அடிமைத்தனத்தையும் இனவெறியையும் ஒழித்து, ஒடுக்கப்பட்ட
மக்களின் தலைவராக திகழ்ந்தவர் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம்
லிங்கன். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின்
என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் 12.02.1809 – ம் தேதி
பிறந்தார். தந்தை தாமஸ், தாய் நான்சி.
தந்தை செருப்பு தைக்கும் கூலித் தொழிலாளி. தமது
9-வது வயதிலேயே லிங்கன் தாயை இழந்தார்.
ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று
வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்ற லிங்கன் பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம்
மட்டுமே. குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு
உதவியாக இருந்து வந்தார்.
நியு ஆர்லியன்சில் அவர்கள் குடும்பம் வசித்தபோது, கறுப்பினத்தவர்கள்
விலைக்கு வாங்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும், சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு வருந்தினார்.
.
இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டபோது
இவருக்கு வயது 15.
சுயமாக கல்வி பயின்ற அவர், சட்டப்படிப்பு
படித்த அவர்,. சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது. பேச்சாற்றலில் வல்லவரான
லிங்கன், அரசியலிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
‘வீக்’ என்கிற
கட்சியில் சேர்ந்து இல்லினாய்ஸ் மக்கள் பிரதிநிதி சபைக்கு 1834-ல்
தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு
ஆண்டுகாலம் அந்த பதவியை வகித்தார். பின்னர், அமெரிக்காவின்
குடியரசு கட்சியில் சேர்ந்து 1858-ல் அந்த கட்சியின் சார்பில்
அமெரிக்க நாட்டு செனட் பதவிக்கு போட்டியிட்டு எதிர்பாராத விதமாக தோல்வியை
தழுவினார்.
பிறகு, 1860-ம் ஆண்டு குடியரசு கட்சியின்
வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்று
நாட்டின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலில் நுழைந்த து முதல்
கருப்பின மக்களின் அடிமைத்தனம் ஒழிய பாடுபடுவதையே லட்சியமாக கொண்டிருந்த லிங்கன், அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863-ல்
வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு உருவானதால்,
அது உள்நாட்டு போர் வரை சென்றது. அதை
முடிவுக்குக் கொண்டு வந்த லிங்கன், 1864-ம் ஆண்டு மீண்டும் அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்
1865-ம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 14-ந்தேதி புனித வெள்ளி அன்று, ‘அவர்
அமெரிக்கன் கசின்’ என்கிற நகைச்சுவை நாடகத்தைக் காண தமது மனைவியுடன் சென்ற லிங்கன் துப்பாக்கியால்
சுடப்பட்டார். பின்னர், ஏப்ரல் 15-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 56.
பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete