Monday 30 November 2015

கத்தரித்தவை - 1


வாட்ஸ் ஆப் வறுவல் - 21 நாம எவ்வளவு ஏழையா இருக்கோம்?

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர். 
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், " அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா...? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? " 
. 
மகன் சொன்னான், " நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க... " 
. 
. 
தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான், 
"ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு..." 

''Money doesn't make us rich" இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும். 


Thursday 22 October 2015

வாட்ஸ் ஆப் வறுவல் 20 "பரம்பரை "யின் உண்மையான பொருள்!


நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு. பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள் :
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள் :

நாம் - முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை
ஒரு தலைமுறை - சராசரியாக  60 வருடங்கள்
என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
என்று பொருள் வரும்.
நமக்குத் தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

வாட்ஸ் ஆப் வறுவல் 19 படிச்சிட்டு காண்டாவாதீங்க.. முடிஞ்சா சிரிங்க பாஸ்

 "பிளேடு ஹோட்டல்"

SERVER        : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
CUSTOMER : தோசை வேணும்.
SERVER        : சாதா தோசையா? வெங்காய தோசையா?
CUSTOMER : வெங்காய தோசை.
SERVER        : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
CUSTOMER : சின்ன வெங்காயம்.
SERVER        : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
CUSTOMER : நாட்டு வெங்காயம்.
SERVER        : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
CUSTOMER : சின்னதா நறுக்குனது.
SERVER        : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
CUSTOMER : அதிகமா.
SERVER        : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
CUSTOMER : அறுத்துட்டே போடு.
SERVER        : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?
CUSTOMER : சிவப்பு.
SERVER        : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?
CUSTOMER : அதிகமா உள்ளது.
SERVER        : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?
CUSTOMER : உரம் போடாதது.
SERVER        : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?
CUSTOMER : கழுவிட்டு போடு.
SERVER        : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?
CUSTOMER : நல்லா வேகணும்.
SERVER        : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?
CUSTOMER : நெய்.
SERVER        : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?
CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.
SERVER        : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.
(சாப்பிட்ட பிறகு)
SERVER        : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.
CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?
SERVER        : கேஷ்
CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?
SERVER        : நோட்டா தாங்க.
CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா?
SERVER        : புதியது.
CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?
SERVER        : காந்தி படம் போட்டது.
CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?
SERVER        : கண்ணாடி போட்டது.
CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?
SERVER        : சாதா கண்ணாடி.
CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?
SERVER        : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன். நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.
CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் இப்படி பண்ணுவே.


வாட்ஸ் ஆப் வறுவல் 19 எதில் மகிழ்ச்சி?

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து அதில் தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். 

இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை, அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இதுதான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை. நம் சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்'.

வாட்ஸ் ஆப் வறுவல் 18 எதுவும் சாத்தியம்

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர்.

ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி, அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

“எப்படி?” என்று வியாபாரி கேட்டான்.

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் பயன்படுத்தலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான், “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

“எப்படி?” என்று வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.

“காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் செல்பவர்களின் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.

அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான், “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

“எப்படி?” என்று வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும். அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். ஆனால், புத்திசாலித்தனமாக யோசித்தால் எதுவும் சாத்தியம் தானே? 

Monday 19 October 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 17 தளபதி கேட்ட பரிசு

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான். 

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான். "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன். 

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான். மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான். 

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான். 

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான். 
அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள். 

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான். 

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள். 

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்" 

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான். அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

வாட்ஸ் ஆப் வறுவல் - 16 கிணத்தைக் காணோம்

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். 

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். 

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான். 

விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான். 

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான். 

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.  நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார். 

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

வாட்ஸ் ஆப் வறுவல் - 15 நோயின்றி வாழ நம்மாழ்வாரின் 4 வழிமுறைகள் !

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’ 

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், நகர வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’ நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய நினைவே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. 
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. 
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம். 
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு நம்மிடத்தே உண்டு’ என்கிறார் நம்மாழ்வார்.!

Monday 3 August 2015

தெரியுமா இவரை - 15 டாக்டர் அம்பேத்கார்

நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''

- டாக்டர் அம்பேத்கர்

"இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை" என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார், மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் அம்பாவாடே என்ற கிராமத்தில் 14.04.1891 நாள் பிறந்தார். தந்தை ராமாஜி மாலோஜி. தாய் பீமாபாய். ஏழைக் குடும்பமான இவர்களுக்கு 14 குழந்தைகள். கடைசிப் பிள்ளைதான் அம்பேத்கார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் பீமாராவ் ராம்ஜி. 

மகார் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அம்பேத்கார் கல்வி நிலையங்களில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். உயர்ந்த சாதிப்பிள்ளைகளும், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் தாழ்ந்த சாதிப்பிள்ளைகளைக் கேவலமாக நடத்தினர். தாழ்ந்த சாதிப்பிள்ளைகள், உயர் சாதிப்பிள்ளைகளுடன் சேர்ந்து உட்காரக்கூடாது, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பேசக்கூடாது, தொடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தனர்.

இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு படிக்க வேண்டுமா என்றுகூட அம்பேத்கார் நினைத்தது உண்டு. ஆனால், அதே பள்ளியில் பணியாற்றிய அம்பேத்கார் என்ற அந்தண ஆசிரியர் ஒருவரின் அன்பும் அரவணைப்பும் அவர் எண்ணத்தை மாற்றின. தாழ்த்தப்பட்டவர்களும் மனிதர்களே. அவர்களையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய கொள்கையுடைய அந்த ஆசிரியர், அம்பேத்கார் படித்து முன்னேற எல்லா உதவிகளையும் செய்தார். அவருடைய அன்புக்கு அடிமையான அம்பேத்கார், பீமாராவ் ராம்ஜி என்ற தன் பெயரை "அம்பேத்கார்" என்று மாற்றிக்கொண்டார். அன்று முதல் அவர் பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (பி.ஆர்.அம்பேத்கார்) என்று வழங்கப்படுகிறது.

14-வது வயதில் மெட்ரிகுலேஷன் படித்துத் தேறியதும், அம்பேத்காருக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தார். மனைவி பெயர் ராமாபாய். பிறகு பம்பாய் கல்லூரியில் இண்டர் மீடியட் படித்து முடித்தார். அடுத்து பரோடா மன்னரின் உதவி பெற்று "பி.ஏ." படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் பரோடா அரசின் படையில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் மற்றவர்களால் தொல்லை. இடையில் தந்தை காலமாகி விடவே, வேலையை விட்டுவிட்டு பம்பாய் திரும்பினார்.

மேலும் படிக்க விரும்பிய அம்பேர்காருக்கு வீட்டு பொருளாதாரச் சூழல் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் பரோடா மன்னரின் உதவி பெற்று 1913-ம் ஆண்டு அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பின்னர், பல சிரமங்களுக்கு இடையே லண்டன் சென்று படித்து, "எம்.எஸ்சி" பட்டம் பெற்று பம்பாய் திரும்பினார். மேலும் படித்து "பாரிஸ்டர்" பட்டம் பெற்று வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக ஒரு சங்கத்தை நிறுவி, அவர்களின் நலனுக்காக பாடுபட்டார். அவருடைய சேவையைப் பாராட்டி பம்பாய் மாகாண கவர்னர், பம்பாய் மேல்_சபை உறுப்பினர் பதவியை அம்பேத்காருக்கு அளித்தார்.

மாகாத்து என்ற நகரில் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. அம்பேத்கார் அங்கு சென்று, இதைக் கண்டித்துப் பேசினார். அவரே குளத்தில் இறங்கி நீர் அருந்தினார். தாழ்த்தப்பட்ட மற்றவர்களும் நீர் அருந்தினர். பெரும் மோதல் ஏற்பட்டு, பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றமும், எல்லா மக்களும் குளத்தில் நீர் எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. 

அம்பேத்காரின் மனைவி ராமாபாய் 27.05.1935 அன்று காலமானார். 

"சுதந்திர தொழிலாளர் கட்சி" என்ற கட்சியை தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் அம்பேத்கார். அவரது முயற்சியால், பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைத்தது.

உயர்ந்த சாதியினரை உறுப்பினர்களாகக் கொண்டு இருந்த வைசிராய் நிர்வாக சபையில், அம்பேத்காரின் சேவையைப் பாராட்டி அவரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அத்துடன் தொழிலாளர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பதவி வகித்தார். 

1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணயசபை செயல்படத் தொடங்கியது. அதில், சட்டம் இயற்றும் குழுவில் அம்பேத்காரும் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவினர் இயற்றியதுதான் இந்திய அரசியல் சட்டம்.

சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பு ஏற்றதும், அவரது அமைச்சரவையில்  அம்பேத்கார் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார்.  அரசியல் நிர்ணய சபையின் 3-வது கூட்டத்தில், தீண்டாமையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அம்பேத்காரின் நீண்ட கால முயற்சி வெற்றி பெற்றது.

அம்பேத்கார், உடல் நலம் குன்றி பம்பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், மருத்துவமனையில் அவரை கவனித்துக் கொண்ட சாரதா என்ற டாக்டரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் பிராமண வகுப்பைச் சேர்ந்த சாரதா அம்மையார், கலப்புத் திருமணத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இந்து மதத்தின் மீது சலிப்பு அடைந்த அம்பேத்கார், 1956 அக்டோபர் மாதம் இந்து மதத்தை விட்டு, மனைவி சாரதா அம்மையாருடன் புத்த மதத்தைத் தழுவினார். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கார் 1956 டிசம்பர் 6-ம் தேதி காலமானார். 1990-ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Saturday 4 July 2015

தமிழக கிராமங்களில் இது அதிகமாமே..

நாட்டிலேயே தமிழக கிராமப்புற இல்லங்களில்தான் மொபைல் போன்களும், இருசக்கர வாகனங்களும் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பு நேற்று (03.07.2015) வெளியானது. தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில், 24.39 கோடி வீடுகள் உள்ளன. இவற்றில் 17.91 கோடி வீடுகள் கிராமங்களில் உள்ளன. இந்த வீடுகளில் 10.69 கோடி வீடுகள் பின்தங்கியவையாக கருதப்படுகின்றன.

ஊரகப் பகுதியில் உள்ள 5.37 கோடி வீடுகளில் வசிப்பவர்கள் (29.97%) நிலமற்றவர்கள். 2.37 கோடி குடும்பங்கள் ஓர் அறை உள்ள கச்சா வீடுகளில் வசிக்கின்றனர். எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேரந்த 3.86 கோடி குடும்பத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தமிழக கிராமப்புறங்களில் வசிப்பவர்களே நாட்டிலேயே அதிகளவில் மொபைல் போன், இருசக்கர வாகனம் அதிகமாக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள 29.91% இல்லங்களில் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. அதேபோல், தமிழக கிராமப்புறங்களில் மொபைல் போன் பயன்படுத்தவர்கள் 29.91%.

அதேவேளையில், தமிழகத்தில் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் கிராமவாசிகள் வெறும் 12.10% மட்டுமே. அதிலும், சொந்மாக விவசாய நிலம் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 5.01% என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 14 June 2015

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்...


[?] ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். 

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ[?]. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார். 

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். 

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." 

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...[?]!". 

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் [?] செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது." 

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? " 

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை". 

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...[?]!"[?][?] . .

சின்னச் சின்ன சிரிப்புக்கள்

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

*****

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி:- எப்போ சொன்னீங்க…நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????

