பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு தொடங்குவதால் சேவை வரி ரத்து செய்யப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தாலும் அறிவித்தார். அன்றிலிருந்து சினிமாவைப் பற்றி ஏதாவது எழுதியே தீருவது என்று மண்டையை பிறாண்டிக் கொண்டிருந்தேன். அப்புறம் அங்குமிங்குமாக தேடி கிடைத்த கொஞ்சுண்டு தகவல்கள் உங்கள் பார்வைக்காக.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் தாதா சாகேப் பால்கே என்பவரால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'ஹரிச்சந்திரா' ஆகும். இதற்கு முன்பே கூட இந்தியாவில்திரைப்படங்கள் வந்திருந்தன. 1865 ஆம் ஆண்டு முதல் அசையும் படங்கள் வெளிவந்திருந்தன. ஆனால், இவைகள் துண்டுப்படங்களாகும். ஹரிலால் சென், தானேவால் ஆகியோர்மும்பையிலும், கொல்கத்தாவிலும், சிறிய படங்களை தயாரித்தனர். வங்க மொழியின் முதல் திரைப்படம் 'சத்யாபாபு ஹரிச்சந்திரா' 1917 ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் படம்'கீசகவதம்' 1919 ஆம் ஆண்டு வெளிவந்தது.
1920 ஆம் ஆண்டுகளில், தீரன் கங்கூலி, பாபுராவ் பெயிண்டர், அசெத்திங், சந்துலால்ஷா, ராணி, வி.சாந்தாராம் போன்ற திரைப்பட இயக்குநர்கள் 'இங்கிலாந்து ரிடர்ண்டு, 'சங்காரிபாஷ்', 'குணசுந்தரி' போன்ற பல திரைப்படங்களை உருவாக்கினர்.
ஊமைப்படக் காலக்கட்டத்தில் இருந்து முதல் பேசும் படமாக உருவானது 'ஆலம் ஆரா' தான். இதுவே இந்தியாவின் முதல் பேசும் படமாக 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தகாலக்கட்டத்தில் தான் வங்காளத்திலும், தென்னிந்தியாவிலும் பேசும் படங்கள் உருவாக்கப்பட்டன. வங்காளத்தில் 'ஜமாய்ஷாஸ்தி' தெலுங்கில் 'பக்த பிரகலாதா', தமிழில் 'காளிதாஸ்',முதல் படங்களாக வெளிவந்தன.
திரைப்பட வளர்ச்சி 1930 ஆம் ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டது. பக்தி, புராணக்கதைகளுடன் கூடிய படங்களுடன், சமுதாய உணர்வுள்ள படங்களும் வெளியாயின.சாந்தாராமின் 'துனியாநாமானே', 'ஆதீமி' பதேஹாலின் 'சாந்தாதுக்காராம்' மற்றும் பல பொழுதுபோக்கு படங்கள் வந்தன.
இந்தியாவின் முதல் வண்ணப்படம் அர்தேஷிர் ராணியின் 'கிஸபின் கன்னியா' என்ற திரைப்படமாகும். இது 1937 ஆம் ஆண்டு வெளியானது. இதே காலத்தில், மராத்தி, குஜராத்தி,கன்னடம், ஒரியா, அசாமி, பஞ்சாபி, மளையாள மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகின.
தமிழ் சினிமா
விக்டோரியா பப்ளிக் ஹால் |
1897 ஆம் ஆண்டு சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு அடுத்திருந்த 'விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'எட்வர்ட்' என்ற ஆங்கிலேயர் 'புகை வண்டியின் வருகை, ' தொழிற்சாலையை விட்டு..'போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மௌன துண்டுப்படங்களை போட்டுக்காட்டினார். இதுதான் தமிழகத்தில் காட்டப்பட்ட முதல் சினிமா.
ஆரம்பகாலத்தில்,பயாஸ்கோப்,கினிமோட்டோபிராஃப், மோட்டோ போட்டோஸ்கோப், சினிமோட்டோகிராஃப் என்று பலவிதமான பெயர்களில் வழங்கப்பட்டு, கடைசியாக, லூமியர்சகோதரர்கள் சூட்டிய சினிமோட்டோ கிராஃப் என்ற பெயர்தான் நிலைத்தது.
தெரு ஓரங்களிலும், பூங்காக்களிலும் வெவ்வேறு இடங்களில் சலனப்படம் காட்டப்பட்டு வந்த காலக்கட்டத்தில், 'வார்விக் மேஜர்' என்ற ஆங்கிலேயருக்கு நிரந்தரமாக ஒரே இடத்தில்படம் காட்டினால் என்ன என்று தோன்ற, 1900 ஆம் ஆண்டு, சென்னையில் 'எலெக்ட்ரிக் தியேட்டர்' என்ற சினிமா கொட்டகையை கட்டினார். இதுதான் தென்னிந்தியாவின் முதல்தியேட்டர் ஆகும்.
திருச்சியில் ரயில்வேயில் வேலைப்பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவருக்கு சினிமா தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டு, புரொஜக்டரையும், சில துண்டு படங்களையும்விலைக்கு வாங்கி திரையிட்டுக் காட்டத்தொடங்கினார். அந்த வகையில், சலனப்படங்களை காட்டிய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார். அதேபோல் சென்னையில்போட்டோ கிராபராக இருந்த வெங்கையா என்பவரும் துண்டுப்படங்களை வாங்கி, ஊர் ஊராக போய் படங்களை திரையிட்டுக்காட்டினார்.
பின்னர், வெங்கைய்யா 1913 ஆம் ஆண்டு சென்னையில் 'கெயிட்டி' தியேட்டரை கட்டினார். இந்தியர் ஒருவரால், தென்னிந்தியாவில் கட்டப்பட்டமுதல் தியேட்டர் இதுதான்.இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு வடசென்னை தங்கசாலையில் 'கிரௌன்' தியேட்டரையும், 1915 ஆம் ஆண்டு 'குளோப்' (ராக்சி) தியேட்டரையும் கட்டினார்.
சென்னையில் மோட்டார் வியாபாரம் செய்துவந்த நடராஜ முதலியார் என்பவருக்கு நாமே படம் தயாரித்தால் என்ன என்று தோன்றியது. எனவே, 'ஸ்டூவர்ட் ஸ்மித்' என்றஆங்கிலேயரிடம் கேமராவை கையாளும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1916 ஆம் ஆண்டு ' இந்தியா பிலிம் கம்பெனி' என்ற தென்னிந்தியாவின் முதல் ஸ்டுடியோவை உருவாக்கி,அதில்,முப்பத்தைந்து நாட்களில், தென்னிந்தியாவின் முதல் சலனப்படமான 'கீசகவதம்' தயாராகி வெளிவந்தது. 1932 ஆம் ஆண்டு மைசூரில் தயாரிக்கப்பட்ட 'பாக்ய சக்ரா' தான்தென்னிந்தியாவின் கடைசி மௌன படமாகும்.
1931 ஆம் ஆண்டு 'சாகர் மூவி டோன்' என்னும் மும்பை கம்பெனி 'குறத்தி பாட்டும், டான்சும் ' என்று பேசும் குறும்படத்தை தமிழில் முதன் முதலாக தயாரித்தது. அதே ஆண்டில், முதல்முழு நீளத் தமிழ்ப் படமான 'காளிதாஸ்' மும்பையில் தயாரிக்கப்பட்டது.
1934 ஆம் ஆண்டு ஏ.நாராயணன் என்பவர் சென்னையில், 'சீனிவாசா சினிடோன் என்ற தென்னிந்தியாவின் முதல் டாக்கி ஸ்டுடியோவை தொடங்கி,தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்' படத்தை தயாரித்து வெளியிட்டார்.
தகவலுக்கு நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
Deleteநல்ல தகவல்.... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி சார்
Deleteதொடராகவே கன்டின்யூ பண்ணுங்க தாஸ்... நல்லா வந்துட்டிருக்கு!
ReplyDeleteநல்ல ஐடியா சார். இன்னும் கொஞ்சம் தகவல்களை திரட்டிக் கொண்டு செய்யலாம் என்றிருக்கிறேன்.
Deleteநல்ல பதிவு தொடருங்கள் அண்ணா....
ReplyDeleteதங்கைக்கு நன்றி
Deleteதென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்' படத்தை தயாரித்து வெளியிட்டார்.
ReplyDeleteசினிமா மலர்களை அழகுற அடுக்கிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி
Deleteஇந்திய சினிமா பற்றிய தெரியாத பல தகவல்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே
Delete