Sunday 14 June 2015

சின்னச் சின்ன சிரிப்புக்கள்

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

*****

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி:- எப்போ சொன்னீங்க…நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????

*****

நபர்1: இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?
நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…

*****

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”
அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற!
அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!
( அதானே அடுத்தவன் சந்தோசமா இருக்கப்படாதே ! என்னா ஒரு கொல வெறி !)

*****

மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,

போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலறல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.
அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...
காபி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் என் படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

*****

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?


*****

கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது மனைவி சற்று தொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....

Banaras saree Rs10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-

மனைவி: 500 ரூபாய் பணம் கொடுங்கள்... நான் 50 புடவை வாங்கனும்

கணவன்:  அது இஸ்திரி போடும் கடைடி எரும மாடு

No comments:

Post a Comment