Sunday 5 August 2012

நொறுக்ஸ்


பெரிய விஷயங்களை விட 

சின்ன விஷயங்கள் தான் நம்மளை காயப்படுத்தும். 

உதாரணமா, குதிரை மேல உக்காரலாம். 
குண்டூசி மேல உக்கார முடியுமா ?



தலைகீழ் 'தாரகம் '

' Able was i ere i  saw Elba' என்பது மாவீரன் நெப்போலியனோட புகழ் பெற்ற வாசகம். இதோட சிறப்பு என்னன்னா.. இந்த வாசகத்தை வலமிருந்து இடமா படிச்சாலும் வார்த்தைகளும், அர்த்தமும் மாறாம வரும். 


கொடிய மிருகம் 

'' குருவே.. உலகத்துலயே மிகவும் கொடிய மிருகம் எது?'' ன்னு.. அரிஸ்டாட்டில் கிட்ட சிஷ்யர் ஒருத்தர் கேட்டாரு.
அதுக்கு அவர், '' உலகத்துலயே நாக்குதான் மிகக் கொடிய மிருகம். அதை ஒரு தடவை அவுத்து விட்டுட்டா..திரும்பவும் அதை கட்றது கஷ்டம்''ன்னாரு.



தொடர் பயணம் கூடாது. 


எப்பவோ படிச்ச சர்தாஜி ஜோக் ஒண்ணு..

ரயில்ல பிரயாணம் பண்ணிக்கிட்டிருந்த சர்தாஜி, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரயில் நிக்கிறப்போ.. கீழே இறங்கி பிளாட்பாரத்துல நிப்பாரு. ரயில் புறப்பட்டதும் ஓடிவந்து ஏறிக்குவாரு. இதை ரொம்ப நேரமாக கவனிச்சிட்டிருந்த சக பயணி, 'ஏன் இப்படி பண்றீங்க' காரணம் கேட்டாரு. அதுக்கு சர்தாஜி ரொம்ப பொறுமையா, ' எனக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு. அதனால.. டாக்டர் தொடர்ச்சியா பிரயாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.. அதனாலதான் இப்படி'ன்னாரு. 

என்னா ஒரு புத்திசாலித்தனம். 


பேஸ் புக்கை திறந்ததும் தான் இன்னிக்கு நண்பர்கள் தினம் தெரிய வந்துச்சு. விதவிதமாக நிறைய பேர் வாழ்த்து சொல்லியிருந்தாங்க. இதுவே.. பிப்ரவரி 14 ம் தேதியா இருந்தா.. ஊரே அதகளப்பட்டிருக்கும். எல்லா சேனல்லயும் சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டு கொலையா கொன்னிருப்பாங்க. பாவம்.. நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்களோ.. அவங்களை யாரும் கண்டுக்கறதே இல்லை. எனக்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெரிசு. எல்லாரையும் தினசரி சந்திக்க முடியறதில்லை. சிலரை சந்திச்சு மாசக்கணக்குல இருக்கும். ஏன் சிலரை சந்திச்சு வருஷக் கணக்குல கூட இருக்கும். சம்பிரதாயமா போன் பண்ணி யாருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து சொல்லணும்னு தோணலை. அதே மாதிரி எனக்கும் அப்படிப்பட்ட போன் எதுவும் வரலை. பேஸ்புக்ல கூட தனிப்பட்ட முறையில யாரும் வாழ்த்து தெரிவிக்கலை. பொதுவான அவங்களோட சுவத்துல எழுதியிருந்ததுதான். 
நட்புல எதுக்கு பாசாங்கு? 

'ஒவ்வொரு நாளும் ஆனந்தம்'னு ஒவ்வொரு நாளைக்கு ஒரு பொன்மொழி இருக்கற குட்டி புக் ஒண்ணு வாங்கினேன்.
அதுல இன்னிய தேதில இருந்த வாசகம்.. ' எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவைப் போல உதவுவது வேறொன்றில்லை.'



குறிப்பு ஒண்ணை எடுக்கறதுக்காக, பழைய நோட்டுக்களை புரட்டிக்கிட்டிருந்தேன். ஒரு நோட்டுல.. நட்பு பற்றி நான் எப்போதோ தொகுத்து வெச்சிருந்த பொன்மொழிகள் கிடைச்சது. என்ன ஆச்சரியமான ஒற்றுமை. 


** இன்பத்தை இரட்டிப்பாக்கி, துன்பத்தை பாதியாக குறைப்பது நட்பு - பிரான்சிஸ் - பேக்கன்


** ஆத்திர மிக்க நட்பு, சில வேளைகளில் அமைதியான பகைமையைப் போலவே கேடு விளைவிக்கக் கூடியது - ஷேக்ஸ்பியர்


** நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது - பெஞ்சமின் டிஸ்ரேலி


**நட்பைக் கொடுத்துதான் நட்பை வாங்க முடியும் - தாமஸ் வில்லியம் நட்பு காதலாக மலரக்கூடும், மலரவும் செய்கிறது. ஆனால், காதல் ஒருபோதும் நட்பாக அடங்குவதில்லை - பைரன் பிரபு 


**பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு - வில்லியம் பிளேக் 


*நூறு நண்பர்கள் கூட மிகக் குறைவுதான், ஒரு பகைவன் கூட மிக அதிகம்தான் - திபெத் 


**  சண்டைக்குப் பின் சமாதானமான நண்பன் இருமடங்கு எதிரி - யாரோஎதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள் சிலாக்கியமானவை - தாமஸ் ஏ.பெக்கட்


** நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்கு சமம் - ஜோசம் அடிசன்

** உன் உறவினரை தேர்ந்தெடுப்பது ஊழ்வினை, உன் நண்பர்களை தேர்ந்தெடுப்பது நீயே - ஜேக் 


5 comments:

  1. அனைத்துமே அருமை....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இடமிருந்து வலம் படிச்சாலும் வலமிருந்து இடம் படிச்சாலும் ஒரே மாதிரி வரக்கூடிய வார்த்தைகள் ஆங்கிலத்துலயும் இருக்கா... புதுசுதான் எனக்கு. நட்பு பத்தின பொன்மொழிகள் அனைத்தும் அருமை. தொகுத்துத் தந்த தேனீயே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இன்பத்தை இரட்டிப்பாக்கி, துன்பத்தை பாதியாக குறைப்பது நட்பு - பிரான்சிஸ் - பேக்கன்
    superb

    ReplyDelete