Sunday 8 February 2015

தண்ணீர்.. தண்ணீர்


தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் நோய்களுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், கழிவுகள் வெளியேறி வயிறு சுத்தமாவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.  

தண்ணீர் உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.  இதனால் உடல் நச்சுக்கள் இன்றி சுத்தமாக இருக்கும். கழிவுகள் வெளியேறுவதால், நன்றாக பசி எடுக்கும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அடிக்கடி தலைவலி ஏற்படும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, தலைவலி குறையும்.

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உணவு விரைவில் செரிமானமடையும்..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிப்பதுடன்  ரத்தத்தில் ஆக்ஸிஜனும் அதிகரிக்கும். இதனால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறையும்..

குடல் சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமம்  அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, நோய்கள் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.


No comments:

Post a Comment