Friday 13 February 2015

எழுத்தாளர்கள்


'குழந்தைகள் தெய்வத்துக்குச் சமமானவர்கள்' என்ற கோட்பாட்டைத் தவறு என, தனது நாவலில் சுட்டிக்காட்டியதற்காக, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் இங்கிலாந்தைச் சேர்ந்த 'வில்லியம் கோல்டிஸ்' (1983) ஆவார். 

ஆங்கில எழுத்தாளர் 'ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ச'னுக்குத் திருமணம் நடைபெற்றது. அவர் தம் மனைவியோடு பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் ஒரு பிரசித்தி பெற்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தின் பெயர், 'ஒரு கழுதையோடு சுற்றுப் பயணம்' 

இலக்கியத்திற்கான நோபல் பரிசை 3 பேர் மறுத்திருக்கிறார்கள். முதலாவதாக பெர்னார்ட் ஷா, பரிசை முதலில் மறுத்தாலும், பின்னர், பிறர் வேண்டுகோளுக்கிணங்க அதனை வாங்கிய அவர், பரிசுத் தொகை முழுவதையும் ஸ்வீடிஸ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பதற்காக நன்கொடையாக கொடுத்துவிட்டார். இறுதிவரை வாங்காத மற்ற இருவர், ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் போஸ்டர், பிரெஞ்சு எழுத்தாளர் ஜூன்பாஸ் சார்த்ரே. 

தனது முதல் நாவலுக்கே புக்கர் விருதுபெற்ற முதல் இந்திய பெண் எழுத்தாளர், அருந்ததி ராய். இவரது தாய்மொழி மலையாளம். ஆனால், அவர் ஆங்கிலத்தில் நாவலை எழுதினார். 

ஞானபீட விருதுபெற்ற பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி. வங்கமொழி எழுத்தாளரான இவர், தமது 67 வது வயதில் இப்பரிசை பெற்றார். 85 வது வயதில் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றார். 

உலகின் முதல் துப்பறியும் நாவலை எழுதியவர் (1841) எட்கர் ஆலன்போ ஆவார். 

பத்திரிகைகளில் முதன் முதலில் தொடர்கதை எழுதும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர், உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் 'சார்லஸ் டிக்கன்ஸ்' 

இயான் பிளமிங், டானியல் டீபோ, சாமர்செட் மாம் ஆகிய மூவரும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இவர்கள் மூன்றுபேரும் உளவாளிகளாக பணிபுரிந்த பின்னர், எழுத்தாளர்களாகி புகழ்பெற்றனர். இந்த மூவரில் இயான் பிளமிங் தன்னுடைய அனுபவங்களையும், கற்பனைகளையும் கலந்து எழுதிய 13 ஜேம்ஸ் பாண்ட் கதைகள் உலகப் புகழ்பெற்றன. டானியல் டீபோ நாவலின் தந்தையாகவும், சாமர்செட் மாம் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களாகவும் புகழ்பெற்றனர். 

கரன்சி நோட்டுகளில் எழுத்தாளர்களின் உருவங்களைப் பொறித்து, அவர்களை பெருமைப்படுத்திய நாடு, ஜப்பான். 

டார்ஜான் என்னும் காட்டு மனிதனை உருவாக்கி, அவனைப் பற்றிய பல சாகசக் கதைகளை எழுதியவர் எட்கர் ரைஸ் பர்ரோஸ். இவரது டார்ஜான் கதைகள் 56 மொழிகளில் வெளியாகியுள்ளன. இவருக்கு 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகையில் போர்க்களத்திலிருந்து செய்தி அனுப்பும் நிருபர் வேலை கிடைத்தது. முக்கிய ஹவாய் துறைமுகமான 'பியர்ல்' துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை நேரில் பார்த்த மனிதர்களில் இவரும் ஒருவர். 
போர்ச் செய்திகளைக் கொண்டு அவர் பல புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கியுள்ளார். 

தன்னுடைய படைப்புக்கள் அனைத்தையும் பென்சிலாலேயே எழுதியவர் 'எர்னஸ்ட் ஹமிங்வே. மீன் பிடிப்பதற்காக அவர் கடலுக்குள் நீண்ட து£ரம் பயணம் மேற்கொள்ளும் பழக்கமுடையவர். பின்னாளில், மனநிலை சரியில்லாமல் இருந்து, தன்னுடைய துப்பாக்கியாலேயே தன்னை சுட்டு, தற்கொலை செய்துகொண்டார். 

'பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழின் முதல் நாவல். இதை மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879-ம் ஆண்டு எழுதினார். இந்திய மொழிகளில் வெளியான முதல் நாவல் இதுவே. இந்தியில் 1882-ம் ஆண்டு, லாலா ஸ்ரீநிவாஸ் தாஸ் என்பவர் எழுதிய 'பரிக்ஷா குரு' என்ற முதல் நாவல் வெளியானது. 

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் இயற்பெயர், சாமுவேல் லாஸ்கர்ன் கிளமெண்ட். சிறுவயதில் படகோட்டியாக மிஸிஸிபி நதியில் இவர் வேலைபார்த்தார். அப்போது, படகோட்டிகள் உரத்த குரலில் ஆற்றின் ஆழத்தை தெரிவிக்க, 'மார்க் ஒன், மார்க் ட்வைன்' என்று கூறுவார்கள். உள்நாட்டு போரின்போது, ஆற்று போக்குவரத்து தடை செய்யப்பட்டது. எனவே, இவர் பேனாவை பிடித்தார். அப்போது, தான் அடிக்கடி கேட்ட 'மார்க் ட்வைன்' என்ற வார்த்தையை தனது புனைப்பெயராக வைத்துக் கொண்டார். 

ஆங்கில இலக்கியத்தின் தந்தையாக மதிக்கப்படுபவர் 'ஜியாஃப்ரே சாசர்' ஆவார். இவர் 14-ம் நூற்றாண்டிலேயே  கிராமங்களில் திரிந்து நாட்டுப்புறக் கதைகளை தொகுத்து வைத்திருக்கிறார். 

ஷெர்லாக் ஹோம்ஸ் எனற் துப்பறியும் கதாப்பாத்திரத்தைப் படைத்து புகழ்பெற்றவர் ஆர்தர் கானன்டாயில். இவர் ஒரு நாவலில் ஷெர்லாக் ஹோம்ஸ் மலையுச்சியிலிருந்து விழுந்து உயிரை விடுவதாகக் கதையை முடித்திருந்தார். ஷெர்லாக் ஹோம்சின் உயிரை மீட்க வேண்டும்  என உரத்த கோரிக்கை எழுந்தது. பாராளுமன்றத்திலும் இதுபற்றி விவாதம் எழுந்தது. அவரை உயிர்ப்பிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு எழுந்தாளருக்கு கோரிக்கை விடுத்தது. வேறு வழியின்றி, ஆசிரியர், இறந்துவிட்ட தனது கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்தார். அவர் வாழ்ந்ததாக ஆசிரியர் வர்ணித்திருந்த வீட்டை நகரசபை ஒரு நினைவிடமாக மாற்றியது. 

No comments:

Post a Comment