Tuesday 20 March 2012

இந்திய சினிமா


பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு தொடங்குவதால் சேவை வரி ரத்து செய்யப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தாலும் அறிவித்தார். அன்றிலிருந்து சினிமாவைப் பற்றி ஏதாவது எழுதியே தீருவது என்று மண்டையை பிறாண்டிக் கொண்டிருந்தேன். அப்புறம் அங்குமிங்குமாக தேடி கிடைத்த கொஞ்சுண்டு தகவல்கள் உங்கள் பார்வைக்காக. 
   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் தாதா சாகேப் பால்கே என்பவரால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'ஹரிச்சந்திராஆகும்இதற்கு முன்பே கூட இந்தியாவில்திரைப்படங்கள் வந்திருந்தன1865 ஆம் ஆண்டு முதல் அசையும் படங்கள் வெளிவந்திருந்தனஆனால்இவைகள் துண்டுப்படங்களாகும்ஹரிலால் சென்தானேவால் ஆகியோர்மும்பையிலும்கொல்கத்தாவிலும்சிறிய படங்களை தயாரித்தனர்வங்க மொழியின் முதல் திரைப்படம் 'சத்யாபாபு ஹரிச்சந்திரா' 1917 ஆம் ஆண்டு வெளிவந்ததுதமிழின் முதல் படம்'கீசகவதம்' 1919 ஆம் ஆண்டு வெளிவந்தது.
          1920 ஆம் ஆண்டுகளில்தீரன் கங்கூலிபாபுராவ் பெயிண்டர்அசெத்திங்சந்துலால்ஷாராணிவி.சாந்தாராம் போன்ற திரைப்பட இயக்குநர்கள் 'இங்கிலாந்து ரிடர்ண்டு, 'சங்காரிபாஷ்', 'குணசுந்தரிபோன்ற பல திரைப்படங்களை உருவாக்கினர்.
           ஊமைப்படக் காலக்கட்டத்தில் இருந்து முதல் பேசும் படமாக உருவானது 'ஆலம் ஆராதான்இதுவே இந்தியாவின் முதல் பேசும் படமாக 1931 ஆம் ஆண்டு வெளிவந்ததுஇந்தகாலக்கட்டத்தில் தான் வங்காளத்திலும்தென்னிந்தியாவிலும் பேசும் படங்கள் உருவாக்கப்பட்டனவங்காளத்தில் 'ஜமாய்ஷாஸ்திதெலுங்கில் 'பக்த பிரகலாதா', தமிழில் 'காளிதாஸ்',முதல் படங்களாக வெளிவந்தன.
           திரைப்பட வளர்ச்சி 1930 ஆம் ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டதுபக்திபுராணக்கதைகளுடன் கூடிய படங்களுடன்சமுதாய உணர்வுள்ள படங்களும் வெளியாயின.சாந்தாராமின் 'துனியாநாமானே', 'ஆதீமிபதேஹாலின் 'சாந்தாதுக்காராம்மற்றும் பல பொழுதுபோக்கு படங்கள் வந்தன.
            இந்தியாவின் முதல் வண்ணப்படம் அர்தேஷிர் ராணியின் 'கிஸபின் கன்னியாஎன்ற திரைப்படமாகும்இது 1937 ஆம் ஆண்டு வெளியானதுஇதே காலத்தில்மராத்திகுஜராத்தி,கன்னடம்ஒரியாஅசாமிபஞ்சாபிமளையாள மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகின.

தமிழ் சினிமா
விக்டோரியா பப்ளிக் ஹால்  
        1897 ஆம்  ஆண்டு சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு அடுத்திருந்த 'விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'எட்வர்ட்என்ற ஆங்கிலேயர் 'புகை வண்டியின் வருகை, ' தொழிற்சாலையை விட்டு..'போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மௌன துண்டுப்படங்களை போட்டுக்காட்டினார்இதுதான் தமிழகத்தில் காட்டப்பட்ட முதல் சினிமா.
      

