Monday 21 January 2013

அட்டைக்கத்தி ஹீரோக்கள்




ஜாகிங் போறதுக்காக வழக்கம் போல இன்னிக்கு அதிகாலைல கிரவுண்டுக்குப் போனேன். ஆள் நடமாட்டம் இல்லாம வெறிச்சோடி கிடக்கற அந்த கிரவுண்டில், என்னிக்கும் இல்லாத அதிசயமா நாலஞ்சு பேர், ஏதோ எக்சர்சைஸ் பண்ணிட்டிருந்தாங்க.. நான் கிரவுண்ட சுத்தி மெல்ல ஓட ஆரம்பிச்சேன். மெல்ல இருட்டு விலக ஆரம்பிச்சதும்தான் கவனிச்சேன்.. எங்க தெரு பசங்க அவங்க. காலைல ஒம்போது மணிக்கு முன்னாடி எழுந்ததா சரித்திரமே கிடையாது. வேலை வெட்டிக்குப் போற பழக்கமும் கிடையாது.. கோயில் மாடு மாதிரி ஊரை சுத்திட்டு, தினசரி வீட்ல அர்ச்சனை வாங்கிக் கட்டிக்கறது அவங்களோட வழக்கம்.

 ஆச்சரியமாக கிரவுண்டுக்கு வந்திருக்காங்களேன்னு கிட்டக்க போய் பாத்தா, ஜெட்லீ, புரூஸ் லீ படங்கள்ல குங்பூ சண்டை போடும் போது கத்துவாங்களே.. அதுமாதிரி விநோதமா கத்திக்கிட்டு.. காத்துல கை, காலை தான்தோன்றித்தனமா வீசிட்டிருந்தாங்க.. ஆர்வம் தாங்காம.. ஒருத்தனை ஓரங்கட்டி பேச்சுக்குடுத்தேன். "கராத்தே பிராக்டிஸ் பண்றோம்ணா.." என்றான். 

அட்டைக் கத்தி படத்துல.. எதிர்கோஷ்டிகிட்ட ஹீரோ வம்பிழுத்து அடிவாங்கிக்கிட்டு, நேரா கராத்தே கிளாஸ்ல வந்து விழுவாரு. அந்த சீன், சம்பந்தமில்லாம அந்த நேரத்துல எனக்கு நினைவுக்கு வந்து தொலைச்சது.. பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கிட்டு நகர்ந்துட்டேன். 

*****

கடைசி ஆசை

போருக்கு போன மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டு நாடு திரும்பிட்டிருந்தாரு. வழியில அவரு நோய்வாய்ப்பட்டாரு. தலை சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிச்சும் குணமாகலை. மரணம் தன்னை நெருங்கறதை உணர்ந்த அலெக்சாண்டர், தலைமை வீரர்களை அழைச்சி, "சாவு என்னை நெருங்கிட்டுது. கடேசியா எனக்கு மூணு ஆசைகள் இருக்கு.. அதை நீங்க நிறைவேத்தணும்"னாரு..

அதை நிறைவேத்தறதா உறுதி கொடுத்து, என்ன ஆசைகள்னு அவங்க கேட்டாங்க.. அதுக்கு அலெக்சாண்டர், 

"முதல் விருப்பம் என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கிட்டு வரணும், என்னை அடக்கம் பண்றதுக்கு ஊர்வலமாக எடுத்துட்டு போறப்போ, என்னோட ரெண்டு கைகளும் சவப்பெட்டிக்கு வெளில தெரியற மாதிரி வைக்கணும், மூணாவதா, என்னை புதைக்கிற இடத்துக்கு போற வழியை, நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற விலை மதிப்பில்லாத கற்கள், செல்வங்களால அலங்கரிக்கணும்"ன்னாரு. 

தலைமை வீரர்களுக்கு இந்த ஆசைகள் வினோதமா தெரிஞ்சது. ஆனாலும், ஏன்னு கேட்க பயந்தாங்க. ஒருத்தன் துணிச்சு, "அரசே! உங்களோட ஆசையைக் கண்டிப்பாக நாங்க நிறைவேத்தறோம். ஆனா..இதுக்கான காரணம்"னு இழுத்தான். அதுக்கு அலெக்ஸாண்டர், 

என்னோட சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிட்டு வர்றதால இந்த உலகத்தில உள்ள எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நிச்சயமாக தெரிஞ்சுக்குவாங்க..  எந்த டாக்டராலயும் மரணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போட முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது.  ரெண்டாவது, இந்த உலகத்தையே வெல்ல ஆசைப்பட்ட நான் சாகும்போது, வெறும் கையோடதான் போறேன்னு என்னை பாக்கறவங்களுக்கு தெரியணும்.. மூணாவதா, வாழ்க்கையில எவ்வளவு செல்வத்தை சேர்த்தாலும், அதை நம்மோ எடுத்துட்டு போக முடியாது.. சவக்குழி வரைக்கும் மட்டும்தான் அவை வரும். இதை இந்த உலகத்துக்கு உணர்த்தறதுக்குத்தான் இந்த ஆசைகளை நிறைவேத்த சொன்னனேன்னாரு மாவீரன் அலெக்சாண்டர். 

2 comments:

  1. மாவீரன் மட்டுமல்ல... மாமனிதனும் கூட!

    ReplyDelete

  2. இந்த மாவீரன் கதையை நம்ம அரசியல் தலைவர்களும் ஒரு தடவையாவது படிக்கணும்

    ReplyDelete