*****

நபர்1: இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?
நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…

*****

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”
அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற!
அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!
( அதானே அடுத்தவன் சந்தோசமா இருக்கப்படாதே ! என்னா ஒரு கொல வெறி !)

*****

மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,

போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலறல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.
அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...
காபி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் என் படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

*****

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?


*****

கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது மனைவி சற்று தொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....

Banaras saree Rs10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-

மனைவி: 500 ரூபாய் பணம் கொடுங்கள்... நான் 50 புடவை வாங்கனும்

கணவன்:  அது இஸ்திரி போடும் கடைடி எரும மாடு

வாட்ஸ் ஆப் வறுவல் - 13 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்..

விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Monday 25 May 2015

தானம் தாமதமாவதால் தவிக்கும் உயிர்கள் .


இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேர், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். மூளைச் சாவு அடைந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. உரிய நேரத்தில் சிறுநீரகம் கிடைக்காமலும், டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) பலன் அளிக்காததாலும் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. 

தமிழகத்திலும் சிறுநீரக பாதிப்புகள் அதிகம். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தில் சிறுநீரகம் வேண்டி கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் முதல் 4,704 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் செய்வதில், நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனாலும், உறுப்புகள் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. மூளைச்சாவு உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், , மூளைச்சாவை உறுதி செய்து டாக்டர்கள் சான்று அளிக்க தயக்கம் காட்டுவதால், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாமல் போகிறது. இதுவே, உடல் உறுப்புகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 160 சிறுநீரகங்கள் தானமாக கிடைக்கிறது. 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் வரை மூளைச்சாவு அடைந்த 620 பேரிடம் இருந்து 1,113 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

சிறுநீரகங்கள் செயலிழந்த ஒருவர், 3 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து டயாலிசிஸ் செய்துகொள்வது கடினம். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் சிறுநீரகம் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம் பொருத்தப்படுகிறது. தவிர நெருங்கிய ரத்த சொந்தங்கள், சிறுநீரகத்தை தானமாக கொடுக்கின்றனர். தூரத்து உறவினர்கள், நண்பர்களின் சிறுநீரக தானத்தை கமிட்டி ஏற்பதில்லை. சிறுநீரக பற்றாக்குறைக்கு இதுவும் காரணம்.

தானம் செய்ய முன்வருவோர், உண்மையான உறவினர்களா, நண்பர்களா என்பதை கமிட்டி விசாரித்து அவர்களது சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் (பிபி) போன்றவையே முக்கிய காரணங்கள். பரம்பரையாக சிறுநீரக பாதிப்பு, அதிகமாக மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீர் வெளியேறுவது குறைதல், ரத்தம் வெளியேறுதல், முகம், கை, கால்களில் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகள். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அறிகுறிகள் தெரியாது. எனவே, அடிக்கடி சிறுநீரக பரிசோதனைகள் அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

Friday 22 May 2015

தெரியுமா இவரை - 14 ஹோசிமின்

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். 

1890-ம் ஆண்டு பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். அவரது இயற்பெயர்  சிங்சுங். ஹோசிமின்' என்ற பெயருக்கு 'ஒளி தந்தவர்' என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி ஏற்றியவர் என்பதால், மக்கள் ஆசையுடன் வைத்த பெயர் ஹோசிமின்.!

பிரான்ஸ் நாடு தனக்கு தோதானவர்களை வியட்நாம் அரசின் பதவியில் அமர வைத்து,  பொம்மலாட்ட அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலம். அதை எதிர்த்து புரட்சியாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த கொரில்லா படைக்கு தகவல்களை கொண்டு போகும் ஆபத்தான வேலையை சிறுவனா இருந்த ஹோசிமின் செய்துகொண்டிருந்தார். நாட்டு விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே அதற்குக் காரணம். 