              ஆரம்பகாலத்தில்,பயாஸ்கோப்,கினிமோட்டோபிராஃப்மோட்டோ போட்டோஸ்கோப்சினிமோட்டோகிராஃப் என்று பலவிதமான பெயர்களில் வழங்கப்பட்டுகடைசியாகலூமியர்சகோதரர்கள் சூட்டிய சினிமோட்டோ கிராஃப் என்ற பெயர்தான் நிலைத்தது.
                    தெரு ஓரங்களிலும்பூங்காக்களிலும் வெவ்வேறு இடங்களில் சலனப்படம் காட்டப்பட்டு வந்த காலக்கட்டத்தில், 'வார்விக் மேஜர்என்ற ஆங்கிலேயருக்கு நிரந்தரமாக ஒரே இடத்தில்படம் காட்டினால் என்ன என்று தோன்ற, 1900 ஆம் ஆண்டுசென்னையில் 'எலெக்ட்ரிக் தியேட்டர்என்ற சினிமா கொட்டகையை கட்டினார்இதுதான் தென்னிந்தியாவின் முதல்தியேட்டர் ஆகும்.
                         திருச்சியில் ரயில்வேயில் வேலைப்பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவருக்கு சினிமா தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டுபுரொஜக்டரையும்சில துண்டு படங்களையும்விலைக்கு வாங்கி திரையிட்டுக் காட்டத்தொடங்கினார்.  அந்த வகையில்சலனப்படங்களை காட்டிய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார்அதேபோல் சென்னையில்போட்டோ கிராபராக இருந்த வெங்கையா என்பவரும் துண்டுப்படங்களை வாங்கிஊர் ஊராக போய் படங்களை திரையிட்டுக்காட்டினார்.
                     பின்னர்வெங்கைய்யா 1913 ஆம் ஆண்டு சென்னையில் 'கெயிட்டிதியேட்டரை கட்டினார்இந்தியர் ஒருவரால்தென்னிந்தியாவில் கட்டப்பட்டமுதல் தியேட்டர் இதுதான்.இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு வடசென்னை தங்கசாலையில் 'கிரௌன்தியேட்டரையும், 1915 ஆம் ஆண்டு 'குளோப்' (ராக்சிதியேட்டரையும் கட்டினார்.
                         சென்னையில் மோட்டார் வியாபாரம் செய்துவந்த நடராஜ முதலியார் என்பவருக்கு நாமே படம் தயாரித்தால் என்ன என்று தோன்றியது.  எனவே, 'ஸ்டூவர்ட் ஸ்மித்என்றஆங்கிலேயரிடம் கேமராவை கையாளும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1916 ஆம் ஆண்டு இந்தியா பிலிம் கம்பெனி'  என்ற தென்னிந்தியாவின் முதல் ஸ்டுடியோவை உருவாக்கி,அதில்,முப்பத்தைந்து  நாட்களில்தென்னிந்தியாவின் முதல் சலனப்படமான 'கீசகவதம்தயாராகி வெளிவந்தது1932 ஆம் ஆண்டு மைசூரில் தயாரிக்கப்பட்ட 'பாக்ய சக்ராதான்தென்னிந்தியாவின் கடைசி மௌன படமாகும்.
                   1931 ஆம் ஆண்டு 'சாகர் மூவி டோன்என்னும் மும்பை கம்பெனி 'குறத்தி பாட்டும்டான்சும் என்று பேசும் குறும்படத்தை தமிழில் முதன் முதலாக தயாரித்ததுஅதே ஆண்டில்முதல்முழு நீளத் தமிழ்ப் படமான 'காளிதாஸ்மும்பையில் தயாரிக்கப்பட்டது.
                    1934 ஆம் ஆண்டு .நாராயணன் என்பவர் சென்னையில், 'சீனிவாசா சினிடோன் என்ற தென்னிந்தியாவின் முதல் டாக்கி ஸ்டுடியோவை தொடங்கி,தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்படத்தை தயாரித்து வெளியிட்டார்.

12 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல தகவல்.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. தொடராகவே கன்டின்யூ பண்ணுங்க தாஸ்... நல்லா வந்துட்டிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா சார். இன்னும் கொஞ்சம் தகவல்களை திரட்டிக் கொண்டு செய்யலாம் என்றிருக்கிறேன்.

      Delete
  4. நல்ல பதிவு தொடருங்கள் அண்ணா....

    ReplyDelete
  5. தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்' படத்தை தயாரித்து வெளியிட்டார்.

    சினிமா மலர்களை அழகுற அடுக்கிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. இந்திய சினிமா பற்றிய தெரியாத பல தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

      Delete