Wednesday 30 March 2016

பெண்களுக்கு ஏன் கோபம் வருகிறது? (படித்ததில் யோசிக்க வைத்தது)


பெண்ணிற்கு சட்டென கோபம் வருகிறது, அடிக்கடி கோபம் வருகிறது என்பது ஆண்களின் குற்றச்சாட்டு. அது மறுப்பதற்குமில்லை.ஆனால் பெண்களின் கோபத்தை கவனித்துப் பார்த்தால், மிக சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் அதிகம் கோபம் கொள்வார்கள். 
தன் கணவனின் பெரிய தவறை கூட , அவன் சரியான விளக்கம் கொடுத்தால் புரிந்துக்கொண்டு கோபப்படாமல் இருக்கும் பெண், 

'ஏன் சொன்ன நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை?' 
'ஏன் என் மெசேஜு க்கு ரிப்ளே பண்ண லேட்? ' 
'ஏன் நேரத்திற்கு சாப்பிடவில்லை? '  

போன்ற குட்டி குட்டி காரணத்திற்காக கோபித்துக்கொள்வார்கள். 
இதற்கு காரணம் தன் கணவன் மீது அவள் வைத்திருக்கும் அதிகமான பிரியத்தின், எதிர்பார்ப்பின் பிரதிபலிப்பு தான். 

இதை புரிந்த்துக்கொள்ளாமல் ஆண்கள் அவளது கோபங்களை தொந்தரவாக நினைத்து சலித்துக்கொள்ளும் போது அவள் மனமுடைந்து மௌனாமாகி போகிறாள். அதன்பின் அவன் மீது அக்கறைக்கொள்வதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறாள். 

சிறு சிறு தவறுகளுக்கு கூட பெரிய குற்றம் போல் அனுமானித்துக்கொண்டு, நீண்ட நேரம் யோசித்து, மனதை குழப்பி சண்டைவிடுவதை பெண்களும் தவிர்க்க வேண்டும். 

ஆண்களும் பெண்ணின் கோபத்தை தொந்தரவாக கருதாமல்,அடிப்படை காரணத்தை உணர்ந்துக்கொண்டு மீண்டும் அந்த தவறு நிகழாவன்ணம் நடந்துக்கொள்ளலாம். 

No comments:

Post a Comment