண்கள் தானுங்கோ எப்பவும் 'பெஸ்ட்'. ஏன்னு கேக்கறீங்களா? பின் வருவனவற்றை படிச்சுப் பாருங்கோ.. நீங்களே சொல்லுவீங்கோ.. 

1. மொக்க ஃபிகர் எனி ஹெல்ப்னு (உதவி) கேட்டாக்கூட பரவாயில்லன்னு உதவி செய்வாங்க.
2. ஐ லவ் யூ சொன்னா Ôவாட்? நான்சென்ஸ்னு என்னைக்கும் சொன்னதில்லை..
3. நீயும் மத்த ஆம்பிளைங்க மாதிரி தான். நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, ரெண்டையும் சொல்றது பொண்ணுங்க தான்.
4. குஸ்காவில் சின்ன பீஸ் வந்தாலும் குதுகளிக்கும் குழந்தை மனசுக்காரன்-ஆண் 
5. மனைவி எவ்வளவு அடித்தாலும் வெளியே சொல்லி புலம்பாமல் இருப்பதால்..
6. என் பொண்டாட்டி, பக்கத்துக்கு வீட்டுக்காரன் பொண்டாட்டின்னு பிரிச்சு பார்க்க
மாட்டான் 
7. தங்கைகளுக்கு மணமாகும் வரை நாற்பது வயதானாலும் காத்திருப்பான்..
8. சுமாரா இருக்குற பொண்ண கூட தங்கச்சின்னு சொல்லி அசிங்கப்படுத்த
மாட்டான் 
9. துணிக்கடைக்கு போன 'உடனே' டிரஸ் எடுத்திட்டு வந்துடுவோம், ஜவுளிக்
கடைல வேலை பாக்குற பொண்ணுங்கனை பாடாய் படுத்தமாட்டான்.
10. கஸ்டமர் கேர் பொண்ணாவே இருந்தாலும், சாப்பிடிங்களான்னு விசாரிப்பான்..
11. பொண்ணுங்க சைக்கிள் பஞ்சர் ஆனதும், அவன் சைக்கிள்ல காத்த இறக்கி விட்டு நடந்து வருவான்...
12. வீட்டு வருமானத்துக்கு உழைக்கிறான். நாட்டு வருமானத்துக்கு குடிக்கிறோம்.
13. முக்கியமா. டி.வி சீரியல் பார்த்து நாசமா போகமாட்டான். 

# என்னங்க நான் சொல்றது சரிதானுங்களே...





No comments:

Post a Comment