Sunday 21 April 2013

பேஸ் புக்




பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து ஒன்றிரண்டு வருஷம் வரை, அதை வாரத்திற்கு ஒருமுறையோ, மாசத்துக்கு ஒரு முறையோ மட்டுமே திறந்து பாக்கறது என்னோட வழக்கம். அண்மைகாலமாக, தினசரி அதை திறந்து பாக்கலைன்னா, அன்னைக்கு தூக்கமே சரியா வரமாட்டேங்குது. பேஸ் புக்கால என்ன பயன்னு, நேரம் போகாத நேரத்துல யோசிச்சி பார்ப்பேன். ஒண்ணுமில்லைன்னு தோணும். உடனே அந்த கணக்கை முடிச்சிக்கலாம்னு முயற்சிப்பேன். ஆனா, கடைசி நேரத்தில ஏதோ ஒண்ணு, அந்த முயற்சியை தடுத்துடும். 

இப்போ வரைக்கும் பேஸ்புக்ல நான் வெறும் பார்வையாளன் மட்டும்தான். பெருசா ஸ்டேட்டசோ, கமெண்ட்டுகளோ போட்டதில்லை. அரிதாக போடற ஸ்டேட்டசுகளுக்கு ஒரிரு லைக்குகள் மட்டுமே விழும். அவ்வளவுதான் நம்ம செல்வாக்கு. அதைப்பத்தி நான் கவலைப்படறதும் இல்லை. வேலை காரணமா, வெளியூருக்கு பிரிஞ்சு போன நண்பர்களை தொடர்பில் வெச்சிருக்க உதவுதுங்கறது மட்டும்தான் பேஸ்புக்கினால் நான் கண்ட பலன். 

சரி எதுக்கு இந்தனை பீடிகைங்கறீங்களா ? 
அண்மையில பேஸ்புக் பத்தின ஆய்வு ஒண்ணை படிச்சேன். 

பேஸ்புக்ல லைக் போடற ஒருத்தரோட ரசனையை வெச்சு, அவரோட பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை எல்லா குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்களாம். 

ஒருத்தர் தனது ஃபேஸ்புக்கில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப் பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த சொல்லியிருக்காங்க.

இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்தி எட்டாயிரம் ஃபேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

அடுத்ததாக, இந்த இவர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள். உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.    

இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற ஃபேஸ்புக் பக்கத்தில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

அதேபோல ஃபேஸ்புக்கில் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் ஒருவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்பதையும் லைக் போடுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த கணக்கீடு விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளிக்கிறது. உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம்.    

அதேசமயம், தனிமனிதரின் ஃபேஸ்புக் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.

இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்களுக்கு தெரியாதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், ஃ பேஸ்புக்கில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.  


10 comments:

  1. பதிவை இணைக்க மட்டும் செல்வதுண்டு... அதிக நேரம் இருந்தால் எனது நண்பனை போல் (அடிமை) ஆகி விடுவோமோ என்று பயம்...!

    என்னவெல்லாம் ஆய்வு செய்கிறார்கள்..! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அளவுக்கு மிஞ்சாமல் இருப்பது நல்லதுதானே

      Delete
  2. எல்லாவற்றிலும் ஆராய்ச்சி! :)

    நமக்கு அவ்வளவு முகப் புத்தகத்தில் ஈடுபாடு இல்லை. பதிவுகளின் இணைப்பை அங்கே கொடுக்கச் செல்வதோடு சரி!

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயம் சார். நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போதெல்லாம்.. தினசரி அதை ஓபன் செய்து பார்க்காவிட்டால்
      அன்றைய பொழுது இனிமையாக இருப்பதில்லை.

      Delete
  3. ஆச்சரியமா இருக்கு இந்தத் தகவல்! நானும் முகப்புத்தகத்துல எப்பவாவது ஸ்டேட்டஸ் போடுவேன். மத்தபடி ப்ளாக் போஸ்டை அங்க அனவுன்ஸ் பண்றதுதான் பெருமபாலும்! இதுல போடற லைக்ஸை வெச்சு ஒருத்தனோட கேரக்டரை ஜட்ஜ் பண்ணிக் கண்டுபிடிச்சு என்னத்த சாதிக்கப் போறாங்களாம்? வெறும் நேர விரயம்தானே தாஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஃபேஸ் புக் பாக்கறதே வெட்டி வேலைதான் சார். அதுல இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் வேற. அதுக்கு செலவிடற நேரத்துல புத்தகம் படிக்கலாம். பிளாக்ல ஏதாவது பதிவு போடலாம்.

      Delete
  4. அக்கவுண்ட்டே இல்லை...:))

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயம். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அதனால் நேர விரயமாவது மட்டுமே மிச்சம்.

      Delete
  5. ஆம் படித்தேன் நானும் விநோத ஆராய்ச்சிகள் எப்போதும் மனிதனை நோக்கி

    ReplyDelete