Sunday 15 October 2017

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
என்கிறார் திருவள்ளுவர். ( குறள் 969 )
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.

இந்திய காடுகளில், அதிகம் காணப்படும் விலங்குகளில், மான் இனமும் ஒன்று. சருகுமான், புள்ளி மான், குரைக்கும் மான், நான்கு கொம்பு மான், எலிமான், கடமான், ஆண்டி லோப் மான், சாம்பார் மான் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 80-க்கும் மேற்பட்ட மான் இனங்கள் உள்ளன.
இந்த மான் இனங்களைப் பற்றி நாம் படித்திருப்போம். ஆனால், கவரி மான் என்ற வகை மான் இருக்கிறதா என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஆனால், இப்படி ஒரு மான் இருப்பது குறித்த தகவல்கள் வேறு எந்த புத்தகங்களிலும் இல்லை. குழப்பமாக இருக்கிறது அல்லவா?

969- என் திருக்குறளைக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல, ‘ கவரி மா’ என்பதே சரி!  கவரி மா பேச்சு வழக்கில் கவரி மானாக மருவிவிட்டது.

கவரி மா என்று ஒரு விலங்கு உண்டு. ஆனால், அது மான் இனம் அல்ல.  
புறநானூற்றில் இந்த விலங்கு பற்றிய குறிப்பு உண்டு.
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"

இமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள்.

கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் விலங்கு. மேலும், அது மாடு வகையைச் சேர்ந்த விலங்கு.  
வள்ளுவர் குறிப்பிடுவது இந்த விலங்கைத்தான்.  கவரி மா குறித்து பதிற்றுப் பத்திலும் குறிப்புகள் உள்ளன.
முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு கவரி மா. அந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய சொல் உருவானது.மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.

பனிப் பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.
அதே போல சில மனிதர்கள். அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். என்பதே 969 எண் திருக்குறள் சொல்லும் பொருள்.

எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை.ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தவறு!


Saturday 14 October 2017

படித்ததில் ரசித்தது



"என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு,  என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி "


"டொக் டொக்"

"அம்மா.. யாரோ வாசல்ல..!"

"அது டேபிள்மேட்ரா.."

"டேபிள்மேட்டா? அப்பாம்மா"

"அது உங்கப்பாதான் .....!

“ 'ஏன் லேட்டு?'ன்னு கேட்டா பதினெட்டு விதமான ஆங்கிள்ல கதை சொல்லுவாரு.  அதான் அவருக்கு டேபிள்மேட்னு பேர் வச்சிருக்கேன்..."


திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள். அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.


மகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.

அப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".

அப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.



   ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். யார் அந்த முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று. அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். 

  அப்போது ஒருவன் மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை அடைந்தான்.
அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 

  உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து," என்னை யார் பின்னல் இருந்து குளத்தினுள் தள்ளியது?" என்று கேட்டான். கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்


மனைவியை ஆங்கிலத்தில் wife  என்று அழைப்பதன் அர்த்தம் இதுதான்
‘Without information fight everytime ’  இதைத்தான் ஆங்கிலேயர்கள் சுருக்கி wife என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தனர்எப்ப வேணாலும் ஏழரை 




உலகத்துல 3 விஷயம் முடியாது.

1) தலைமுடியை எண்ண முடியாது
2) கண்களை சோப்பால் கழுவ முடியாது
3) நாக்கை வெளிய நீட்டிவிட்டு மூச்சுவிட முடியாது
உடனே நாக்கை வெளிய விட்டு மூச்சுவிட்டு பாக்குற உங்களயெல்லாம் திருத்தவே முடியாது.


Monday 9 October 2017

கொசுவுக்கு பிடிக்காத செடிகள்

கொசுவை விரட்ட வீடுகளில் வைக்கப்படும் ரசாயனம் கலந்த கொசுவர்த்தி சுருள் போன்ற பொருட்கள் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், கொசுக்களுக்கு பிடிக்காத, ஆனால், நமக்கு பயன்தரக்கூடிய சில  செடிகளை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை எளிதாக விரட்ட முடியும். அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?

காட்டுத்துளசி 
நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசுக் நெருங்காது.

ஓமம் (Basil)
ஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும்.
புதினா
சின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். இதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது.

மாரிகோல்டு
கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது.

லாவெண்டர் (Lavender)
லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.

சிட்ரோசம்
ஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது.

கற்பூரவல்லி
சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது. நிறைய இடமோ, பொருள் செலவோ பிடிக்காத இந்த செடியின் வாசமும், இலைச் சாறும் கொசுவுக்குப் பிடிக்காது. 10 அடி தூரம் தாண்டியும் இந்தச் செடியின் மணம் மணக்கக்கூடியது. 

ரோஸ்மேரி
அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், கொசுவைத் தடுக்கும் அரணாகவும் செயல்படுகிறது..

செவ்வந்தி
இந்த பூச்செடியும் சிறந்த பூச்சிவிரட்டி. பயிர்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க, இந்த செடியை ஓரங்களில் நட்டு வைத்தால், பயிர்கள் பாதுகாக்கப்படும். கொசுக்களுக்கும் இந்த செடி எதிரி. இதேபோன்று கற்றாழை செடியும் வளர்க்கலாம்.

இதைத் தவிர, இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட மேலும் சில வழிகளும் உள்ளன.

✍  கற்பூரவல்லி இலைச் சாற்றை சோற்றுக் கற்றாழைச் சாற்றுடன் சேர்த்து தண்ணீரில் கலந்து பாட்டிலில் ஊற்றி, வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசு வராது. 

