புது வருஷம் பிறந்துடுச்சி. புத்தாண்டு சபதத்தை ஒழுங்கா கடைபிடிக்கிறதில்லைங்கறதால, புத்தாண்டு சபதம் எதையும் எடுக்கறதில்லை. நிறைய எழுதணும்னு திட்டம் போட்டிருக்கேன். நிறைவேறுதான்னு பாக்கணும். வழக்கமா புத்தாண்டு பிறக்கற நேரத்தில கோயில்ல இருப்பேன். இந்த ஆண்டு அலுவலகத்தில இரவுப் பணியில இருந்தேன்.
புது வருஷம் தொடங்கறதை எல்லாரும் ஒருவித பரபரப்போடயும், பதற்றத்தோடயும் கொண்டாடறதாவே படுது. அது ஏன்னுதான் தெரியலை. 31-ம் தேதி இரவு ஒம்போது மணிக்கு அலுவலகம் கிளம்பி போட்டிருக்கேன். அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா சென்னை மாநகரம் ஒருவித பரபரப்போட இயங்கிட்டிருக்கறதா தோணிச்சு.
புத்தாண்டை ஒரு சாரார் வழிபாட்டுத் தலங்கள்லயும், ஒரு சாரார் மது விடுதிகள்லயும் கொண்டாடறது வினோதம்.
இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி. தங்களுக்கு இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Deleteநிறைய எழுதணும்னு முடிவெடுத்திருக்கீங்களா தாஸ்... ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சார். உங்களுக்கும் இந்த புத்தாண்டு சிறப்பா அமைய வாழ்த்துக்ள்.
Delete