இளைஞனாக வளர்ந்ததும் பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான பல போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். எனினும், அந்த போராட்டங்களுக்கு எந்த பலனும் கிட்டாததால் சோர்வு ஏற்பட்டதுதான் மிச்சம். பின்னர், பிரான்ஸ் நாட்டில் தபால் அலுவலகத்தில் அவருக்கு வேலை கிடைக்க, அங்கு பணியில் சேர்ந்தார். 


அவர் அந்த வேலையில் சேர முக்கியக் காரணம், பிரெஞ்சு புரட்சி எப்படி நடைபெற்றது, அதை எப்படி அவர்கள் சாதித்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காகத்தான். விரும்பியபடியே, அந்த புரட்சி குறித்த தகவல்களை சேகா¤த்துக் கொண்டபின், அவர் 1940-ம் ஆண்டு அவர் வியட்நாமுக்குத் திரும்பினார். 

அந்த காலக்கட்டத்தில், பிரான்சிடமிருந்த வியட்நாம், ஜப்பானின் கைகளுக்குப் போனது. பிரான்ஸ், ஜப்பான் ஆகிய இரண்டு கொள்ளிகளில், ஜப்பான் அவர்களுக்கும் தேவலாம் என்று பட்டது. எனவே, ஜப்பானியர்களுக்கு வியட்நாம்வாசிகள் வரவேற்பும் அளித்தார்களாம். 

யாரிடம் அடிமைப்பட்டிருந்தால் என்ன, அடிமை, அடிமைதானே? எனவே, ஜப்பானியர்களையும் விரட்டியடித்து சுதந்திரத்தை நாம் சுவாசிக்க வேண்டும் என்று ஹோசிமின் முழங்கினார். அவரை நசுக்க ஜப்பான் அரசு முயற்சி செய்ய, வியட்நாமின் அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சமடைந்தார் ஹோசிமின். 

அந்த காட்டிற்குள் இருந்தபடியே, கொரில்லாப் படையை உருவாக்கி, வாய்ப்புக்காக காத்திருந்தார் அவர். அந்த வாய்ப்பு அவருக்கு சரியாக அமைந்தது. 1945-ம் ஆண்டு ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டிருந்த காலம். அந்த பேரழிவின் அதிர்ச்சிலிருந்து ஜப்பான் சுதாரிக்க முடியாத நிலையில் இருக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானிடமிருந்து வியட்நாமை அபகரிக்க காய்களை நகர்த்தியது பிரான்ஸ். 

ஆனால், அந்த வாய்ப்பை பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்காமல், முந்திக்கொண்ட ஹோசிமின், ஜப்பானியர்களை விரட்டியடித்துவிட்டு வியட்நாமை கைப்பற்றினார். அதே வேகத்துடன் வியட்நாமை சுதந்திர நாடாகவும் பிரகடனப்படுத்தினார். 

உடனுக்குடன் தேர்தலையும் நடத்த, ஹோசிமின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிபட்ட நாகமாக இருந்த பிரான்ஸ், வியட்நாம் மீது போர் தொடுத்தது. 

யுத்தம் ஆரம்பமானது. போர்க்கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள் என சகல நவீன ஆயுதங்களுடன் வந்த பிரான்சை, குறைந்த ஆயுதங்களுடன் இருந்த வியட்நாம் ¬தா¤யமாக எதிர்கொண்டது. எப்படியும் நாம்தான் ஜெயிப்போம் என்ற அகங்காரத்தில் பிரான்ஸ் படைகள், கொஞ்சம் அலட்சியத்துடன் போரிட, காட்டுக்குள் கடுமையான கொரில்லா போர்முறையை பயின்ற வியட்நாம் வீரர்கள் அசுர வேகத்துடன் போராட்டார்கள். வாழ்வா, சாவா பிரச்னை அவர்களுக்கு. முடிவில் வியட்நாம் வீரர்களே வெற்றி பெற்றார்கள். 


வியட்நாம் வெற்றியை ஈட்டினாலும், தெற்கு வியட்நாம் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வடக்குப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். நாட்டை முழுமையா மீட்டே தீருவன் என சபதமிட்டார் ஹோசிமின். 

ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரைக் குத்தி, அமொ¤க்காவிடம் உதவி கேட்டது பிரான்ஸ். கம்யூனிஸ்ட்களை எட்டிக்காயாக பார்க்கும் அமொ¤க்கா, பிரான்ஸ் நாட்டுக்கு ஆயுத உதவி செய்தது. 

பின்னர், அமொ¤க்காவின் உபயத்தால், வியட்நாமில் ஆயுத மழை பொழியத் தொடங்கியது. ஆனால், தளராமல் பிரான்ஸ் நாட்டுக்கு தண்ணிக் காட்டினார் ஹோசிமின். வெறுத்துப்போன அமொ¤க்கா, 1965-ம் ஆண்டு நேரடியாக களமிறங்கியது. இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாம் மேல் குண்டு மழை பொழியத் தொடங்கியது அமெரிக்கா. ஆனால், கொரில்லா படையில் நிபுணத்துவம் பெற்ற வியட்நாம் வீரர்கள் முன்னால் எந்த ஆயுதமும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வியட்நாம் முன்னால் மண்டியிட்டது அமொ¤க்கா. வடக்கு வியட்நாமை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று ஹோசிமினுடன் சமாதானத்துக்கு வந்தது அமெரிக்கா. 

அதை ஏற்காத ஹோசிமின், சுதந்திர நாடே எனது லட்சியம் என்பதில் உறுதியாக இருந்தார். 

1968ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரம். 
சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினின் படைகள் திடீரென வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு, அமெரிக்க தூதரக அலுவலகத்தை  கைப்பற்றினார்கள். 

எரியும் புத்த பிட்சு 
இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.  கம்யூனிஸ்ட் என்று சந்தேகம் எழுந்ததால், அப்பாவி பொதுமக்களையும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஹோசிமினுக்கு ஆதரவாக புத்த பிட்சுகள் போராட்டங்களில் குதித்தார்கள். அவர்களது போராட்டமுறை வேறுவிதமாக இருந்தது. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இன்றி புத்த பிட்சுகள் தங்களை தாங்களே நடுரோட்டில் எரித்துக் கொண்டார்கள். இதையெல்லாம் பார்த்த அமெரிக்க மக்கள், அமெரிக்க அரசை குறை சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தததால், வியட்நாமிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் நிக்சன். 

அப்படி அறிவித்தாலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் இருந்தது. 1972-ம் ஆண்டு மார்ச் மாதம், ஒரு வியட்நாம் கிராமம் மீது நோப்பாம் என்ற குண்டை அமெரிக்கா வீச, அந்த கிராமமே தீப்பற்றி எரிந்தது. அந்த சம்பவத்தில் தன் உறவுகளை இழந்த சிறுமி ஒருத்தி நிர்வாணமாக ஓடி வர, அந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி, உலகத்தை உலுக்கியது. உலக நாடுகள் அமொ¤க்காவை கண்டிக்க, வேறு வழியே இல்லாமல் படைகளை வாபஸ் வாங்கியது அமெரிக்கா. 


வட வியட்நாம், தென் வியட்நாமுடன் இணைந்து ஒரே சுதந்திர நாடானது. ஆனால், அந்த கனவுக்காக போராடின ஹோசிமின், சுதந்திர நாடான வியட்நாமை பார்க்க உயிருடன் இல்லை. அதற்கு முன்னதாகவே அவர் மறைந்துவிட்டார். வெற்றிக்கு அருகே அழைத்து வந்த, அந்த தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள், ஒருங்கிணைந்த வியட்நாம் தலைநகரான சைகோனுக்கு ஹோசிமின் சிட்டி என்று பெயர் வைத்து கவுரவப்படுத்தினார்கள். 

Sunday 17 May 2015

இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் 1,300 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR), தேசிய புற்றுநோய் பதிவக திட்ட, தகவலின்படி 2012-ம் ஆண்டு முதல், 2014-ம் ஆண்டுவரையில் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 6 சதவீதம் உயர்ந்து உள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய சுகாதாரத்துறை தகவலின்படி “2014ம் ஆண்டு மட்டும் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் சுமார் 5 லட்சம் வரையிலானோர் உயிரிழந்தனர்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,20,179 ஆக பதிவாகிஉள்ளது. இறப்பு எண்ணிக்கையானது 4,91,598 ஆகும். 

2013-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,34,314 ஆகும், இதே வருடத்தில் புற்றுநோய் காரணமாக 4,78,180 பேர் உயிரிழந்து உள்ளனர். 2012-ம் ஆண்டில் புற்றுநோய்க்கு சுமார் 4,65,169 பேர் தங்களது உயிரை இழந்துஉள்ளனர். இதே வருடத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,16,628 ஆகும். 
“வயது முதிர்வு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளைகள், புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், ஆரோக்கியமற்ற உணவுமுறைகள். நோய் நிர்ணய பரிசோதனை வசதிகள் குறைபாடு, ஆகியவை காரணம் சில காரணங்களால் புற்றுநோயினால் இறப்போர் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நாட்டில் புற்றுநோய் சிறப்பு ஆலோசனைக்கும், வசதிகளை வலுப்படுத்தும் வழிமுறைகளை மாநிலங்களில் பரப்பவும் மத்தியஅரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. புற்றுநோயை தொடர்ந்து இந்தியாவில் அதிகபேரது உயிரை வாங்கிய நோயாக காசநோய் உள்ளது. நாட்டில் 2011ம் ஆண்டு காசநோய்க்கு 63,265 பேரும், 2012ம் ஆண்டு 61,887 பேரும், 2013ம் ஆண்டு 57,095 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்டு உள்ள தகவல்கள் இதனை காட்டுகிறது. அரசு நோயாளிகளுக்கு காசநோய் எதிர்ப்பு மருந்து உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. 

சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில், தரமான ஆய்வுக்கு நுண்ணோக்கியியல் மையங்களை அரசு நிறுவிஉள்ளது. இதேபோல் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பழங்குடியின மற்றும் மலைப்பகுதிகளிலும் ஆய்வு மையங்களை அரசு அமைத்து உள்ளது. நாட்டில் அரசு 13,000 நுண்ணோக்கியியல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 6 லட்சம் நேரடி சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday 14 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 12

தோணுச்சு 

* சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்.
* வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!
* எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்!
* விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது!
* உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!
* பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது!
* ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
* நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாகியிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!
* சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!
* ‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!
* சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!
* ஆடுகள் ஆடுகின்றன! கோழிகள் குதிக்கின்றன! பல வீட்டின் குழம்புச் சட்டியில் இன்று!



பழைய தலைமுறை 

ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்.
ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!
கேலண்டர் அட்டையை பரீட்சை அட்டையாக பயன்படுத்தி தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.
மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .
கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.
காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் 
இருக்கும்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்
கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்
ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்
நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை 
இதெல்லாம் போச்சு.
நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி நீயீநீ பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்
இதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.



"பரம்பரை" என்பதன் பொருள் என்ன?

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு. 
பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி
நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
ஒரு தலைமுறை - சராசரியாக  60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..




ஆண்கள் ரொம்ப பாவம் 


ஆண் என்பவன்..
கடவுளின் உன்னதமான படைப்பு

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, 
தன் கனவுகளை தியாகம் செய்பவன்

காதலிக்கு பரிசளிக்க , 
தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக, 
தன் இளமையை அடகுவைத்து 
அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, 
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், 
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, 
தாங்கிக்கொண்டே ஓடுபவன்

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே 
ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன் 
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், 
கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
எனவே, ஆண்களின் உலகம், தியாகங்களாலும்  வியர்வையாலும் சூழப்பட்டது.


