Sunday 26 April 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 8

பசுமையான நினைவுகள் 

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த தலைமுறை மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே
WE ARE AWESOME !

OUR LIFE IS A LIVING PROOF
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாவுடன் கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்                      
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டிக் கொண்டதில்லை. 
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. 
• நாம் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம்,பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். 
• அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
• உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழ்ந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.



காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும்  பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்... !"

*

நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்

1 "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! 
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியான பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது. கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
ஆயிரம் வேரை (மூலிகை வேரை )  கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.
5.  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
   நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி. (சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது.   ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.)
6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
  அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
6. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே - தவறு
  மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே - சா¤   
தண்ணீர் குறைவாக ஓடும் ஆற்றில் ஆங்காங்கே மண் குவிந்து நிற்கும். இதற்கு மண் குதிர் என்று பெயர். அதன் மீது கால் வைத்தால் புதை மணல் போன்று உள்ளே இழுக்கும் எனவேதான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்றார்கள் நம் முன்னோர்கள். குதிர்தான் மருவி குதிரையாகிவிட்டது. 




14 வருடங்களுக்கு முந்தைய பசுமையான நினைவுகள்:


வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
முழு ஆண்டு விடுமுறையில் மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு டூர் போனோம்.
ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு நாள் முழுவதும் செலவு செய்தோம்.
100 ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது.
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே படம் முழுவதையும் பார்த்து ரசித்தோம்.
பீரோக்கள் முழுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம்.
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம்.
பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.
10-வது 12-வது ரிசல்ட் பார்க்க தினந்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.
15-வயதுவரை டவுசர்களையே அணிந்திருந்தோம்.
பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
இளம் பெண்கள் நதியா மாடல் சடை போட்டு அழகு பார்த்தார்கள்.
பணக்கார வீட்டு இளம்பெண்கள் ஙிஷிகி ஷிலிஸி சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.
நம் ஊரில் பணக்காரர்கள் மட்டுமே டி.வி.எஸ் -50 வைத்திருந்தார்கள் 
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.


" இதுவே தமிழின் சிறப்பு.."

(அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.)

அனந்தனே 
அசுரர்களை 
அழித்து,
அன்பர்களுக்கு 
அருள 
அயோத்தி 
அரசனாக 
அவதரித்தான்.
அப்போது 
அரிக்கு 
அரணாக 
அரசனின் 
அம்சமாக 
அனுமனும் 
அவதரித்ததாக
அறிகிறோம். 
அன்று 
அஞ்சனை 
அவனிக்கு
அளித்த 
அன்பளிப்பு 
அல்லவா 
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை 
அரவணைத்து 
அருளும் 
அருட்செல்வன்!
அயோத்தி 
அடலேறு,
அம்மிதிலை 
அரசவையில் 
அரசனின் 
அரியவில்லை 
அடக்கி, 
அன்பும்
அடக்கமும் 
அங்கங்களாக 
அமைந்த 
அழகியை
அடைந்தான் .
அரியணையில் 
அமரும் 
அருகதை 
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க 
அந்தோ !
அக்கைகேயி 
அசூயையால் 
அயோத்தி 
அரசனுக்கும்
அடங்காமல் 
அநியாயமாக 
அவனை 
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும் 
அபாயம்!
அரக்கர்களின் 
அரசன் ,
அன்னையின் 
அழகால் 
அறிவிழந்து 
அபலையை
அபகரித்தான்
அங்கேயும் 
அபாயம்!
அரக்கர்களின் 
அரசன் ,
அன்னையின்
அழகால் 
அறிவிழந்து 
அபலையை
அபகரித்தான்
அந்த 
அடியார்களில் 
அருகதையுள்ள 
அன்பனை
அரசனாக 
அரியணையில் 
அமர்த்தினர்.
அடுத்து 
அன்னைக்காக 
அவ்வானரர் 
அனைவரும்
அவனியில் 
அங்குமிங்கும் 
அலைந்தனர், 
அலசினர்.
அனுமன், 
அலைகடலை 
அலட்சியமாக 
அடியெடுத்து
அளந்து 
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின் 
அடியில் ,
அரக்கிகள் 
அயர்ந்திருக்க
அன்னையை 
அடிபணிந்து 
அண்ணலின்
அடையாளமாகிய 
அக்கணையாழியை 
அவளிடம்
அளித்தான்
அன்னை 
அனுபவித்த 
அளவற்ற 
அவதிகள்
அநேகமாக 
அணைந்தன.
அன்னையின் 
அன்பையும்
அருளாசியையும் 
அக்கணமே 
அடைந்தான் 
அனுமன்.
அடுத்து, 
அரக்கர்களை 
அலறடித்து , 
அவர்களின்
அரண்களை , 
அகந்தைகளை 
அடியோடு 
அக்கினியால்
அழித்த 
அனுமனின் 
அட்டகாசம் , 
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன் 
அலைகடலின் 
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான 
அணையை
அமைத்து,
அக்கரையை 
அடைந்தான்.
அரக்கன் 
அத்தசமுகனை 
அமரில் 
அயனின்
அஸ்திரத்தால் 
அழித்தான்.
அக்கினியில் 
அயராமல் 
அர்பணித்த 
அன்னை
அவள் 
அதி 
அற்புதமாய் 
அண்ணலை 
அடைந்தாள்.
அன்னையுடன் 
அயோத்தியை 
அடைந்து
அரியணையில் 
அமர்ந்து 
அருளினான்
அண்ணல் . 
அனந்தராமனின் 
அவதார
அருங்கதை 
அகரத்திலேய 
அடுக்கடுக்காக 
அமைந்ததும் 
அனுமனின் 
அருளாலே.

• 

ஸ்மைல் ப்ளீஸ்  (கொஞ்சம் மொக்கைதான் முடிஞ்சா சிரிங்க.. இல்லைன்னா விட்டுடுங்க.)

☑ டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
  எந்த பாட்டுக்கு?
......................................................
🔘 ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗 நோயோடதான்!
.......................................................
☑ தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
  அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
....................................................................
🔘 டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗 கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
.....................................................................
☑ டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி  வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
....................................................................
🔘 என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! 
🔗 பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
........................................................................
☑ படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗 புக்கை மூடிடுவேன்!
........................................................................
🔘 காலில் என்ன காயம்?
🔗 செருப்பு கடித்து விட்டது
🔗 பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!
..............................................................
☑ குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗 தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!
.......................................................................
🔘 இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗 என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
...........................................................................
☑ டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗 என்னிடம் சுத்தமா இல்ல
🔗 பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
....................................................................
🔘 இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗 கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
..............................................................
☑ சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.ஏ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
.................................................................
🔘 இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
.....................................................................
☑ மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

No comments:

Post a Comment