கணவன் :
என்ன இது இட்லில இவ்வளவு ஓட்டை இருக்கு?
மனைவி : நல்லா பாருங்க இது இட்லி இல்லை, இடியாப்பம்!
*
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு
நல்ல மனைவி அமைவாள்.
கோபு : அது மச்சம் இல்லய்யா 'சூடு வெச்ச தழும்பு. அதை வச்சதே என் மனைவி
கோபு : அது மச்சம் இல்லய்யா 'சூடு வெச்ச தழும்பு. அதை வச்சதே என் மனைவி
*
“சார்! நீங்க எந்தக் கடவுளைக்
கும்புடுவீங்க?”
“கல்யாணத்துக்கு
முன்னாடியா,
பின்னாடியா?”
“கல்யாணத்துக்கு
முன்னாடி?”
“கல்யாணத்துக்கு
முன்னாடி, எனக்கு முருகனை ரொம்பப்
பிடிக்கும்”
“அப்போ
பின்னாடி.....?”
“அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே
“இல்லை!”
“இல்லை!”
*
நீதிக்கதை :
சத்தியவான்
சாவித்திரி தன் கணவனை, எமதர்ம
ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.
நீதி : ஒரு
புருஷனை பொண்டாட்டிகிட்ட இருந்து எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது!
காப்பாத்த முடியாது!
*
மனைவி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை
செருப்பால அடிச்சுக்சுக்கணும!
செருப்பால அடிச்சுக்சுக்கணும!
கணவன்: செருப்பு
இந்தா இருக்க.!
புத்திக்கு எங்கே போவே?
*
கணவன் : என் தோசை இது? சாணி வறட்டி மாதிரி இருக்கு !
மனைவி : கடவுளே! இந்த
மனுஷன்
இன்னும் என்னத்தையெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ தெரியலையே?
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ தெரியலையே?
*
தத்துவமுங்கோ
நிம்மதியாக
இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி
வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாழ்க்கை தேடல்!
*
மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை,
போய் என்னன்னு பார்த்துட்டு
வாங்களேன்.
கணவன் : நான் அங்கே போய்
வந்த்தாலதான் அந்த சண்மையே ஆரம்பிச்சுது.
*
ஒரு கண்டுபிடிப்பு.
தக்காளி
சோறு பிரியாணிமாதிரி இருந்தா அது அம்மா சமையல்! பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா
அது பொண்டாட்டி சமையல்! சாப்பிட்ட உடனே வாந்தி வந்தா, அது
காதலியோட சமையல்!
*
ஹி..ஹி
பர்ஸ்ல
உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு, புதுசா ஒரு காலி
பர்ஸ் கொடுப்பான் பாருங்க, அவன்தான் நகைக்கடைக்காரன்.
*
நோயாளி : கசப்பான
மருந்தைக்
கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு சிஸ்டர்
ஸ்வீட்டா இருக்கு சிஸ்டர்
நர்ஸ் : நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான்
குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'
*
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக்
சொல்லுங்க
விளம்பரதாரர் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
விளம்பரதாரர் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
*
முதலாளி : நீ கொரில்லா குரங்கை நேர்ல பாத்திருக்கியா?
ஊழியர் : (தலையை குனிந்தபடி) இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே நேரா என்னைப்பாரு
ஊழியர் : (தலையை குனிந்தபடி) இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே நேரா என்னைப்பாரு
*
மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப்
போகலாம்.
நோயாளி : ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?
நோயாளி : ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?
*
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது ஏன்னா,
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர்
கிட்ட அனுப்பிடுவாரு. டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
*
மனைவி: என்னங்க, உங்களுக்கு
விஷயம் தெரியுமா?
நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச தரகருக்கு ஆக்ஸிடெண்ட்ல கால்
உடைஞ்சிடுச்சாம்.
கணவன் : பின்னே, செஞ்ச
பாவம் சும்மா விடுமா?
*
“டாக்டர்! நான்தான் பிழைச்சுக்கிட்டேனே, அப்புறம் எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?”
“நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?”
“நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?”
*
"டாக்டர்
எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
"அதெல்லாம் ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
*
“ அதோ போறாரே அவர் ஒரு ‘சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."
“ ஓ..குழந்தைகளுக்குக்கான டாக்டரா?”
“ இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!”
“ ஓ..குழந்தைகளுக்குக்கான டாக்டரா?”
“ இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!”
*
" டாக்டர்
எனக்கு கோபமே வர மாட்டேங்குது. எப்ப பார்த்தாலும் சிரிப்பு வந்துக்கிட்டே இருக்கு”
"கவலைப்படாதீங்க.. என்னோட பில்லை பார்த்தீங்கன்னா சிரிப்பு தானா நின்னுடும்”
"கவலைப்படாதீங்க.. என்னோட பில்லை பார்த்தீங்கன்னா சிரிப்பு தானா நின்னுடும்”
*
( டீ.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கிறார்கள்)
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட
குடுக்கிறீங்க?"
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா?”
" வெள்ளைக்கு..!"
" புல்லு.."
" அப்ப கருப்புக்கு..?"
"அதுக்கும் புல்லுதான்
குடுக்கறேன்.."!
" ஆடுகளை எங்கே கட்டி வைக்கறீங்க?."
" எதை கருப்பையா.? வெள்ளையையா..?"
" வெள்ளையை.."
" வெளிய இருக்கிற கொட்டகையில..."
" அப்ப கருப்பு ஆட்டை..?"
" அதையும் வெளில இருக்குற கொட்டகையிலதான்.."
" ஆடுகளை எப்படி குளிப்பாட்டுவீங்க..?"
" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"
" கருப்பு ஆட்டை..?"
" தண்ணில தான்"
" அப்ப வெள்ளையை..?"
" அதுவும் தண்ணில தான்"
(பேட்டி
எடுப்பவர் கடுப்பகிறார்)
" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்ளையான்னு கேட்டுட்டே இருக்கே? "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"
" அப்ப கருப்பு ஆடு..?"
"அதுவும் என்டோடதுதான்"
" அடேய்ய்ய்ய்.........!!!!"
அனைத்தும் ரசித்தேன்.
ReplyDelete