Sunday 8 October 2017

அடடே – 1



'என்னைத் தவிர யாரை கட்டியிருந்தாலும்  உன் கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாதுபெரும்பாலான கணவன் மனைவிக்கு இருக்கும் ஒன்று பட்ட எண்ணம் இதுவே.
  

நம்ம தமிழ்நாட்டில் பொறுத்தவரை  எல்லாரும் ஹெல்மெட் அணிவது போலீஸுக்கு பயந்து தானே, தவிர உயிருக்கு பயந்து அல்ல.


மருத்துவமனையில் உறவினரை நலம் விசாரிப்பதற்கு நாலு நல்ல வார்த்தைகளை விட, நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய் இருக்கிறது.
  

ஒரு வருடத்திற்கு முன்பு மணக்கோலத்தில்  நண்பனை  சிரிப்போடும், அவன் மனைவியை  கண்ணீரோடும் பார்த்த காட்சியில், ஓராண்டுக்குப் பின், கண்ணீர் இடம் மாறியிருந்த்து.
  

பெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும்ஆனால் ஆண்கள் ஒரு நாள் சமைக்கிற பொருளை வைத்து பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க .
  

காலையில எழுந்ததும்  Whatsapp ஓபன் பன்ற மாதிரி, படிக்கும் போது பாட புத்தகத்தை  ஓபன் பண்ணியிருந்தா சிலர் உருப்பட்டுருப்பாங்க.
  

ஓட்டலில் சர்வர்  என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியலைஇதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு  கேட்டா எப்படி சொல்து ?
  

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள்  பிள்ளைகளை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்பின்னர், அவங்க கை வலிக்குதுனு  பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்
  

ஊருக்கே குறி சொல்லும் பூசாரி, ATM வாசல நின்னு, பணம் இருக்கான்னு இன்னொருத்தர்கிட்ட கேட்கிறார்.
  

இரவு கணவனை சாப்பிடவாங்கன்னு மனைவி அழைத்தால், சீரியல்  முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.


பந்தி பரிமாறுபவர் நமக்கு நன்கு தெரிந்தவராயின் மனதிற்குள் வரும் சந்தோம் அலாதியானது.
  

மனைவியை சமாதானப்படுத்த பீரோவில் இருக்கும் சேலையை பேக் செய்து கிஃப்டா கொடுத்துடணும். அது பழைய சேலைன்னு மனைவியால கண்டுபிடிக்க முடியாது. காரணம், பீரோ முழுக்க அவ்வளவு சேலைகள்.


பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம், அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம்!
  

ஒரு பெண்  ஒரு நிமிடத்தில் சேலை செலக்ட் செய்கிறாள் என்றால்அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம்.


நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி  குலுங்கி போக ஆரம்பிச்சா,  நாம பஸ்ஸ்டாண்டுக்கு உள்ள வந்துட்டோம்னு அர்த்தம்.


முன்பு ஆண்களுக்கு குட்டிச்சுவர், டீக்கடை பெஞ்ச்! பெண்களுக்கு வீட்டுத் திண்ணை, குழாயடி ! ஆனால், எல்லோருக்குமானது இப்போ வாட்ஸப் ஆயிடுச்சு!
  

பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால், து ஃபோட்டோகிராபரிடம் மட்டும்தான்.
  

பேசாமல் இருந்தால்'ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?' என்று  நச்சரிப்பதும், பேசினால், சண்டைக்கு இழுப்பதும் மனைவியின் இயல்பு!!


புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை வசப்படும்.

2 comments:

  1. சிம்பிள் எல்லாம் ரசித்து புன்னகைக்கும் படி

    ReplyDelete