Tuesday 31 January 2012

ஜனவரி - 30


* மகாத்மா காந்தி எக்காலத்திலும் இயற்கையாக இறந்த மாடுகளின் தோலால் செய்த செருப்புகளையே அணிந்து வந்தார். 

* மகாத்மா காந்தி 1913 ம் ஆண்டிலிருந்து 1947 வரை 17 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். 

* காந்தியடிகள் முதன் முதலாக எழுதிய நூல், 'இந்திய சுயராஜ்யம்'. அவர் நடத்திய பத்திரிகையின் பெயர், 'யங் இந்தியா' 

* அயல்நாட்டு துணியை எரித்த குற்றத்திற்காக (1929) கைது செய்யப்பட்ட காந்திஜிக்கு நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்தது. 

* காந்திஜியை 'தேசப்பிதா' என்று முதன் முதலாக அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

* காந்திஜிக்கு முதன் முதலாக தபால் தலை வெளியிட்ட நாடு, அமெரிக்கா. 
'அரிஜன்' என்ற சொல்லுக்கு 'கடவுளின் குழந்தைகள் என்று அர்த்தம் சொன்னவர் மகாத்மா. 

* மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர், கன்னியப்ப செட்டியார். 'சத்ய சோதனை' என்ற தனது சுயசரிதையை, காந்திஜி தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார். 

* 'மகாத்மா' என்ற பெயரை காந்திஜி ஒருபோதும் விரும்பியதில்லை. 

* காந்திஜி தனது வாழ்நாளில் 249 நாட்கள் ஆப்ரிக்க சிறையிலும், 2089 நாட்கள் இந்திய சிறையிலும் இருந்திருக்கிறார். 

* மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது. அக்டோபர் 2 ம் தேதி 'சர்வதேச அகிம்சை தினமாக' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

* 'என்னுடைய பிறந்த நாளை புனித நாளாக கருதி, அரசு விடுமுறை அறிவித்திருப்பது சட்டப்படி குற்றம் என்று காந்திஜி தனது அரிஜன் பத்திரிகையில் எழுதியுள்ளார். 

* தென்னாப்பிரிக்காவில் காந்திஜி நடத்திய அறப்போரில் பங்குகொண்ட ஒரே தமிழ்ப் பெண், தில்லையாடி வள்ளியம்மை. 

* காந்திஜி தனது வாழ்நாளில் பார்த்த திரைப்படங்கள் இரண்டே இரண்டுதான்.  'மாஸ்கோ' என்ற ஆங்கிலப்படத்தையும், 'ராம ராஜ்யா' என்ற இந்தி படத்தையும் அவர் பார்த்திருக்கிறார். 

* மகாத்மா காந்தி, தனது வாழ்நாளில் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. அமெரிக்கா அழைத்தும் கூட அவர் அமெரிக்கா சென்றதே இல்லை. அவரது தென்னாப்பிரிக்க பயணத்தையும், இங்கிலாந்து பயணத்தையும் கப்பலில் தான் மேற்கொண்டார். இந்திய சுற்றுப்பயணம் முழுவதும் ரயிலில் தான். 

* காந்திஜி குண்டடிப்பட்டு மூச்சு நின்ற நேரத்தில், அவரது இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரமும் நின்றுவிட்டது. காந்திஜி மறைந்த சரியான நேரத்தைக் காட்டும் இந்த கடிகாரம், டெல்லி ராஜ்கோட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
* காந்திஜியின் இறுதி ஊர்வலத்தை, இந்திய வானொலி விடாமல் தொடர்ந்து 7 மணி நேரம் வர்ணனை செய்தது. 

* காந்திஜி மறைந்த அன்று அவருக்கு அனுதாபம் தெரிவிக்காத நாடு ருஷ்யா. காரணம், அவரது அகிம்சை கொள்கைகளை ஏற்காத அதிபராக ஸ்டாலில் இருந்து வந்தார். 

* 1948 ஜனவரி 13 ல் இருந்து சமுதாய நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்று கோரி காந்திஜி கல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவர் வாழ்க்கையில் மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதம் இது. ஐந்து நாட்களில் உண்ணாவிரதத்தை அவர் முடித்துகொண்டார். 

* அமைதிக்கான நோபல் பரிசை மகாத்மா காந்திக்கு தர வேண்டும் என்று 1937 ம் ஆண்டு முதல் 1948 வரை 5 முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இறுதிவரை அவருக்கு கொடுக்கப்படவே இல்லை. 

ஜனவரி - 30 அகிம்சை என்ற பயங்கர ஆயுதத்தால், ஆங்கிலேயர்களை அலற வைத்த அரையாடை மனிதரின் 65 ம் ஆண்டு நினைவு நாள் 
 

No comments:

Post a Comment