மணிரத்னம் - திரைப்படங்கள் ஒரே ஒரு பார்வை 

தான் கொன்றவனின் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி
தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே
வாழ்ந்துவிட்டு தாலி கட்டினால் - ஓ கே கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா 


தத்துபித்துவங்கள் 

* செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா,  நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

* இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்....சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

* என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்... ரயில் ஏறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்...
இதுதான் வாழ்க்கை .

* பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்...ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா.. ஃபுல்லு வருமா..? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

* என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

* டிசம்பர் 31க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்... இதுதான் உலகம்.

* பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்...ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்...சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்...ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ? யோசிக்கணும்............ ...!!

* இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனா, பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

* ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான்  டிரைவ்
பண்ண முடியும் .

* தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!)

* வாழை மரம் தார் போடும் ஆனா.......அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ!)

* பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்...ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா..? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

* சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.. அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

* பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்...கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

* பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்...ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம்

* என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .

* ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு ஆனா...... தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு.... 

* நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா......ஒடுற பஸ்ஸுக்கு
முன்னாடி நிக்க முடியாது...

* வண்டி இல்லாமல் டயர் ஓடும்... ஆனால்.......டயர் இல்லாமல்
வண்டி ஓடுமா ? (இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

* சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா.....ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல..பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான்...


 # அவ்வளோதான்   

இம்பூட்டு பேரா? 

உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு புகைப் பழக்கமும் 24 கோடி பேருக்கு குடிப்பழக்கமும் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அடிமை பழக்கவழக்கங்கள் மீதான சர்வதேச புள்ளிவிவரம்: 2014 நிலை அறிக்கைஎன்ற தலைப்பில்  சர்வதேச ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிண்டா கோவிங் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

அதன் ரிசல்ட் என்னவாம்?

உலகில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் (100 கோடி) புகை பிடிக்கின்றனர். சுமார் 5 சதவீதம் பேர் (24 கோடி) மது அருந்துகின்றனர்.

இதுபோல ஹெராயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் சேகரிப்பது கடினம். ஆனால், உலகம் முழுவதும் போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள் 1.5 கோடி பேர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத போதைப் பொருட்களைவிட சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய தீங்கை விளை விக்கக் கூடியவை என தெரிய வந்துள்ளது.

உலகிலேயே கிழக்கு ஐரோப்பியர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒருவர் 13.6 லிட்டர் மது அருந்துவது தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக வடக்கு ஐரோப் பியர்கள் 11.5 லிட்டர் மது குடிக்கின்றனர். மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இது மிகக்குறைந்த அளவாக (2.1 லிட்டர்) உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ளவர்களில் 30 சதவீதம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். ஓஷனியாவில் இது 29.5 சதவீதமாகவும் மேற்கு ஐரோப்பாவில் 28.5 சதவீதமாக வும் உள்ளது.

Sunday 10 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 11


வரம் 

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்து, “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்.

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா, “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி, வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?” ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம “குப்புமி” “குப்புமி” “குப்புமி”ன்னு சொன்னானாம்.  பாவம் கடைசி வரை அவனுக்கு ”சா” வே 
வரலையாம். 

சாமியின் background voice....

"வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா. குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்..."     


• • • • 


ஜோடி இல்லாம பீச்சுக்கு தனியா போனா இதுதான் கதி.. 


• • • • 



GOOD MOTIVATION

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா?”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து..”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.


*

நம்மளோட வண்டி வாகனத்துல, நமக்கு பிடித்தமான சாமி படங்களையோ, பெயர்களையோ எழுதி வெச்சிக்கிறது வழக்கம். சிலர் பிடித்தமான வாசகங்களையும் எழுதி வைப்பாங்க. இன்னும் சிலர் இப்படியும் எழுதி வெச்சிருக்காங்க.. என்னன்னு நீங்களே பாருங்களேன்...