Monday 23 April 2018

19-ம் நூற்றாண்டின் கடைசிப் பெண் மறைவு


உலகின் மிகவும் முதிய மூதாட்டியான நபி தாஜிமா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 117.


ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் நகரைச் சேர்ந்த நபி தஜிமா 4-8-1900 அன்று பிறந்தவர். உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்கு மகன்கள் மற்றும் மகள் மூலம் பிறந்த வாரிசுகள் 160 பேர் உள்ளனர். 19-ம் நூற்றாண்டில் பிறந்த கடைசி பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்கா ர ரான நபி தாஜிமா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (22.04.2018) காலமானார்.

உலகின் மிகவும்  முதிய மனிதராக கருதப்பட்ட ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் பிரவுன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து, நபி தாஜிமா, உலகின் மிக முதிய மூதாட்டி இடத்திற்கு முன்னேறினார். 

நபி தாஜிமாவின் மறைவைத் தொடர்ந்து, மற்றொரு ஜப்பானிய பெண்ணான சியோ மியாகோ உலகின் மிக வயது முதிர்ந்த பெண் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  10 நாட்களில் 117 வயதை எட்ட உள்ள  சியோ மியாகோ டோக்கியோ நகரின் கனகாவா பகுதியில் வசித்து வருகிறார்.

No comments:

Post a Comment