ஆண்
கடவுளின்
உன்னத படைப்பு
சகோதரிகளுக்காக
சந்தோஷத்தையும்,
பெற்றோருக்காக,
கனவுகளையும்
தியாகம் செய்பவன்
காதலிக்காக,
பர்ஸை காலி செய்பவன்
மனைவி,
குழந்தைகளுக்காக,
இளமையை அடகுவைப்பவன்.
எதிர்காலத்தை
லோன்களால் கட்டமைத்து,
அதனை அடைக்க
ஆயுள் முழுவதும் போராடுபவன்.
வெளியில் சுற்றினால்,
'உதவாக்கரை' என்றும்,
வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்றும் பெயரெடுப்பவன்.
குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்றும்,
அன்பு காட்டினால்,
'பொறுப்பற்றவன்'
என்றும் விளிக்கப்படுபவன்
மனைவியை வேலைக்கு அனுப்பாதவனை
'நம்பிக்கையற்றவன்' என்றும்,
அனுப்பினால்,
'பொண்டாட்டி
சம்பாத்தியத்தில்
பொழப்பை ஓட்டுபவன்' என்றும் அழைக்கப்படுபவன்.
தாய் சொல் கேட்டால்,
'அம்மா பையன்'
மனைவி சொல் கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்' எனப்படுபவன்.
எனவே,
ஆண்களின் உலகம்,
தியாகங்களாலும்
வியர்வையாலும் சூழப்பட்டதுங்கோ..
ஹாங் !!!
ReplyDeleteநிஜமாவே ஆண்கள் பாவம்தான்
ReplyDeleteம்ம்ம்.. யாரும் புரிந்து கொள்வதில்லை!
ReplyDelete