✍  புகைப் போடுதல் மிகவும் பழமையான முறை. யூகலிப்டஸ் இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து புகை போடலாம். வேப்ப இலை, நொச்சி இலைகளை நெருப்புக் கங்குகளில் போட்டுப் புகை போடலாம். கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்துப் புகை போடலாம். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் புகை போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

✍  வேப்பிலை, நொச்சி, ஆடாதொடைகுப்பைமேனி ஆகியவற்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் பச்சிலைத் தைலம் கிடைக்கும். இந்தப் பச்சிலைத் தைலத்தை கற்பூரத்துடன் சேர்த்து சாம்பிராணி புகையாகப் போடலாம். 

✍  தேங்காய் எண்ணெய்,  லாவண்டர் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்த்துக்கொள்ளலாம். கொசு அண்டாது. 

✍  புதினாவுடன் சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். கிடைக்கும் சாற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம். எலுமிச்சை பழத்தைப் பாதியாக வெட்டி ஜன்னல், கதவுகளின் மூலையில் வைக்கலாம். இவற்றிலிருந்து வரும் வாசனையும் கொசுவை விரட்டும். 






Sunday 8 October 2017

குட்டிக்கதை

குரங்கு மனம் 

   ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.
    நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். அந்த குரங்கு, “கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன் என்றது.

   இரவு பொழுதும் வந்தது. புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.  ஆனால், இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. மனிதனும் குரங்கும் மரத்தின் மேலேயே மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது. குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.

   அவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என்று எண்ணிய புலி மனிதனிடம்,  குரங்கு இப்போது தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு, எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டுவிடுகிறேன்என்றது.

  குரங்கை தள்ளிவிட்டுவிட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய மனிதன், பிடித்து குரங்கை கீழே தள்ளிவிட்டான். ஆனால் புலியோ  குரங்கிடம், எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும், உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இப்படி செய்தேன் இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன், நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்என்றது.

   அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ பயத்தால் நடுங்கினான்.
குரங்கோ பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன்.  புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டதாக நடித்தேன்.  நீ கவலை இல்லாமல் இருக்கலாம்.என்றது.

  குரங்குக்கு துரோகம் இழைத்த மனிதன் வெட்கி தலைகுனிந்தான்.


அடடே – 1



'என்னைத் தவிர யாரை கட்டியிருந்தாலும்  உன் கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாதுபெரும்பாலான கணவன் மனைவிக்கு இருக்கும் ஒன்று பட்ட எண்ணம் இதுவே.
  

நம்ம தமிழ்நாட்டில் பொறுத்தவரை  எல்லாரும் ஹெல்மெட் அணிவது போலீஸுக்கு பயந்து தானே, தவிர உயிருக்கு பயந்து அல்ல.


மருத்துவமனையில் உறவினரை நலம் விசாரிப்பதற்கு நாலு நல்ல வார்த்தைகளை விட, நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய் இருக்கிறது.
  

ஒரு வருடத்திற்கு முன்பு மணக்கோலத்தில்  நண்பனை  சிரிப்போடும், அவன் மனைவியை  கண்ணீரோடும் பார்த்த காட்சியில், ஓராண்டுக்குப் பின், கண்ணீர் இடம் மாறியிருந்த்து.
  

பெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும்ஆனால் ஆண்கள் ஒரு நாள் சமைக்கிற பொருளை வைத்து பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க .
  

காலையில எழுந்ததும்  Whatsapp ஓபன் பன்ற மாதிரி, படிக்கும் போது பாட புத்தகத்தை  ஓபன் பண்ணியிருந்தா சிலர் உருப்பட்டுருப்பாங்க.
  

ஓட்டலில் சர்வர்  என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியலைஇதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு  கேட்டா எப்படி சொல்து ?
  

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள்  பிள்ளைகளை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்பின்னர், அவங்க கை வலிக்குதுனு  பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்
  

ஊருக்கே குறி சொல்லும் பூசாரி, ATM வாசல நின்னு, பணம் இருக்கான்னு இன்னொருத்தர்கிட்ட கேட்கிறார்.
  

இரவு கணவனை சாப்பிடவாங்கன்னு மனைவி அழைத்தால், சீரியல்  முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.


பந்தி பரிமாறுபவர் நமக்கு நன்கு தெரிந்தவராயின் மனதிற்குள் வரும் சந்தோம் அலாதியானது.
  

மனைவியை சமாதானப்படுத்த பீரோவில் இருக்கும் சேலையை பேக் செய்து கிஃப்டா கொடுத்துடணும். அது பழைய சேலைன்னு மனைவியால கண்டுபிடிக்க முடியாது. காரணம், பீரோ முழுக்க அவ்வளவு சேலைகள்.


பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம், அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம்!
  

ஒரு பெண்  ஒரு நிமிடத்தில் சேலை செலக்ட் செய்கிறாள் என்றால்அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம்.


நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி  குலுங்கி போக ஆரம்பிச்சா,  நாம பஸ்ஸ்டாண்டுக்கு உள்ள வந்துட்டோம்னு அர்த்தம்.


முன்பு ஆண்களுக்கு குட்டிச்சுவர், டீக்கடை பெஞ்ச்! பெண்களுக்கு வீட்டுத் திண்ணை, குழாயடி ! ஆனால், எல்லோருக்குமானது இப்போ வாட்ஸப் ஆயிடுச்சு!
  

பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால், து ஃபோட்டோகிராபரிடம் மட்டும்தான்.
  

பேசாமல் இருந்தால்'ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?' என்று  நச்சரிப்பதும், பேசினால், சண்டைக்கு இழுப்பதும் மனைவியின் இயல்பு!!


புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை வசப்படும்.