Sunday 22 February 2015

தெரியுமா இவரை - 1 முசோலினி

உலகைப் உலுக்கிய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக இருந்தவர் முசோலினி. இவர் 1922-ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகாலம் சர்வாதிகாரியாக இத்தாலியை ஆட்டிப்படைத்தார். இவரின் நெருங்கிய நண்பர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். சிறுவயதில் ஓவியனாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஹிட்லர். ஆனால், விதி வேறு மாதிரியாக விளையாடி, உலக வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டது. இதேபோன்று, பள்ளிக்கூட ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய முசோலினி, சர்வாதிகாரியாக மாறினதும் விதியின் விளையாட்டுக்களின் ஒன்று. 

இத்தாலியில் 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி முசோலினி பிறந்தார். இவரின் தந்தை ஒரு கொல்லர். சொந்தமாக இரும்புப் பட்டறை ஒன்று நடத்திக்கொண்டிருந்தார். தாயார் பள்ளிக்கூட ஆசிரியை.
இத்தாலில் மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்று முசோலினியின் தந்தை, வருவோர் போவோரிடம் எல்லாம் டீக்கடை அரசியல் பேசும் வழக்கம் உள்ளவர். அவரைப் பார்த்துதான், முசோலினிக்கு அரசியல் ஆர்வம் பிறந்திருக்க வேண்டும். பள்ளிப்படிப்பை முடித்ததும், சிறிது காலம், பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்தார். அது போரடிக்கவே, அந்த வேலையை விட்டுவிட்டு, ராணுவத்தில் சேர்ந்தார். அதுவும் போரடிக்க, பத்திரிகை துறைக்குள் நுழைந்தார். பேச்சுத் திறமையும், எழுத்துத் திறமையும் கொண்ட முசோலினிக்கு லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், ஆங்கிலம் 
ஆகிய மொழிகளும் தெரியும். 

பத்திரிகைகளில், காரசாரமாக அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் விவாதங்களையும் பரபரப்பையும் உண்டாக்கின. அவர் எழுதிய கட்டுரைக்காக ஓராண்டு சிறை தண்டனையைக் கூட அவர் அனுபவித்திருக்கிறார். இந்த காலக்கட்டத்தில், அதாவது 1914 ஆண்டு முதலாம் உலகப் போர் மூண்டது. பத்திரிகைத்துறையை விட்டு வெளியேறி முசோலினி மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார். இதே காலக்கட்டத்தில்தான், ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார். 

பின்னர், 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டது. இப்போது, ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தார்கள். முதலில், இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க, பின்னர், தோல்விகள் தொடர்ந்து, போரின் போக்கு மாறியது. போரில் தோற்ற பின்னர், ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயற்சித்தார். தனது காதலி கிளாரா பெட்டாசியையும் உடன் அழைத்துச் சென்றார். 

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றபோது, புரட்சிப்படை அவர்களை மடக்கியது. முசோலினியை அடையாளம் கண்டுபிடித்த அவர்கள், காதலியோடு சேர்த்து வேனில் இருந்து அவரை கீழே இறக்கினார்கள். முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த முசோலினி, அவர்கள் முன்பாக மண்டியிட்டு, 'என்னை கொன்னுடாதீங்க' என்று கெஞ்ச ஆரம்பித்தாராம். 

ஆனால், அவர் மீது இரக்கம் காட்டாத புரட்சிப் படையினர்,, துப்பாக்கியால் முசோலினியையும், காதலியையும் சல்லடையாக துளைத்து, அவர்களது உடல்களை மிலான் நகரின் நடுவீதியில போட்டுவிட்டுச் சென்றார்கள். அந்த உடல்களைபொதுமக்கள், காறி துப்புயும், சிறுநீர் கழிச்சும் அவமானப்படுத்தினார்கள். பின்னர், அந்த உடல்கள் மின்கம்பம் ஒன்றில் தலை கீழாக கட்டி தொங்கவிடப்பட்டது. 

சர்வாதிகாரிகளின் கடைசி காலம் மிகவும் கொடூரமானதாவே இருக்கும் என்பதற்கு முசோலினி மேலும் ஒரு உதாரணம். 

No comments:

Post a Comment