சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை பொன்னாங்கண்ணி. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.
இந்தக் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த அளவுக்கு கண் பார்வைக்கு உதவுவது பொன்னாங்கண்ணி கீரை. அவற்றின் பயன்களை பார்ப்போம்.
1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
3. உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு.
4. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வல்லது.
5. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
6. அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
7. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது. இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment