Monday 23 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 3

வாய்விட்டுச் சிரிப்போம்..!

"நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?"
"ஆமா."
"எவ்வளவு  நாளா இந்த பழக்கம்?"
"கிட்டத்தட்ட பத்து வருஷமா."
"ஒரு நாளைக்கி எத்தனை பாக்கெட் தம் அடிப்பீங்க?"
"மூணு பாக்கெட்"
"அப்படின்னா.. ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?"
"40 ரூபாய்."
"அப்போ ஒரு நாளைக்கு 120 ரூபாய் செலவு பண்றீங்க."
"ஆமா."
"அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்"
"ஆமா".
"வருஷத்துக்கு 43,200 ரூபாய்?"
"கரெக்ட்டா சொன்னீங்க"
"பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்"
"ஆமா"
"சிகரெட் அடிக்காம, நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ட்ரோ கார் வாங்கியிருக்கலாம்"
"ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்களா?"
"ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது"
"அப்போ உங்க சான்ட்ரோ கார் எங்கே நிக்கிது?"
.........?
"கொய்யால யாருகிட்ட...?"


என்னமோ போங்க...

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்டா இதோடு..!!



இன்பத்திலும் சிரிங்க..!
துன்பத்திலும் சிரிங்க!
எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.



மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா? சரி, நானே சொல்றேன், அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?



ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....



என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்
எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...


உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்பற நல்ல மனசு.... பாவம்..நீங்க..



மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா?? இல்லையா??    
"நம்பிக் கட்டினோம் ... நன்றாக இருக்கிறோம்"


புரியுமா?

ஒரு பெண் தானாகவே முன்
வந்து காதலை வெளிப்படுத்தினால்
மட்டமாக பார்ப்பார்கள்.
காதலை வெளிபடுத்தாமல்
இருந்தால்
அழுத்தக்காரி என்பார்கள்.
காதலித்தவனை ஓடிப்போய் கைப்பிடித்தால்,
ஓடுகாலி என்பார்கள்.
பெற்றோருக்காக காதலை மறந்தால்

ஒருத்தனை
விரும்பிட்டு வேறு ஒருனை கட்டிக்கொள்வதா என்பார்கள்.
காலம் காலமாக பெண்களை
பலவாறாக
பழிக்கும் இந்த சமூகம் எப்போது புரிந்து கொள்ளும்
பெண்ணினத்தின்
சோகங்களையும், தியாகங்களையும்...


ஃபேமிலி மேன் குறிப்பு வரைக;-

கல்யாணத்திற்கு முன்பு தான் உண்டு தன் வேலை உண்டு என முழித்துக்கொண்டிருந்த மேன் திருமணத்திற்கு பின், பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் "பேய்" முழி முழிக்கும்
மேனை தான் "பேய் முழி மேன்" "பேய் முழி மேன்" என்கிறோம். இதுவே காலப்போக்கில் மருவி ஃபேமிலி மேன் ஆனது ....

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி?

* காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*  வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்ப்பது நல்லது.
* காலையில் காலை உணவுக்குப் பிறகு, உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும். அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்கச் செய்யும்.
* உடனே Facebook- க்கு சென்று இளைப்பாறவும்.
* தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
* வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம். அதனால் கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
* மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல் வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
* இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*  இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
* இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்.) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
#  பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.


கொஞ்சம் மொக்கைதான், முடிஞ்சா சிரிங்க...

☑ டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗 எந்த பாட்டுக்கு?

🔘 ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗 நோயோடதான்!
.
☑ தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗 அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

🔘 டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗 கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

☑ டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

🔘 என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
🔗 பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

☑ படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗 புக்கை மூடிடுவேன்!

🔘 காலில் என்ன காயம்?
🔗 செருப்பு கடித்து விட்டது
🔗 பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

☑ குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗 தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

🔘 இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗 என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

☑ டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗 என்னிடம் சுத்தமா இல்ல
🔗 பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

🔘 இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗 கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

☑ சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.ஏ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

🔘 இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗  ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

☑ மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்தை அழுவுது...
கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

அப்பா: நேத்து ராத்திரி பரீட்ச்சைக்கு படிச்சேன்னு சொன்னே, ஆனா, உன் ரூம்'ல லைட்டே எரியலையே?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டிலை கீழே போட்டு தாண்டிகிட்டு இருக்குறே?
மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


மனைவி அமைவதெல்லாம்.......

சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு. 
வளமை மிக்க எமதா்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. அதைவிட முக்கியமான சிக்கல் அந்தப் பெண்மணி எமனை ஆசையாக இறுக்கி அணைத்தால் எமனுக்கு மூச்சு திணறியது. அவ்வளவு அழுத்தமான அணைப்பு. பாசத்தோடு மனைவி அணைக்கும் போதெல்லாம் எம பாசத்தோடு இருந்த எமனுக்கே மரண பயம் வரத் தொடங்கியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை (எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் 
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்க கற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

உண்டு என்பதே இங்கு இல்லை.

1.அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை
2. அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை
4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை
5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை
6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை
10. ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை
21. நண்டுக்குத் தலை இல்லை
22. ஆமைக்கு பற்கள் இல்லை
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை
25. பாம்புக்கு காது இல்லை.


நேர்மறையாக சிந்தியுங்களேன்...

 ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்  தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும்

மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை. இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர்.

வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன. அப்போது, மிகப் பெரிய சப்தம். திரும்பிப் பார்த்தார்கள். இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர..பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.

குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின. இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் சொல்லிக் கொண்டார்கள். "நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ? ஊகிக்க முடிகிறதா? சவாலான கேள்வி...!

100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல் பயணித்திருந்தால்.. சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும். பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் தப்பி இருப்பார்கள். எதிர்மறையான சிந்தனை உங்களுக்குத் தோன்றி இருந்தால்...நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

"பார்த்தாயா நம் தமிழ் மொழியின் அருமையை !"

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
eBowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver -- சாரதி

கடைசி தலைமுறை

* ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறை நாம், ஓனிடா மண்டையனை பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
* செல்போனில் பட்டனை பாத்த கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
* மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்...!
* கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
* மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும
* கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* 10th 12th ரிசல்ட்  பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
* கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்

* ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
* சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
* போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
* ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது
* நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை  இதெல்லாம் போச்சு.
* நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி என  பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
* 5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
* மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

1 comment:

  1. படித்தால் பொழுது போவதே தெரியவில்லை ! அருமை !

    ReplyDelete