Saturday 14 October 2017

படித்ததில் ரசித்தது



"என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு,  என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி "


"டொக் டொக்"

"அம்மா.. யாரோ வாசல்ல..!"

"அது டேபிள்மேட்ரா.."

"டேபிள்மேட்டா? அப்பாம்மா"

"அது உங்கப்பாதான் .....!

“ 'ஏன் லேட்டு?'ன்னு கேட்டா பதினெட்டு விதமான ஆங்கிள்ல கதை சொல்லுவாரு.  அதான் அவருக்கு டேபிள்மேட்னு பேர் வச்சிருக்கேன்..."


திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள். அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.


மகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.

அப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".

அப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.



   ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். யார் அந்த முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று. அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். 

  அப்போது ஒருவன் மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை அடைந்தான்.
அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 

  உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து," என்னை யார் பின்னல் இருந்து குளத்தினுள் தள்ளியது?" என்று கேட்டான். கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்


மனைவியை ஆங்கிலத்தில் wife  என்று அழைப்பதன் அர்த்தம் இதுதான்
‘Without information fight everytime ’  இதைத்தான் ஆங்கிலேயர்கள் சுருக்கி wife என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தனர்எப்ப வேணாலும் ஏழரை 




உலகத்துல 3 விஷயம் முடியாது.

1) தலைமுடியை எண்ண முடியாது
2) கண்களை சோப்பால் கழுவ முடியாது
3) நாக்கை வெளிய நீட்டிவிட்டு மூச்சுவிட முடியாது
உடனே நாக்கை வெளிய விட்டு மூச்சுவிட்டு பாக்குற உங்களயெல்லாம் திருத்தவே முடியாது.


2 comments: