Monday 23 April 2018

இது எப்படி இருக்கு?

புதுசா கல்யாணமான ஜோடிகள், பொது இடங்களில் பண்ற அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. சுற்றிலும் இருக்கிறவங்க யாரையும் கண்டுக்காம அவங்க பண்ற சேட்டைகள் முகம் சுளிக்கிற அளவுக்கு இருக்கும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று பெரியவங்க எந்த அர்த்ததுல சொன்னாங்களோ தெரியாது. 

ஆனால், ஆரம்பத்துல அவங்க கிட்ட இருக்கிற நெருக்கம் போகப் போக குறைந்து, பின்னாளில், எலியும், பூனையும் போலவும், கீரியும் பாம்பு மாறிடுவாங்க அப்படீங்கறது பொதுவான கருத்து. 

ஆனா, இந்த பொதுக் கருத்தை பொய்யாக்கற விதமாக புதுசா ஒரு ஆய்வு முடிவுகள் வந்திருக்கு. அதாவது தம்பதிகள் கல்யாணமான புதுசுல இருக்கிறதைவிட, 20 ஆண்டுகளுக்குப் பிறகே அவங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாகி ரொம்ப சந்தோஷமா இருப்பாங்களாம். 

அமெரிக்காவில், பென்சில்வேனியா ஆய்வாளர்களும், பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்காங்க. 

சராசரியா 37 வயதான ஆண்களும், 35 வயதான பெண்களும் கொண்ட ‘2 ஆயிரத்து 34 தம்பதிகள் கிட்ட இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கு. அவர்கள்கிட்ட, ‘உங்களுக்கு கல்யாணமாகி எந்த காலக்கட்டத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?’ அப்படின்னு கேட்ட கேள்விக்கு, பெரும்பாலானோர் 20 ஆண்டுகளுக்கு பிறகே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதா சொல்லியிருக்காங்க. 

No comments:

Post a Comment