Saturday 29 July 2017

ரிலாக்ஸ் ப்ளீஸ்

‍ 
கணவன் :  என்ன இது இட்லில இவ்வளவு ஓட்டை இருக்கு?
மனைவி : நல்லா பாருங்க இது இட்லி இல்லை, இடியாப்பம்!

*

ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு நல்ல மனைவி    அமைவாள்.

கோபு                 : அது மச்சம் இல்லய்யா 'சூடு வெச்ச தழும்பு. அதை வச்சதே என் மனைவி 

*

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?”
கல்யாணத்துக்கு முன்னாடியாபின்னாடியா?”
கல்யாணத்துக்கு முன்னாடி?”
கல்யாணத்துக்கு முன்னாடிஎனக்கு முருகனை  ரொம்பப் பிடிக்கும்
அப்போ பின்னாடி.....?”
அடஅதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே
இல்லை!

*

நீதிக்கதை  :                     
சத்தியவான் சாவித்திரி  தன் கணவனைஎமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.
நீதி :  ஒரு புருஷனை பொண்டாட்டிகிட்ட இருந்து எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது!

 *

மனைவி:   உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை
செருப்பால அடிச்சுக்சுக்கணும!
கணவன்:  செருப்பு இந்தா இருக்க.!  புத்திக்கு எங்கே போவே?
                            

*

கணவன்     :  என் தோசை இது? சாணி வறட்டி மாதிரி இருக்கு !
மனைவி     :  கடவுளே!  இந்த மனுஷன்  இன்னும் என்னத்தையெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ தெரியலையே?

*

தத்துவமுங்கோ                       
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,  மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாழ்க்கை தேடல்!

*

மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை, போய் என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : நான் அங்கே போய் வந்த்தாலதான் அந்த சண்மையே ஆரம்பிச்சுது.

*

ஒரு கண்டுபிடிப்பு.
தக்காளி சோறு பிரியாணிமாதிரி இருந்தா அது அம்மா சமையல்!  ‍பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்! சாப்பிட்ட உடனே வாந்தி வந்தா, அது காதலியோட சமையல்!


 *

     
 
ஹி..ஹி
பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு, புதுசா ஒரு காலி பர்ஸ் கொடுப்பான் பாருங்க, அவன்தான் நகைக்கடைக்காரன்.

*

நோயாளி    : கசப்பான மருந்தைக் கூட உங்க கையால கொடுக்கிறப்போ
                              ஸ்வீட்டா இருக்கு  சிஸ்டர்
நர்ஸ்           : நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன், இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'


*

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!

*

முதலாளி : நீ கொரில்லா குரங்கை நேர்ல பாத்திருக்கியா?
ஊழியர் : (தலையை குனிந்தபடி) இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே நேரா என்னைப்பாரு

*

மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.
நோயாளி : ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?

*

டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது ஏன்னா, கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு. டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...

*

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?  நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச தரகருக்கு ஆக்ஸிடெண்ட்ல கால் உடைஞ்சிடுச்சாம்.
கணவன் :  பின்னே, செஞ்ச பாவம் சும்மா விடுமா?

*

டாக்டர்! நான்தான் பிழைச்சுக்கிட்டேனே, அப்புறம் எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?”
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?”

*

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"
அதெல்லாம் ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

*


அதோ போறாரே அவர் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."
“ ஓ..குழந்தைகளுக்குக்கான டாக்டரா?”
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!

*

" டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. எப்ப பார்த்தாலும் சிரிப்பு வந்துக்கிட்டே இருக்கு”
"
கவலைப்படாதீங்க.. என்னோட பில்லை பார்த்தீங்கன்னா சிரிப்பு தானா நின்னுடும்”

*

 ( டீ.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கிறார்கள்)
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க?"
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா?”
" வெள்ளைக்கு..!"
" புல்லு.."
" அப்ப கருப்புக்கு..?"
"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!
" ஆடுகளை எங்கே கட்டி வைக்கறீங்க?."
" எதை கருப்பையா.? வெள்ளையையா..?"
" வெள்ளையை.."
" வெளிய இருக்கிற கொட்டகையில..."
" அப்ப கருப்பு ஆட்டை..?"
" அதையும் வெளில இருக்குற கொட்டகையிலதான்.."
" ஆடுகளை எப்படி குளிப்பாட்டுவீங்க..?"
" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"
" கருப்பு ஆட்டை..?"
" தண்ணில தான்"
" அப்ப வெள்ளையை..?"
" அதுவும் தண்ணில தான்"
(பேட்டி எடுப்பவர் கடுப்பகிறார்)
" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம்    எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்ளையான்னு கேட்டுட்டே இருக்கே? "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"
" அப்ப கருப்பு ஆடு..?"
"அதுவும் என்டோடதுதான்"
" டேய்ய்ய்ய்.........!!!!"


*

1 comment: