Friday 27 January 2012

தலைமைச் செயலகம்


 வ்வொரு மனிதனும் தன் மூளையை 7 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான். அறிவாளிகள் 10 சதவீதமும், விஞ்ஞானிகள் 12 சதவீதமும் மூளையை பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு ஆய்வுத் தகவல். 
    
    அதிகபட்சமாக 12 சதவீத மூளையை மட்டுமே பயன்படுத்தும் மனிதன், இத்தனை அறிவியல் அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அதுவே 100 சதவீத மூளையை பயன்படுத்தினால்? யோசிக்கும் போதே தலையை சுற்றுகிறதா? அந்த தலை சுற்றலினூடே மனித மூளையைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ : 

           பிறந்த குழந்தையின் 370 கிராமிலிருந்து 400 கிராம் வரை இருக்கும். ஒரு வயதாகும் போது அதே மூளையின் எடை இரண்டு மடங்கு அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமான ஒரு மனித மூளையின் எடை 1கிலோ 360 கிராம் இருக்கும். தவிர மனித மூளை 2 முதல் 6 வயது வரை மட்டுமே வளரும். 

           மனித மூளை மண்டை ஓட்டில் 'செரிப்னோஸ்மைனஸ்' என்ற திரவத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறது. இந்த திரவம் மூளைக்குப் பாயும் ரத்தத்திலிருந்து உற்பத்தியாகிறது. மூளைக்கு நிமிடத்திற்கு 800 மிலி ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த நாளங்கள் வழியாக மூளைக்குத் தேவையான ரத்தம் பாய்கிறது. இது தடைபட்டால் மயக்கம் ஏற்படுகிறது. அதிக ரத்தம் பாய்ந்தால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. 

         இனவிருத்திக்கு இனச்சேர்க்கை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு மனிதனுக்க பாலுணர்ச்சியைத் தூண்டுவது மூளையில் உள்ள 'ஹைப்போதாலம்ஸ்' என்ற பகுதியாகும். 

  மூளை பழுப்பு நிறம் கொண்டது. அத்துடன், இதன் நரம்புகள் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனதாகும். மூளைக்கு வலி கிடையாது. ஆனால், உடலின் மற்ற பாகங்களில் இருந்து வரும் நரம்புச் செய்திகளை வலியாக உணருகிறது. மூளையின் ஒரு பகுதியான 'செரிப்ரம்' என்ற சாம்பல் நிற மடிப்புக்களைக் வைத்தே ஒருவனின் புத்திசாலித்தனம் அமைகிறது. இது மூளையின் மூன்றில் இரண்டு பகுதிகளை ஆக்ரமித்துள்ளது. மேலும், மூளையின் 'பெர்னிக்' என்ற பகுதியில் தான் நமது ஞாபகசக்தி அடங்கியிருக்கிறது. 
       
       மனித மூளைக்கு வயதாகும் போது அதற்கு போக்கும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால், 'அல்சைபர்' என்ற மறதி நோய் ஏற்படும். இது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுவதாகும். 

1 comment: