Thursday 18 April 2013

இன்று உலக பாரம்பரிய தினம்


நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது. 

* பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது

*கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது

* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது 

* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது 
 பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது

*பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது 

* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது 

மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.  உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

9 comments:

  1. இப்போது ஏதும் நடைபெறுகிறதா...?

    சிறப்பான தினத்தன்று விரிவான விளக்கங்களை தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. அட... பாரம்பரிய தினம்னு ஒண்ணு கொண்டாடப்படுதா என்ன? இத்தனை நாள் நான் இதை கவனிக்கலை தாஸ்! உண்மைல மகளிர் தினம், குழந்தைகள் தினம்னு கொண்டாடற விஷயங்களை விட அதிக உற்சாகமா இந்த தினத்தைக் கொண்டாடறது தான் முறைன்னு தோணுது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கே அது ஆச்சிரியமான தகவல்தான் சார். இந்த பதிவை போடறதுக்க அரை மணி நேரம் முன்னாடிதான் அதைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்.

      Delete
  3. எனக்கு உண்மையிலே தெரியாத விஷயம் ஆச்சரியமா இருக்கு பகிர்வுக்கு நன்றி நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. வீட் டில் உள்ளவர்களுடம் பகிர்கிறேன் ஆச்சரியம் பசங்களுக்கு நன்றி

      Delete
    2. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. நேற்றைய தினம் உலக பாரம்பரிய தினம்..... இப்படிக் கொண்டாடியாவது மக்களுக்கு நமது பாரம்பரியம் பற்றிய உணர்வினைக் கொண்டுவந்தால் நல்லது....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா சார். பல இடங்கள்ல வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களும், நினைவுச் சின்னங்களும் கேட்பாரற்று கிடக்கறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளாததான் அதைப் பத்தின விழிப்புணர்வை கொண்டு வர முடியும்.

      Delete